Skip to main content

பயணங்கள்



 

 25.06.2022 அன்று மதுரையில் இருந்து பாபநாசம் சென்று அகத்தியர் அருவியில் குளித்துவிட்டு சொரிமுத்து அய்யனார் கோயில் சென்று பார்த்துவிட்டு வருவதென திட்டம். ரயில் பயணம். அதிகாலையில் ரயிலில் ஜன்னலோரத்தில் உட்கார்ந்து செல்வது அலாதி இன்பம் தான். 

தென்காசி ரயில் நிலையத்தில்  இருந்து பாபநாசம் செல்வதற்கு பழைய பஸ் ஸ்டாண்ட் வரவேண்டும். தென்காசியில் அடிக்கடி பாபநாசத்திற்கு பஸ் இல்லை. ஆகவே அம்பாசமுத்திரம் சென்று அங்கிருந்து பாபநாசம் செல்ல வேண்டும். 

தென்காசியில் காலை உணவு எடுத்துக் கொள்ள வேண்டும் என்றால் பழைய பஸ் ஸ்டாண்ட் அருகில் உள்ள ராஜ் மெஸ் போகலாம். பழைய வீடு தான் அது. அதை ஹோட்டலாக மாற்றி நடத்திக் கொண்டிருக்கிறார்கள். மிகவும் சுவையான டிபன். வீட்டுச் சுவை. 

....

சொரிமுத்து அய்யனார் கோயில் என்னும் விகார்
.......
திருநெல்வேலி மாவட்டம், பாபநாசத்தில் இருந்து காரையார் செல்லும் வழியில் சுமார் 11 கிமீ தொலைவில் உள்ளது சொரிமுத்து அய்யனார் கோவில். இந்த கோயிலின் பெயரே இது ஒரு பிக்கு இருந்த மடமாகவோ அல்லது விகாராகவோ இருந்திருக்கும் என்பதை உறுதிப்படுத்துகின்றது.
கோயில் மண்டபத்தின் நிலைத்தூண்களில் செதுக்கப்பட்ட தாமரையும் யானைகளும் நிறைய காணக் கிடைக்கின்றன. நீறு பூசி, சிவன் கோயிலைப் போல இக்கோயிலின் வழிபாட்டு முறை இருந்தாலும் பார்ப்பனர் தலையீடு இல்லாமல் பார்ப்பனரல்லாதாரின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. சாமியாடி அருள்வாக்கு சொல்கிறார். இக்கோயிலில் புத்தரால் தென்மொழி போதிக்கப்பட்டு தென்னாட்டிற்கு அனுப்பப்பட்டவர் என்பதாக அயோத்திதாசரால் சொல்லப்படும் அகத்தியரும் சங்கிலி பூதத்தாரும் (சங்கம் சேர்ந்திருந்த பூதத்தார்) பரிவார தெய்வமாக வணங்கப்படுகிறார்கள். அகத்தியர் - சங்கிலி பூதனார் தாமரை - யானை - சின்னங்கள், பார்ப்பனர் இல்லாமை - நீறு - சொரி முத்து அய்யனார் என்னும் அடையாளங்கள் அனைத்தும் இத்தலத்தை ஒரு பிக்கு தங்கியிருந்து அறம் போதித்த மடமாகவோ அல்லது ஒரு விகாரையாவோ முன் வைப்பது முக்கியமானது.
அய்யனார் கோயில்களுக்கெல்லாம் தலைமை கோயிலாக இதைக் கருதி வரும் வழக்காற்றின் வழி தமிழகத்தின் தென்பகுதி பிக்குகளுக்கு இக்கோயில் (மடம்) தலைமை இடமாக இருந்திருக்கிறது என்கிற முடிவுக்கு வர முடிகிறது.
இந்தக் கோயிலுக்கு இன்னொரு சிறப்புண்டு. அது என்னவென்றால் வெளிப்படையான ஏராளமான பௌத்த அடையாளங்களை இன்றளவும் சுமந்து கொண்டிருக்கும் தென்தமிழகக் கோயில் இது ஒன்று மட்டுமே.




Comments

Popular posts from this blog

ரவிகாந்த் கிசானா எழுதிய 'சவர்ணர்களைச் சந்தியுங்கள்' (Meet the Savarnas) நூல் குறித்து….

