Skip to main content

பயணங்கள்



 

 25.06.2022 அன்று மதுரையில் இருந்து பாபநாசம் சென்று அகத்தியர் அருவியில் குளித்துவிட்டு சொரிமுத்து அய்யனார் கோயில் சென்று பார்த்துவிட்டு வருவதென திட்டம். ரயில் பயணம். அதிகாலையில் ரயிலில் ஜன்னலோரத்தில் உட்கார்ந்து செல்வது அலாதி இன்பம் தான். 

தென்காசி ரயில் நிலையத்தில்  இருந்து பாபநாசம் செல்வதற்கு பழைய பஸ் ஸ்டாண்ட் வரவேண்டும். தென்காசியில் அடிக்கடி பாபநாசத்திற்கு பஸ் இல்லை. ஆகவே அம்பாசமுத்திரம் சென்று அங்கிருந்து பாபநாசம் செல்ல வேண்டும். 

தென்காசியில் காலை உணவு எடுத்துக் கொள்ள வேண்டும் என்றால் பழைய பஸ் ஸ்டாண்ட் அருகில் உள்ள ராஜ் மெஸ் போகலாம். பழைய வீடு தான் அது. அதை ஹோட்டலாக மாற்றி நடத்திக் கொண்டிருக்கிறார்கள். மிகவும் சுவையான டிபன். வீட்டுச் சுவை. 

....

சொரிமுத்து அய்யனார் கோயில் என்னும் விகார்
.......
திருநெல்வேலி மாவட்டம், பாபநாசத்தில் இருந்து காரையார் செல்லும் வழியில் சுமார் 11 கிமீ தொலைவில் உள்ளது சொரிமுத்து அய்யனார் கோவில். இந்த கோயிலின் பெயரே இது ஒரு பிக்கு இருந்த மடமாகவோ அல்லது விகாராகவோ இருந்திருக்கும் என்பதை உறுதிப்படுத்துகின்றது.
கோயில் மண்டபத்தின் நிலைத்தூண்களில் செதுக்கப்பட்ட தாமரையும் யானைகளும் நிறைய காணக் கிடைக்கின்றன. நீறு பூசி, சிவன் கோயிலைப் போல இக்கோயிலின் வழிபாட்டு முறை இருந்தாலும் பார்ப்பனர் தலையீடு இல்லாமல் பார்ப்பனரல்லாதாரின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. சாமியாடி அருள்வாக்கு சொல்கிறார். இக்கோயிலில் புத்தரால் தென்மொழி போதிக்கப்பட்டு தென்னாட்டிற்கு அனுப்பப்பட்டவர் என்பதாக அயோத்திதாசரால் சொல்லப்படும் அகத்தியரும் சங்கிலி பூதத்தாரும் (சங்கம் சேர்ந்திருந்த பூதத்தார்) பரிவார தெய்வமாக வணங்கப்படுகிறார்கள். அகத்தியர் - சங்கிலி பூதனார் தாமரை - யானை - சின்னங்கள், பார்ப்பனர் இல்லாமை - நீறு - சொரி முத்து அய்யனார் என்னும் அடையாளங்கள் அனைத்தும் இத்தலத்தை ஒரு பிக்கு தங்கியிருந்து அறம் போதித்த மடமாகவோ அல்லது ஒரு விகாரையாவோ முன் வைப்பது முக்கியமானது.
அய்யனார் கோயில்களுக்கெல்லாம் தலைமை கோயிலாக இதைக் கருதி வரும் வழக்காற்றின் வழி தமிழகத்தின் தென்பகுதி பிக்குகளுக்கு இக்கோயில் (மடம்) தலைமை இடமாக இருந்திருக்கிறது என்கிற முடிவுக்கு வர முடிகிறது.
இந்தக் கோயிலுக்கு இன்னொரு சிறப்புண்டு. அது என்னவென்றால் வெளிப்படையான ஏராளமான பௌத்த அடையாளங்களை இன்றளவும் சுமந்து கொண்டிருக்கும் தென்தமிழகக் கோயில் இது ஒன்று மட்டுமே.




Comments

Popular posts from this blog

அனிதா - நீட் - தூய்மை பாரதம் - சில விவாதக் குறிப்புகள்

அனிதா - நீட் - தூய்மை பாரதம் - சில விவாதக் குறிப்புகள் ஞா. குருசாமி, ஹைதராபாத் மத்திய பல்கலைக்கழக ஆய்வாளர் ரோகித் வெமுலா, டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக ஆய்வாளர் முத்துக்கிருஷ்ணன், பன்னிரண்டாம் வகுப்பு தேர்வில் 1176 மதிப்பெண்ணைப் பெற்று மருத்துவப் படிப்பை எதிர்நோக்கி இருந்த அனிதா என ஆராய்ச்சிலும் கல்வியிலும் தனித்திறன் பெற்ற திறமைசாலிகளை அரசு எந்திரம் குறிவைத்து தற்கொலைக்கு உள்ளாக்கும் போக்கு வருத்தம் அளிக்கிறது. இந்த தேசத்தில் வருணாசிரமத்தின் அடிப்படையில் நிகழ்த்தப்படும் சதிக்கொடுமை ஒன்றும் புதியதல்ல. ஏகலைவர் காலம் தொடங்கி நடத்து வருகிறது. ஏகலைவர், நந்தர் என்னும் மிக நீண்ட வரிசையில் இன்றைக்கு அனிதாவை இழந்திருக்கிறது இந்த சமுதாயம் என்று மிகவும் மொன்னையான சமாதானத்தைத் தற்காலிகமாகக் கூடத் தேடிக்கொள்ள மனம் மறுக்கிறது. தமிழ்நாட்டில் சமீபத்தில் முக்கியக் கவனம் பெற்ற நிகழ்வு ஜல்லிக்கட்டுக்கான தடையை நீக்கக்கோரிய போராட்டம். சமுதாயத்தின் எல்லா தரப்பினரும் ஒருங்கிணைந்து களம் கண்டனர். அது தமிழர்களின் ரத்தத்திலேயே ஊறிப்போய் உறங்கிக் கிடந்த வீரத்தின் வெளிப்பாடு என்றெல்லாம் பேசப்பட்டத...

