Skip to main content

Posts

டவுசர் அக்காவுக்கு வீர வணக்கம்

1990 களில் எங்களூர் பகுதியில் டவுசர் அக்கா மிகப் பிரபலம். சாயங்காலம் ஆகிவிட்டால் டவுசரோடு காணப்படுவார். ஆகையால் அவருக்கு அந்தப் பெயர் வாய்த்துவிட்டது. இன்றைக்குப் பெண்கள் டவுசர் அணிவது நகரங்களில் இயல்பாகிவிட்டது. கிராமங்களுக்கு அது இன்னும் முழுமையாக வந்து சேரவில்லை. ஆனால் நாற்பது வருடங்களுக்கு முன்னால் கிராமங்களில் டவுசர் அணிவது எப்படி இருந்திருக்கும் என்பதை நினைத்துப் பார்த்தோமானால் இன்றைக்கும் டவுசர் அக்காவை வியக்காமல் இருக்க முடியாது. கை வைத்த பனியனும் டவுசரும் அணிந்திருக்கும் அக்கா எப்போதும் டவுசர் பையில் நான்கு அங்குல நீளத்தில் கைபிடி தெரியும் படி கத்தி ஒன்றை வைத்திருப்பார். பகல் நேரங்களில் சேலையில் இருந்தாலும் டவுசரும் கத்தியும் உள்ளுக்குள் இருக்கத்தான் செய்யும். ஆண்கள் பெண்கள் யாராக இருந்தாலும் டவுசர் அக்காவுக்கு ‘ மாமா – அக்கா ’ தான். வாய்விட்டு சிரிக்கச் சிரிக்கப் பேசுவாள். கூலிக்கென்று வேலைக்குப் போக மாட்டாள். சம்பாதிப்பது பற்றி யோசிப்பதே கிடையாது. குடும்பம் கிடையாது. யார் வீட்டில் கொடுத்தாலும் வாங்கிச் சாப்பிட்டுக் கொள்வாள். யாரேனும் தோட்ட வேலைக்குக் கூப்பிட்டால் ‘ போங்க … வ...

ஹரிஜனங்களும் சதபத பிராமண கதைகளும்

ஹரிஜனங்களும் சதபத பிராமண கதைகளும் 1933 இல் எம்.ஆர்.ஜம்புநாதன் எழுதிய நூல் சதபத பிராமணம். வேதங்கள் , உபநிடதங்கள் ஆகியவற்றின் செய்திகளை விளக்கும் வண்ணம் எதையாவது எழுதும் வழக்கமுடைய ஜம்புநாதன் , யசூர் வேதத்தின் சில பகுதிகளை விளக்கும் முகமாக சதபத பிராமணத்தை எழுதியிருக்கிறார். அதில் 88 விளக்கக் குறிப்புகள் இடம் பெற்றிருக்கின்றன. அவற்றை அவர் ‘ கதைகள் ’ என்கிறார். உண்மையில் அவற்றைக் கதைகள் என்று சொல்வது கூட ரெம்ப அதிகம் தான்.  இந்நூலை அவர் ஹரி ஜனங்களுக்குச் சமர்ப்பித்திருக்கிறார். அதற்கான காரணத்தை அவரே விவரிக்கிறார். நூலில் ருத்திரனின் இயல்புகளை விவரிக்கும் அவர் ‘ ருத்திரனின் குணங்கள் அனைத்தும் ஹரிஜனங்களிடம் உள்ளது ’ என்பதாக அரிய கண்டுபிடிப்பை நிகழ்த்துகிறார். இந்த ஒப்பீட்டின் வழி அவரது அறிவின் அளவு துலக்கப்பட்டிருக்கிறது. இவற்றையெல்லாம் தாண்டி நூல் எதற்காக எழுதப்பட்டிருக்கும் என யோசித்தால் ஹரிஜனங்களை இந்துக்களாகச் சித்திரிப்பதே நோக்கமாக இருந்திருக்க வேண்டும் என்பது தெரிகிறது. சான்றாக , ருத்திரனுக்கும் ஹரிஜனங்களுக்கும் அவர் சொல்லும் ஒற்றுமைக் காரணங்கள் சிலவற்றைப் பார்க்கலாம். உலகம் ...

