Skip to main content

பயணங்கள்



 

 25.06.2022 அன்று மதுரையில் இருந்து பாபநாசம் சென்று அகத்தியர் அருவியில் குளித்துவிட்டு சொரிமுத்து அய்யனார் கோயில் சென்று பார்த்துவிட்டு வருவதென திட்டம். ரயில் பயணம். அதிகாலையில் ரயிலில் ஜன்னலோரத்தில் உட்கார்ந்து செல்வது அலாதி இன்பம் தான். 

தென்காசி ரயில் நிலையத்தில்  இருந்து பாபநாசம் செல்வதற்கு பழைய பஸ் ஸ்டாண்ட் வரவேண்டும். தென்காசியில் அடிக்கடி பாபநாசத்திற்கு பஸ் இல்லை. ஆகவே அம்பாசமுத்திரம் சென்று அங்கிருந்து பாபநாசம் செல்ல வேண்டும். 

தென்காசியில் காலை உணவு எடுத்துக் கொள்ள வேண்டும் என்றால் பழைய பஸ் ஸ்டாண்ட் அருகில் உள்ள ராஜ் மெஸ் போகலாம். பழைய வீடு தான் அது. அதை ஹோட்டலாக மாற்றி நடத்திக் கொண்டிருக்கிறார்கள். மிகவும் சுவையான டிபன். வீட்டுச் சுவை. 

....

சொரிமுத்து அய்யனார் கோயில் என்னும் விகார்
.......
திருநெல்வேலி மாவட்டம், பாபநாசத்தில் இருந்து காரையார் செல்லும் வழியில் சுமார் 11 கிமீ தொலைவில் உள்ளது சொரிமுத்து அய்யனார் கோவில். இந்த கோயிலின் பெயரே இது ஒரு பிக்கு இருந்த மடமாகவோ அல்லது விகாராகவோ இருந்திருக்கும் என்பதை உறுதிப்படுத்துகின்றது.
கோயில் மண்டபத்தின் நிலைத்தூண்களில் செதுக்கப்பட்ட தாமரையும் யானைகளும் நிறைய காணக் கிடைக்கின்றன. நீறு பூசி, சிவன் கோயிலைப் போல இக்கோயிலின் வழிபாட்டு முறை இருந்தாலும் பார்ப்பனர் தலையீடு இல்லாமல் பார்ப்பனரல்லாதாரின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. சாமியாடி அருள்வாக்கு சொல்கிறார். இக்கோயிலில் புத்தரால் தென்மொழி போதிக்கப்பட்டு தென்னாட்டிற்கு அனுப்பப்பட்டவர் என்பதாக அயோத்திதாசரால் சொல்லப்படும் அகத்தியரும் சங்கிலி பூதத்தாரும் (சங்கம் சேர்ந்திருந்த பூதத்தார்) பரிவார தெய்வமாக வணங்கப்படுகிறார்கள். அகத்தியர் - சங்கிலி பூதனார் தாமரை - யானை - சின்னங்கள், பார்ப்பனர் இல்லாமை - நீறு - சொரி முத்து அய்யனார் என்னும் அடையாளங்கள் அனைத்தும் இத்தலத்தை ஒரு பிக்கு தங்கியிருந்து அறம் போதித்த மடமாகவோ அல்லது ஒரு விகாரையாவோ முன் வைப்பது முக்கியமானது.
அய்யனார் கோயில்களுக்கெல்லாம் தலைமை கோயிலாக இதைக் கருதி வரும் வழக்காற்றின் வழி தமிழகத்தின் தென்பகுதி பிக்குகளுக்கு இக்கோயில் (மடம்) தலைமை இடமாக இருந்திருக்கிறது என்கிற முடிவுக்கு வர முடிகிறது.
இந்தக் கோயிலுக்கு இன்னொரு சிறப்புண்டு. அது என்னவென்றால் வெளிப்படையான ஏராளமான பௌத்த அடையாளங்களை இன்றளவும் சுமந்து கொண்டிருக்கும் தென்தமிழகக் கோயில் இது ஒன்று மட்டுமே.




Comments

Popular posts from this blog

டவுசர் அக்காவுக்கு வீர வணக்கம்

1990 களில் எங்களூர் பகுதியில் டவுசர் அக்கா மிகப் பிரபலம். சாயங்காலம் ஆகிவிட்டால் டவுசரோடு காணப்படுவார். ஆகையால் அவருக்கு அந்தப் பெயர் வாய்த்துவிட்டது. இன்றைக்குப் பெண்கள் டவுசர் அணிவது நகரங்களில் இயல்பாகிவிட்டது. கிராமங்களுக்கு அது இன்னும் முழுமையாக வந்து சேரவில்லை. ஆனால் நாற்பது வருடங்களுக்கு முன்னால் கிராமங்களில் டவுசர் அணிவது எப்படி இருந்திருக்கும் என்பதை நினைத்துப் பார்த்தோமானால் இன்றைக்கும் டவுசர் அக்காவை வியக்காமல் இருக்க முடியாது. கை வைத்த பனியனும் டவுசரும் அணிந்திருக்கும் அக்கா எப்போதும் டவுசர் பையில் நான்கு அங்குல நீளத்தில் கைபிடி தெரியும் படி கத்தி ஒன்றை வைத்திருப்பார். பகல் நேரங்களில் சேலையில் இருந்தாலும் டவுசரும் கத்தியும் உள்ளுக்குள் இருக்கத்தான் செய்யும். ஆண்கள் பெண்கள் யாராக இருந்தாலும் டவுசர் அக்காவுக்கு ‘ மாமா – அக்கா ’ தான். வாய்விட்டு சிரிக்கச் சிரிக்கப் பேசுவாள். கூலிக்கென்று வேலைக்குப் போக மாட்டாள். சம்பாதிப்பது பற்றி யோசிப்பதே கிடையாது. குடும்பம் கிடையாது. யார் வீட்டில் கொடுத்தாலும் வாங்கிச் சாப்பிட்டுக் கொள்வாள். யாரேனும் தோட்ட வேலைக்குக் கூப்பிட்டால் ‘ போங்க … வ...

