Skip to main content

நூல் அறிமுகம்

 

கே.என்.சிவராஜ பிள்ளையின் THE CHRONOLOGY OF THE EARLY TAMILS என்கிற நூல் பற்றிய குறிப்புகள்

ஞா.குருசாமி

கே.என்.சிவராச பிள்ளை தமிழ் இலக்கிய வரலாற்றை எழுதும் பொழுது எத்தகைய முன்னாய்வுகளை கவனத்தில் கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்துகிறார். தன்னுடைய ‘The Chronology of the Early Tamils’ நூலில் இலக்கிய வரலாற்றை எழுத முனைகிறவர்கள் என்னென்ன விசயங்களைக் கவனத்தில் கொள்ள வேண்டும் என்றும் தன்னுடைய நூலில் எவையெவை கவனத்தில் கொள்ளப்பட்டிருக்கின்றன என்பதையும் விவரிக்கிறார். அதில்  குறிப்பாக மூன்று விஷயங்களைக் குறிப்பிடலாம். ஒன்று தொன்மம் குறித்த மறுப்பு, இரண்டு சொல் பயன்பாட்டு ஆய்வின் வழி காலத்தை உறுதி செய்தல், மூன்று காலத்தின் வரிசைப்படி வரலாற்றை எழுதுதல்.

அவர் தொன்மத்தை மறுத்தல் என்பதில் சங்கம் பற்றி இறையனார் களவியல் உரை தருகிற செய்திகளை மறுக்கிறார். அகத்தியர் பற்றி வழங்கிவரும் செய்திகளை முற்றாக மறுக்கிறார். அகத்தியர் பற்றிய செய்திகளும் சங்கம் பற்றிய செய்திகளும் உண்மைக்குப் புறம்பானவை. நம்ப முடியாதவையாக இருக்கின்றன என்பதை சான்றுகளோடு நிறுவுகிறார்.

நூலின் அட்டைப்படம்

 உந்து, ஆங்கு என்கிற இரண்டு சொற்கள் வழி காலத்தை வரையறை செய்ய முடியும் என்று நிறுவியிருக்கிறார். உந்து வினைமுற்று சொல். பெயரெச்சம் அல்ல. பலரால் அது பெயரெச்சம் என தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டிருக்கிறது என்கிறார். ஒரே பாடலில் ஒன்றுக்கு மேற்பட்ட இடத்தில்உந்து சொல் வந்து வினைமுற்றாக இருக்கும் போது, அந்த பாடலில் ஆங்கு என்ற இடைச்சொல்  வரும். அதுதான் பாட்டில் வரும் பல வினைமுற்று தொடர்களின் பொருளைத் தொகுத்துத் தரும். சங்க இலக்கியத்தில்ஆங்கு என்ற சொல்லை புரிந்து கொள்ளாமல் உந்து என்கிற வினைமுற்றுச் சொல்லை புரிந்து கொள்ள முடியாது என்கிறார் கே.என்.சிவராஜ பிள்ளை.

 மேலும் அவர் தொல்காப்பியர் உந்து வினைமுற்று சொல் பற்றி கூறவில்லை என்று குறிப்பிடுகிறார். சங்க இலக்கியத்தில்உந்து என்ற சொல்லைப் பயன்படுத்தியவர்களாக மாங்குடி கிழார், ஒருசிறை பெரியனார், பரணர், கருவூர் கதப்பில்லை, புறத்திணை நன்னாகன், கோவூர்கிழார், மதுரை நக்கீரர் முதலியோர்களைக் குறிப்பிடுகிறார். இவர்களெல்லாம் உந்து என்கிற சொல்லை பயன்படுத்தி எழுதிய பாடல்கள் புறநானூற்றில் கிடைக்கின்றன. இப்புலவர்களைத் தொல்காப்பியர் காலத்துக்கு முந்தியவர்கள் எனக் குறிப்பிடும் கே.என். சிவராஜ பிள்ளை, உந்து என்னும் சொல் வழக்கு தொல்காப்பியர் காலத்தில் வழக்கொழிந்திருக்க வேண்டும், அல்லது இழிவழக்காக இருந்திருக்க வேண்டும் அல்லது தொல்காப்பியர் காலத்திற்கு பின்னால் வழக்கிற்கு வந்திருக்கலாம் என்கிறார். இதில் மூன்றாவது காரணம் ஏற்புடையதாக இல்லை. ஏற்றால் கே.என்.சிவராஜ பிள்ளையின் ஆய்வே முரணாகும் அபாயமிருக்கிறது.