            ஹைதராபாத்தில் உள்ள வோக்ஸன் பல்கலைக்கழகத்தில் (Woxsen University) இணைப் பேராசிரியராக உள்ள ரவிகாந்த் கிசானா இனவரைவியலில் ஆர்வமுடையவர். குறிப்பாக சாதிகள் குறித்து எழுதி வருகிறார். அவரது 'சவர்ணர்களைச் சந்தியுங்கள்' நூல் ‘அற்பத்தனங்கள் எல்லாவற்றையும் உடைத்த இந்திய மில்லினியல்கள்’ (Indian Millennials Whose Mediocrity Broke Everything) என்ற துணைத் தலைப்புடன் 2025 மே மாதம் வெளியானது. அது பற்றி ஜூலையில் ஃபிரண்ட் லைனில் அறிமுகம் வந்தபோதே வாசித்து விட்டு அமேசானில் தேடிய போது விற்றுத் தீர்ந்திருந்தது. மீண்டும் விற்பனைக்கு வந்த போது வாங்கி வாசித்தேன். நேற்று (28.12.2025) ஆங்கில இந்து நாளேட்டிலும் அந்த நூல் குறித்த பத்தி ஒன்று எழுதப்பட்டிருந்தது. இவை எல்லாமும் சேர்ந்து தமிழில் அது பற்றி எழுத வேண்டும் என்ற ஆர்வத்தை உண்டாக்கிவிட்டன.           இதில் ரவிகாந்த், சவர்ணர்கள் என்போர் யாவர்? சாதியை ஏன் பழைய விஷயமாகச் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்? சவர்ணங்களின் ‘நாங்கள் சாதி பார்ப்பதில்லை’ என்னும் புகழ் பெற்ற வாசகம் அவர்களின் சாதி உணர்...

தத்துவங்கள் குறித்த உரையரங்கம்

  தத்துவங்கள் குறித்த உரையரங்கம் கோவை பீளமேட்டில் ‘ பார்வையற்றோருக்கான அறிவே துணை ஆய்வு மையம் ’ தத்துவ அறிமுகக் கூட்டம் ஒன்றை 2026 மே 29 அன்று நடத்தியது . அதன் தலைவர் பேராசிரியர் சுகுமாரன் நிகழ்வை ஒருங்கிணைத்து இருந்தார் . பெரியாரியம் குறித்து   கு . ராமகிருஷ்ணன் பேசினார். இணைய வழியில் கலந்துகொண்ட   தியாகு மார்க்சியம் குறித்துப் பேசினர் .  நான் அம்பேத்கரியம் பேசினேன் . அம்பேத்கரை எப்படி வாசிக்கத் தொடங்குவது என்பதில் தொடங்கி கூட்டுச் சிந்தனையில் அம்பேத்கரின் அவசியத்தை வலியுறுத்துவதாக எனது உரையை அமைத்துக் கொண்டேன் . மனநிறைவான நிகழ்வாக அமைந்தது . சிறிய அளவிலான கூட்டம் என்றாலும் ஒருசிலரைத் தவிர அனைவரும் பார்வையற்றவர்களே . அவர்களோடு பேசிய தருணங்கள் நாம் பார்த்திராத உலகத்தைக் காட்டின . ஒருவர் ‘ மாற்றுத்திறனில்  21 வகை உள்ளதாக அரசு வரையறுத்து இருக்கிறது . எல்லோரையும் ஒரே மாதிரியாகக் கருதுவது மாற வேண்டும் ’ என்றார் . ‘ நடக்க இயலாதவர்களையும் எங்களையும் எப்படி ஒன்றாகக் கருத முடியும் ’ என்ற கேள்வியில் உறுதியாக இருந்தார் . ‘ நடக்க இயலாதவர் தன்னால் இயல்பாகத் தனித்துச் ...

இராணிப்பேட்டை அமுதாவும் அதிபர் டிரம்ப்பும்

கடந்த 2026  ஜனவரி 09 ஆம் தேதி இராணிப்பேட்டை மாவட்டம் ,  பொன்னேரியில் முதல் அமைச்சர் கலந்துகொண்ட ‘ உங்க கனவ சொல்லுங்க ’ நிகழ்ச்சி நடைபெற்றது . இதில் கனவைச் சொல்ல அழைக்கப்பட்ட இராணிப்பேட்டை மாவட்டம் , காவேரிப்பாக்கம் ஒன்றியம் , கரிவேடு ஊராட்சி , சித்தஞ்சி கிராமத்தைச் சேர்ந்தவரும் அதே கிராமத்தில் செயல்பட்டு வரும் கங்கையம்மன் மகளிர் சுயஉதவிக் குழுவின் ஊக்குநருமான எம் . அமுதா தனது கனவைச் சொன்னார் .  பதினைந்து ஆண்டுகளாக பல்வேறு கடனுதவிகளைப் பெற்று மாவு அரைக்கும் எந்திரந்தின் மூலம் வருமானம் ஈட்டி வரும் அமுதா எஸ்சி / எஸ்டி மக்களுக்கு மானியக் கடன் கிடைப்பதாகவும் தங்களுக்கு நேரடிக் கடன் மட்டுமே கிடைப்பதாகவும் குறைபட்டுக் கொண்டார் . அவர் பேச்சில் இருந்த முக்கியமான விஷயம் ‘ எஸ்சி எஸ்டிக்கெல்லாம் குடுத்தா நாங்க எங்க போறது ’ என்கிற அழுத்தம் தான் . அவரது தேவையைக் கேட்டுப் பெறுவதில் அவருக்கு உரிமை உண்டு . ஆனால் ‘ எஸ்சி எஸ்டிகளுக்குக் கிடைக்கிறது எங்களுக்குக் கிடைக்கவில்லை ’ என்கிற ஒப்பீடு சரியானதல்ல . தவிர , இதை அவரது தனிப்பட்ட கருத்து என்பதை விட கூட்டுச் சமூகத்தின் மனநிலை என்பதற்கு அ...