அயோத்திதாசரின் விடுதலைப் பெளத்தம்

  இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தமிழ்ச் சமூகத்தின் அறிவுஜீவித அடையாளமாகத் திகழும் அயோத்திதாசர் , அக்காலத்தின் வாழ்க்கைச் சூழலுக்கும் நிலவிய அரசியல் தன்மைக்கும் ஏற்ப பெளத்தத்தை முன்வைத்தவர் . அவர் காலத்திய வரலாற்றுத் திரிபுகளை அம்பலப்படுத்தினார் . அதற்காக சடங்குகள் , பழக்க வழக்கங்கள் , இலக்கிய இலக்கணங்கள் , நிகண்டுகள் உள்ள்ளிட்ட எழுத்தாவணங்கள் ஆகியவற்றைப் பயன்படுத்தினார் . வரலாற்றைத் திரிபு செய்தவர்கள் பயன்கொண்ட சான்றுகளையே அயோத்திதாசரும் பயன்கொண்டு அதன் மீது வேறொரு வாசிப்பை நிகழ்த்தினார் . ஒரு வாசிப்பி ன் வழி வரலாற்றை எழுதுவதற்கும் புரிந்துகொள்வதற்குமான அரசியலை வெளிப்படுத்தியதுடன் தனது அரசியல் நிலைப்பாட்டையும் முன்வைத்தார் . தமிழ்ச்சமூகத்தை ஆதி திராவிடர் , திராவிடர் எனப் பகுத்து ஆதி திராவிடர்களைப் பூர்வப் பெளத்தர்கள் என்றார் . அதற்காக அவர் முன் வைத்த வாதங்கள் பூர்விகமான மண்ணின் மணம் கொண்டவை என்பது குறிப்பிடத்தக்கது . அயோத்திதாசர் அயோத்திதாசரின் காலத்தில் வரலாறு , பண்பாடு , இலக்கியம் , தத்துவம் ஆகியவற்றை ஐரோப்பிய வெளிச்சத்தில் பார்க்கும் போக்கு உருவாகிவிட்டிருந்தது . இந்திய...

ஹரிஜனங்களும் சதபத பிராமண கதைகளும்

ஹரிஜனங்களும் சதபத பிராமண கதைகளும் 1933 இல் எம்.ஆர்.ஜம்புநாதன் எழுதிய நூல் சதபத பிராமணம். வேதங்கள் , உபநிடதங்கள் ஆகியவற்றின் செய்திகளை விளக்கும் வண்ணம் எதையாவது எழுதும் வழக்கமுடைய ஜம்புநாதன் , யசூர் வேதத்தின் சில பகுதிகளை விளக்கும் முகமாக சதபத பிராமணத்தை எழுதியிருக்கிறார். அதில் 88 விளக்கக் குறிப்புகள் இடம் பெற்றிருக்கின்றன. அவற்றை அவர் ‘ கதைகள் ’ என்கிறார். உண்மையில் அவற்றைக் கதைகள் என்று சொல்வது கூட ரெம்ப அதிகம் தான்.  இந்நூலை அவர் ஹரி ஜனங்களுக்குச் சமர்ப்பித்திருக்கிறார். அதற்கான காரணத்தை அவரே விவரிக்கிறார். நூலில் ருத்திரனின் இயல்புகளை விவரிக்கும் அவர் ‘ ருத்திரனின் குணங்கள் அனைத்தும் ஹரிஜனங்களிடம் உள்ளது ’ என்பதாக அரிய கண்டுபிடிப்பை நிகழ்த்துகிறார். இந்த ஒப்பீட்டின் வழி அவரது அறிவின் அளவு துலக்கப்பட்டிருக்கிறது. இவற்றையெல்லாம் தாண்டி நூல் எதற்காக எழுதப்பட்டிருக்கும் என யோசித்தால் ஹரிஜனங்களை இந்துக்களாகச் சித்திரிப்பதே நோக்கமாக இருந்திருக்க வேண்டும் என்பது தெரிகிறது. சான்றாக , ருத்திரனுக்கும் ஹரிஜனங்களுக்கும் அவர் சொல்லும் ஒற்றுமைக் காரணங்கள் சிலவற்றைப் பார்க்கலாம். உலகம் ...