ஏழைகள் நடமாடும் குப்பைத் தொட்டியா?

  ஏழைகள் நடமாடும் குப்பைத் தொட்டியா? உலகப் பிரபலமான ஒருவர் 25.08.2024 அன்று வானொலியில் ஆற்றிய உரையில் சுற்றுச்சுழல் – பிளாஸ்டிக் கழிவு – மறு பயன்பாடு – மறுசுழற்சி பற்றிக் குறிப்பிட்டார். பிளாஸ்டிக் கழிவுகளால் சுற்றுச்சூழல் மாசுபடுகிறது என்கிற அவரது கூற்றில் உண்மை இல்லாமல் இல்லை. பிளாஸ்டிக் கழிவுகளைக் குறைப்பதற்கு அவர், பயன்படுத்திய பிளாஸ்டிக் பொருள்களை அப்படியே தூக்கி வீசிவிடாமல் அது தேவைப்படுகிறவர்களுக்குக் கொடுக்கலாம் என்றார். அதற்கு அவரே ஓர் உதாரணமும் சொன்னார். ‘பிளாஸ்டிக் பொம்மையை வைத்து விளையாடும் குழந்தை அந்த பொம்மை மீது சலிப்படைந்து விட்டால் அதை வீசி எறிந்து விடாமல், ஒரு சிறு பொம்மை கூட கிடைக்காமல் ஏங்கிக் கொண்டிருக்கும் குழந்தைகளுக்கு கொடுத்து விடலாம்’ என்பது தான் அந்த உதாரணம். அப்படிச் செய்வதால் பிளாஸ்டிக் கழிவுகளை மறுபயன்பாட்டுக் கொண்டு வந்து சுற்றுச்சூழலைக் காப்பாற்றலாமாம். எனக்கு இறந்து நாற்றமடிக்கும் விலங்குகளைச் சாப்பிடுவதாலே காக்கைக்கு ‘ஆகாயத்தோட்டி’ என்றும் கழுதைப்புலிக்கு ‘வனத்தோட்டி’ என்றும் அறிவுஜீவிகள் ‘சிறப்பு’ப் பெயர்கள் வைத்திருப்பதும் வீட்டில் மீந்து போன...

அயோத்திதாசரின் விடுதலைப் பெளத்தம்

  இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தமிழ்ச் சமூகத்தின் அறிவுஜீவித அடையாளமாகத் திகழும் அயோத்திதாசர் , அக்காலத்தின் வாழ்க்கைச் சூழலுக்கும் நிலவிய அரசியல் தன்மைக்கும் ஏற்ப பெளத்தத்தை முன்வைத்தவர் . அவர் காலத்திய வரலாற்றுத் திரிபுகளை அம்பலப்படுத்தினார் . அதற்காக சடங்குகள் , பழக்க வழக்கங்கள் , இலக்கிய இலக்கணங்கள் , நிகண்டுகள் உள்ள்ளிட்ட எழுத்தாவணங்கள் ஆகியவற்றைப் பயன்படுத்தினார் . வரலாற்றைத் திரிபு செய்தவர்கள் பயன்கொண்ட சான்றுகளையே அயோத்திதாசரும் பயன்கொண்டு அதன் மீது வேறொரு வாசிப்பை நிகழ்த்தினார் . ஒரு வாசிப்பி ன் வழி வரலாற்றை எழுதுவதற்கும் புரிந்துகொள்வதற்குமான அரசியலை வெளிப்படுத்தியதுடன் தனது அரசியல் நிலைப்பாட்டையும் முன்வைத்தார் . தமிழ்ச்சமூகத்தை ஆதி திராவிடர் , திராவிடர் எனப் பகுத்து ஆதி திராவிடர்களைப் பூர்வப் பெளத்தர்கள் என்றார் . அதற்காக அவர் முன் வைத்த வாதங்கள் பூர்விகமான மண்ணின் மணம் கொண்டவை என்பது குறிப்பிடத்தக்கது . அயோத்திதாசர் அயோத்திதாசரின் காலத்தில் வரலாறு , பண்பாடு , இலக்கியம் , தத்துவம் ஆகியவற்றை ஐரோப்பிய வெளிச்சத்தில் பார்க்கும் போக்கு உருவாகிவிட்டிருந்தது . இந்திய...