 இலக்கிய வரலாற்றை எழுதுவதில் உள்ள சிக்கல்களாக 1. தலைமுறையை பகுப்பதில் உள்ள சிக்கல்,  2.காலவரையறையை முடிவு செய்வதில் உள்ள சிக்கல் என இரண்டு சிக்கல் பற்றிக் கூறும் அவர், அவற்றை எவ்வாறு வரையறை செய்வது என்பதை விளக்குகிறார். இவற்றையெல்லாம் கவனத்தில் கொண்டு எழுதும் பொழுது ஓர் இலக்கிய வரலாறு உண்மையிலேயே வரலாறாக இருக்கும் அதில் உண்மைக்கு புறமான செய்திகளுக்கு இடம் இருக்காது. நம்பகத்தன்மை அதிகமாக இருக்கும் என்கிறார். நூல் ஆங்கிலத்தில் இணையத்தில் இலவசமாகக் கிடைக்கிறது. இந்நூல் 1932 - இல் சென்னைப் பல்கலைக்கழக வெளியீடாக வந்திருக்கிறது. மொத்த பக்கம் 316. அன்றைய விலை ரூ 5/-

.................................



Comments

Popular posts from this blog

அனிதா - நீட் - தூய்மை பாரதம் - சில விவாதக் குறிப்புகள்

அனிதா - நீட் - தூய்மை பாரதம் - சில விவாதக் குறிப்புகள் ஞா. குருசாமி, ஹைதராபாத் மத்திய பல்கலைக்கழக ஆய்வாளர் ரோகித் வெமுலா, டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக ஆய்வாளர் முத்துக்கிருஷ்ணன், பன்னிரண்டாம் வகுப்பு தேர்வில் 1176 மதிப்பெண்ணைப் பெற்று மருத்துவப் படிப்பை எதிர்நோக்கி இருந்த அனிதா என ஆராய்ச்சிலும் கல்வியிலும் தனித்திறன் பெற்ற திறமைசாலிகளை அரசு எந்திரம் குறிவைத்து தற்கொலைக்கு உள்ளாக்கும் போக்கு வருத்தம் அளிக்கிறது. இந்த தேசத்தில் வருணாசிரமத்தின் அடிப்படையில் நிகழ்த்தப்படும் சதிக்கொடுமை ஒன்றும் புதியதல்ல. ஏகலைவர் காலம் தொடங்கி நடத்து வருகிறது. ஏகலைவர், நந்தர் என்னும் மிக நீண்ட வரிசையில் இன்றைக்கு அனிதாவை இழந்திருக்கிறது இந்த சமுதாயம் என்று மிகவும் மொன்னையான சமாதானத்தைத் தற்காலிகமாகக் கூடத் தேடிக்கொள்ள மனம் மறுக்கிறது. தமிழ்நாட்டில் சமீபத்தில் முக்கியக் கவனம் பெற்ற நிகழ்வு ஜல்லிக்கட்டுக்கான தடையை நீக்கக்கோரிய போராட்டம். சமுதாயத்தின் எல்லா தரப்பினரும் ஒருங்கிணைந்து களம் கண்டனர். அது தமிழர்களின் ரத்தத்திலேயே ஊறிப்போய் உறங்கிக் கிடந்த வீரத்தின் வெளிப்பாடு என்றெல்லாம் பேசப்பட்டத...

ஏழைகள் நடமாடும் குப்பைத் தொட்டியா?

