விருதுநகர்
மாவட்டம், வத்திராயிருப்புக்கு அருகில் உள்ள
அக்கனாபுரம் எனது சொந்த கிராமம். எனது பெற்றோர் கு.ஞானப்பிரகாசம், ம.அருளாயி. எனது தொடக்கக் கல்வியை
தைலாபுரம் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளியிலும் இடைநிலைக்கல்வியை தைலாபுரம் அரசு
மேல்நிலைப்பள்ளியிலும் சுந்தரபாண்டியம் அரசு மேல்நிலைப்பள்ளியிலும் பெற்றேன்.
மதுரை செந்தமிழ்க்கல்லூரியில் இளம் இலக்கியமும் (பி.லிட்), மதுரை, மதுரைக் கல்லூரியில் முதுகலை தமிழ் இலக்கியமும் கற்றேன்.
மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் இளநிலை மற்றும் முனைவர் பட்டம். 18.06.2012 முதல் மதுரை மாவட்டம், கருமாத்தூரில் உள்ள அருள் ஆனந்தர்
கல்லூரியின் தமிழ்த்துறையில் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறேன். கவிதை
எழுதுவதில் ஆர்வம் இருப்பினும் ஆய்வுகளில் கவனம் செலுத்துவதில் பெரு விருப்பம்.
இருபது ஆண்டுகளாக மாற்றுச் சிந்தனையைச் சார்ந்து இலக்கியம், இலக்கணம், சமுதாயம் குறித்து பேசியும் எழுதியும் வருகிறேன்.
நானூறுக்கு மேற்பட்ட சமுதாயம், இலக்கியம், பொருளியல் சார்ந்த கட்டுரைகளை
எழுதியுள்ளேன். தொல்காப்பியத்தில் பொருளியல் பெறும் இடம், புறனடைக் கோட்பாடு - தொல்காப்பியர் மரபு, புறனடைக் கோட்பாடு - வீரசோழிய மரபு, தமிழ் இலக்கிய வரலாறு (பல புதிய
குறிப்புகளுடன் 1970 முதல்...), அவதூறுகளும் புனிதப்படுத்தல்களும் நீர் - நிலம் - சாதி - சாஸ்திரம்' முதலிய நூல்கள் எழுதியுள்ளேன்.
இலக்கியக் கட்டுரை என்றால் வரையறுக்கப்பட்ட வடிவத்தோடும் தேர்ந்தெடுக்கப்பட்ட சொற்களின் சேர்க்கையோடும் எழுதப்படுவது என்கிற நம்பிக்கை பரவலாக இருந்து வருகிறது . இந்தச் சட்டகத்திற்குள் சிக்காமல் ஜனரஞ்சகமாக , அதே சமயம் புனைவிற்கான மொழியில் அமைந்திருக்கிறது ‘ ஷெர்லாக் ஹோம்ஸ் வாழ்ந்த வீடு ’. இராமனாதனின் இந்த நூலில் இலக்கியம் , திரை , ஆளுமைகள் , அனுபவங்கள் என்னும் பகுப்பின் கீழ் 28 கட்டுரைகள் இருக்கின்றன . அவை யாவும் காலச்சுவடு உள்ளிட்ட இதழ்களில் வெளி வந்தவை . இந்நூலை வாசிக்கிறவர்கள் அவரவர் வாசிப்பு , அனுபவம் சார்ந்து பொருத்திப் பார்த்துக் கொள்ள முடியும் . நூலாசிரியர் லண்டனில் உள்ள ஷெர்லாக் ஹோம்ஸ் அருங்காட்சியகத்திற்குச் சென்ற அனுபவத்தை வைத்துக்கொண்டு எழுதப்பட்ட ‘ ஷெர்லாக் ஹோம்ஸ் வாழ்ந்த வீடு ’ முதல் கட்டுரையாக இடம் பெற்றிருக்கிறது . ஒரு படைப்பு பல்வேறு அடையாள வேறுபாடுகளைத் தாண்டி வாசிப்பு மனங்களை இணைக்கும் வல்லமை வாய்ந்தது என்பதை ஸ்பானிய மொழியைப் பேசும் ஒரு சிறுவனுடன் தான் உரையாடிய வேடிக்கையான சம்பவத்தை வைத்து விவரித்து இருக்கிறார் . அதாவது அந்தச் சிறுவன் நிறுத்தி நிறுத்தி ஆங்கிலத்தில் இராமன...
Comments