அயோத்திதாசரின் விடுதலைப் பெளத்தம்

  இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தமிழ்ச் சமூகத்தின் அறிவுஜீவித அடையாளமாகத் திகழும் அயோத்திதாசர் , அக்காலத்தின் வாழ்க்கைச் சூழலுக்கும் நிலவிய அரசியல் தன்மைக்கும் ஏற்ப பெளத்தத்தை முன்வைத்தவர் . அவர் காலத்திய வரலாற்றுத் திரிபுகளை அம்பலப்படுத்தினார் . அதற்காக சடங்குகள் , பழக்க வழக்கங்கள் , இலக்கிய இலக்கணங்கள் , நிகண்டுகள் உள்ள்ளிட்ட எழுத்தாவணங்கள் ஆகியவற்றைப் பயன்படுத்தினார் . வரலாற்றைத் திரிபு செய்தவர்கள் பயன்கொண்ட சான்றுகளையே அயோத்திதாசரும் பயன்கொண்டு அதன் மீது வேறொரு வாசிப்பை நிகழ்த்தினார் . ஒரு வாசிப்பி ன் வழி வரலாற்றை எழுதுவதற்கும் புரிந்துகொள்வதற்குமான அரசியலை வெளிப்படுத்தியதுடன் தனது அரசியல் நிலைப்பாட்டையும் முன்வைத்தார் . தமிழ்ச்சமூகத்தை ஆதி திராவிடர் , திராவிடர் எனப் பகுத்து ஆதி திராவிடர்களைப் பூர்வப் பெளத்தர்கள் என்றார் . அதற்காக அவர் முன் வைத்த வாதங்கள் பூர்விகமான மண்ணின் மணம் கொண்டவை என்பது குறிப்பிடத்தக்கது . அயோத்திதாசர் அயோத்திதாசரின் காலத்தில் வரலாறு , பண்பாடு , இலக்கியம் , தத்துவம் ஆகியவற்றை ஐரோப்பிய வெளிச்சத்தில் பார்க்கும் போக்கு உருவாகிவிட்டிருந்தது . இந்திய...

தலித் அல்லாத குரலில் தலித் எழுத்து

  தலித் எழுத்துக்களைப் பொறுத்த மட்டில் பழைய தத்துவம் , கொள்கை , கோட்பாடு முதலிய வஸ்துகளை இனி கறாராகக் கடைப்பிடிக்க வேண்டிய அவசியமில்லை . உலக அளவிலான பிராந்திய எழுத்துக்களில் அப்படி யாரும் கடைப்பிடித்ததாகவும் நம்பிக்கைக்குரிய தரவுகள் இல்லை . அந்தப் பொழுதுக்கு எது சரியோ அதை நியாயப்படுத்தும் மனம் தான் எல்லோருக்கும் வாய்த்திருக்கிறது . இலக்கியமும் இலக்கியத்திலும் அப்படித்தான் . நடப்புக்காலத்தில் எப்படிப்பட்ட எழுத்து சமூகத்தின் இயங்கியலைத் தீர்மானிக்கிறதோ அதே மாதிரியான எழுத்தை எழுதிவிட வேண்டும் . அது தான் அன்றைய பொழுதுக்கு ப் பயனளிக்கும் விஷயம் . இலக்கியம் ஒரு மாயவாத புளகாங்கிதச் செயல்பாடு என்பதைப் புரிந்துகொள்ளும் அதேசமயம் அதற்கு ஏற்கனவே இருக்கும் சட்டகத்தை மாற்றிவிடக் கூடிய தீர்க்கமான வல்லமை உண்டு என்பதையும் கணக்கில் கொண்டு புதிய எழுத்து முறைமைக்கு அணியமாக வேண்டும். பாபாசாகேப் அம்பேத்கர் இன்று தலித் இலக்கியத்தைப் பொறுத்தவரை தலி த் அல்லாத குர லில் தலித் எழுத்தை ஒரு தலித் எழுத வேண்டும் . தலித் குரலே இல்லாமல் தலித் இலக்கியம் இருக்க முடியுமா என்றால் இருக்க முடியும் என்பதே எனது பதில். ...

தமிழர் பண்பாட்டு, வீரவிளையாட்டென்னும் ஜல்லிக்கட்டு – சில விவாதக் குறிப்புகள் - ஞா,குருசாமி

  16.01.2013 அன்று மதியம் முகநூலை நான் பார்த்துக் கொண்டிருந்தபோது ஜல்லிக்கட்டு பற்றி லிவிங் ஸ்மைல் வித்யா வினவியிருந்த வினா ஒன்று கண்ணில் பட்டது. தமிழர்களின் விளையாட்டுகள் பற்றி நிறைய யோசிக்க வைப்பதாக அந்தக் கேள்வி அமைந்திருந்தது. ‘ ஆண்களால் மட்டுமே விளையாடப்படும் குறிப்பிட்ட மதத்தைச் சார்ந்த , குறிப்பிட்ட சாதியினரால் , சில குறிப்பிட்ட இடங்களில் மட்டுமே விளையாடப்படும் ஒரு விளையாட்டு எப்படித் தமிழர் விளையாட்டாகும் ?’ என்பதுதான் அந்தக் கேள்வி. தமிழர் யார் ? என்று வரையறுப்பதில் ஏராளமான சிக்கல்கள் உண்டு. வரையறைகள் முன்வைக்கப்படும் போது வரையறைக்கு வெளியில் இருப்பவர்களுக்கு அது ஆத்திரம் ஊட்டுவதாகவே அமையும். தர்மபுரி கலவரத்திற்குப் பிறகு சாதி குறித்த பார்வைகள் சில மட்டங்களில் கூர் தீட்டப்படும் வேளையில் தமிழர் பற்றிய வரையறை உருவாக்கம் எளிதானதல்ல. வரும்காலம் வரையறையை அவசியப்படுத்துவதாகவும் அமையலாம். தமிழ்த்தேசியம் வேகமடைந்திருக்கும் இன்று அதற்குள் நின்று ஆதாயம் தேடுகின்ற ஒவ்வொருவரும் தம்மை தமிழர் என்கின்றனர். ஆதாயம் , பாதுகாப்பு , அரசியல் முன்னகர்வு , பண்பாட்டு மீட்டெடுப்பு என்கிற நிலைக...