  ஏழைகள் நடமாடும் குப்பைத் தொட்டியா? உலகப் பிரபலமான ஒருவர் 25.08.2024 அன்று வானொலியில் ஆற்றிய உரையில் சுற்றுச்சுழல் – பிளாஸ்டிக் கழிவு – மறு பயன்பாடு – மறுசுழற்சி பற்றிக் குறிப்பிட்டார். பிளாஸ்டிக் கழிவுகளால் சுற்றுச்சூழல் மாசுபடுகிறது என்கிற அவரது கூற்றில் உண்மை இல்லாமல் இல்லை. பிளாஸ்டிக் கழிவுகளைக் குறைப்பதற்கு அவர், பயன்படுத்திய பிளாஸ்டிக் பொருள்களை அப்படியே தூக்கி வீசிவிடாமல் அது தேவைப்படுகிறவர்களுக்குக் கொடுக்கலாம் என்றார். அதற்கு அவரே ஓர் உதாரணமும் சொன்னார். ‘பிளாஸ்டிக் பொம்மையை வைத்து விளையாடும் குழந்தை அந்த பொம்மை மீது சலிப்படைந்து விட்டால் அதை வீசி எறிந்து விடாமல், ஒரு சிறு பொம்மை கூட கிடைக்காமல் ஏங்கிக் கொண்டிருக்கும் குழந்தைகளுக்கு கொடுத்து விடலாம்’ என்பது தான் அந்த உதாரணம். அப்படிச் செய்வதால் பிளாஸ்டிக் கழிவுகளை மறுபயன்பாட்டுக் கொண்டு வந்து சுற்றுச்சூழலைக் காப்பாற்றலாமாம். எனக்கு இறந்து நாற்றமடிக்கும் விலங்குகளைச் சாப்பிடுவதாலே காக்கைக்கு ‘ஆகாயத்தோட்டி’ என்றும் கழுதைப்புலிக்கு ‘வனத்தோட்டி’ என்றும் அறிவுஜீவிகள் ‘சிறப்பு’ப் பெயர்கள் வைத்திருப்பதும் வீட்டில் மீந்து போன...

அயோத்திதாசரின் விடுதலைப் பெளத்தம்

  இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தமிழ்ச் சமூகத்தின் அறிவுஜீவித அடையாளமாகத் திகழும் அயோத்திதாசர் , அக்காலத்தின் வாழ்க்கைச் சூழலுக்கும் நிலவிய அரசியல் தன்மைக்கும் ஏற்ப பெளத்தத்தை முன்வைத்தவர் . அவர் காலத்திய வரலாற்றுத் திரிபுகளை அம்பலப்படுத்தினார் . அதற்காக சடங்குகள் , பழக்க வழக்கங்கள் , இலக்கிய இலக்கணங்கள் , நிகண்டுகள் உள்ள்ளிட்ட எழுத்தாவணங்கள் ஆகியவற்றைப் பயன்படுத்தினார் . வரலாற்றைத் திரிபு செய்தவர்கள் பயன்கொண்ட சான்றுகளையே அயோத்திதாசரும் பயன்கொண்டு அதன் மீது வேறொரு வாசிப்பை நிகழ்த்தினார் . ஒரு வாசிப்பி ன் வழி வரலாற்றை எழுதுவதற்கும் புரிந்துகொள்வதற்குமான அரசியலை வெளிப்படுத்தியதுடன் தனது அரசியல் நிலைப்பாட்டையும் முன்வைத்தார் . தமிழ்ச்சமூகத்தை ஆதி திராவிடர் , திராவிடர் எனப் பகுத்து ஆதி திராவிடர்களைப் பூர்வப் பெளத்தர்கள் என்றார் . அதற்காக அவர் முன் வைத்த வாதங்கள் பூர்விகமான மண்ணின் மணம் கொண்டவை என்பது குறிப்பிடத்தக்கது . அயோத்திதாசர் அயோத்திதாசரின் காலத்தில் வரலாறு , பண்பாடு , இலக்கியம் , தத்துவம் ஆகியவற்றை ஐரோப்பிய வெளிச்சத்தில் பார்க்கும் போக்கு உருவாகிவிட்டிருந்தது . இந்திய...