சாங்கிய காரிகை என்னும் தத்துவ நூல்

            சாங்கிய காரிகை என்னும் தத்துவ நூல் ஞா.குருசாமி வடமொழி என்பது சமஸ்கிருதம் , பிராகிருதம் , பாலி ஆகிய மூன்று மொழிகளையும் குறிக்கும் . மூன்று மொழிகளில் இருந்து தமிழில் வழங்கும் சொற்களை வடமொழிச் சொற்கள் என்று குறிப்பிடுவது தமிழில் வழக்கம் . அப்படி மூன்று மொழிகளின் சொற்களைத் தமிழில் பொதுப்பெயர்ச் சொல்லால் குறிப்பிடுவது பல நேரங்களில் தவறாகவும் குழப்பத்தை ஏற்படுத்துவதாகவும் இருக்கிறது . ஏன் இது நேர்ந்தது என்று தெரியவில்லை .  நெல்லை க . சுப்பிரமணியன் எழுதிய ‘ சாங்கியக் காரிகை ’ என்னும் நூல் 1980 ஆம் ஆண்டு வெளியானது . இந்நூலுக்கான அணிந்துரையை இலங்கை , சிதம்பரா கல்லூரி ஆங்கிலத் துறைப் பேராசிரியர் கே . எஸ் . கிருஷ்ண ஐயங்கார் ஆங்கிலத்தில்   எழுதியிருக்கிறார் . அதில் கடைசிப் பத்தி ‘The original sutra in sanskirt have been carefully compared with Tamil rendering and I am glad to state that the translate brings out the meaning clearly’ என்பதாக அமைந்திருக்கிறது . இதைத் தமிழுக்கு மொழிபெயர்த்த பா . வளன் அரசு sanskirt என்பதற்கு வடமொழி எனப் பெயர...

புலவர் தோ. ஜம்புகுமாரன் அவர்கள் எழுதியுள்ள அவரது வாசிப்பு அனுபவம்

  எனது ' தமிழ் இலக்கிய வரலாறு ( பல புதிய குறிப்புகளுடன் 1970 முதல் )' என்னும் நூலுக்கு சமணப் பேரறிஞர் புலவர் தோ . ஜம்புகுமாரன் அவர்கள் எழுதியுள்ள அவரது வாசிப்பு அனுபவம் தோ .  ஜம்புகுமாரன் அன்பிற்கினிய நண்பரீர் ! ஆன்மநலம் விளைக ! அரியவாம் நற்காட்சி பொலிக ! தங்களின் அரிய படைப்பான தமிழிலக்கிய வரலாற்று நூலை இன்றுதான் வாசித்து முடித்தேன் . 1970 ஆம் ஆண்டு முதல் வெளிவந்த தமிழிலக்கிய நூல்களின் பெரும் பரப்பினை தங்களின் நுண்மாண் நுழைபுலன் என்னும் அளவுகோலைக் கொண்டு அளந்து காட்டி விட்டீர்கள் . சிறுவர் இலக்கியம் தொடங்கி இணைய இலக்கியம் வரையிலான இலக்கியங்களை ஆய்ந்து அறிய தாங்கள் எடுத்துக்கொண்டுள்ள பேருழைப்பை நினைத்துப்பார்க்கவே பிரமிப்பாக உள்ளது . சமயங்கள் வளர்த்த இலக்கியங்களின் மதிப்பீடுகள் அனைத்தும் நடுநிலைப்பான்மையில் விருப்புவெறுப்பின்றி செய்திகளை அடுக்கிக்கொண்டே செல்லும் அழகும் தம்கருத்தை வலியுறுத்திக் கூறாமல் காலச்சூழலின் அழுத்தத்தை மேம்போக்காகச் சுட்டி காரணம் இவ்வாறு இருக்கலாம் என நாகரிகமாகச் சொல்...