Skip to main content

அஞ்சலி : கிளாடெட் கோல்வின் (1939 – 2026)

             கிளாடெட் கோல்வின் தன்னுடைய பதினைந்தாவது வயதில் அமெரிக்காவினுடைய அலபாமாவின் மான்ட்கோமரியில் அனைவருக்குமான பொதுப் பேருந்தில் தனது இருக்கையை வெள்ளையினப் பெண்ணுக்கு விட்டுக்கொடுக்க மறுத்ததற்காகக் கைது செய்யப்பட்ட முதல் நபர் ஆவார். அவர் கடந்த 2026 ஜனவரி 13 அன்று தன்னுடைய 86வது வயதில் இறந்தார். செப்டம்பர் 5, 1939 அன்று பிறந்த கோல்வினைப் பற்றி வாழ்க்கை வரலாற்றாசிரியரான பிலிப் ஹூஸ் சொல்லும்போதுசெங்கற்களால் கட்டப்பட்ட சிறிய வீடுகளும்திறந்தவெளி கழிப்பறைகளும் நிறைந்ததார் போடப்படாத மூன்று தெருக்கள் கொண்ட ஒரு பகுதியில் வளர்ந்தார் என்று குறிப்பிடுகிறார். 
கிளாடெட் கோல்வின்

            குழந்தைப் பருவத்திலேயே பெற்றோரை இழந்த கோல்வினை அவரது பெரிய அத்தை மேரி ஜேன்பெரிய மாமா கியூ.பி. ஸ்மித் ஆகியோர் வளர்த்தனர். அவர் எப்போதும் புத்தகங்களால் சூழப்பட்டிருந்தார்சிறுமியாக இருந்தபோது,​​எட்கர் ஆலன் போவில்லியம் ஷேக்ஸ்பியரின் படைப்புகளை வெறித்தனமாகப் படித்தார்.

பதின்ம வயதில் கோல்வின் கடுமையான தென்பகுதியில் ஜிம் க்ரோ சட்டங்களின் கொடுமைகளை அனுபவித்தார். பள்ளியில்அவர் (கறுப்பர்களோடு தொடர்புடைய) 14வது சட்டத் திருத்தத்தைப் பற்றி அறிந்துகொண்டார். அதே காலத்தில் தனது சொந்த ஊரில் நிலவிய இனப் பாகுபாட்டை விவரிக்கும் ஒரு கட்டுரையை எழுதினார். பொய்யான பாலியல் வன்கொடுமைக் குற்றச்சாட்டுகளின் பேரில் மரண தண்டனை விதிக்கப்பட்ட கறுப்பின இளைஞரான ஜெரெமையா ரீவ்ஸின் வழக்கை அறிந்து கோல்வின் அரசியல் விழிப்புணர்வைப் பெற்றார். ரோசா பார்க்ஸ் இந்த இயக்கத்தின் முகமாக மாறுவதற்கு ஒன்பது மாதங்களுக்கு முன்பு தான் கோல்வின்வெள்ளைப் பெண்ணுக்கு இருக்கை கொடுக்காமல் அமர்ந்திருந்த சம்பவம் நடைபெற்றிருந்தது.

பின்னொரு நாளில் அந்தச் சம்வத்தை நினைவுகூரும் போது கோல்வின்ஹாரியட் டப்மன் ஒரு தோளிலும்சோஜர்னர் ட்ரூத் மறு தோளிலும் தன்னை அழுத்துவது போல் உணர்ந்ததாகவும்அது தனது மறுப்பை ஒரு விதியாகத் தோன்றச் செய்ததாகவும் கூறினார். காவல்துறையினர் ​​கோல்வினை இருக்கையிலிருந்து இழுத்தபோது​​அவர்கள் அவரது உடல் குறித்து பொருத்தமற்ற கருத்துக்களைத் தெரிவித்தனர்அவர் அவர்களால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாவோம் என்று அஞ்சினார். அந்த நேரத்தில் கோல்வின் போவின் ‘அன்னபெல் லீ’, 'எ மிட்ஸம்மர் நைட்ஸ் ட்ரீம்நாடகத்தின் சில பகுதிகளையும், விவிலியத்தில் சங்கீதம் 23இல் உள்ள வசனங்களைச் சொல்லி தனது மனதை அமைதிப்படுத்திக்கொண்டார்.

புக்கர் டி. வாஷிங்டன் உயர்நிலைப் பள்ளியில்கோல்வின் கறுப்பின வரலாற்றை ஆழமாகவும் அரசியலமைப்பு உரிமைகளுக்காக வாதிடவும் கற்றுக்கொண்டார். NAACP-யின் இளைஞர் மன்ற உறுப்பினராக இருந்தபோதுரோசா பார்க்ஸ்வர்ஜீனியா டர் போன்ற மூத்த அமைப்பாளர்கள் தனது வழக்கை நடத்துவதற்காக வழக்கறிஞர்களையும் பணத்தையும் திரட்டுவதை அவர் கண்டார். பார்க்ஸ் கோல்வினைச் செயலாளராக ஆக்கிதனது அனுபவத்தை மீண்டும் மீண்டும் சொல்லும்படி அவரை ஊக்குவித்தார். பிறருக்கு வழிகாட்டுதலின் வழிதலைமைத்துவம் என்பது பயிற்சியாலும் அசைக்க முடியாத அர்ப்பணிப்பிலிருந்தும் வருகிறது என்பதை கோல்வின் கற்றுக்கொண்டார்.

மாண்ட்கோமரியில் பேருந்துப் பாகுபாட்டிற்கு முற்றுப்புள்ளி வைத்த வழக்கான பிரௌடர் எதிர் கெய்ல் வழக்கில் கோல்வின் ஒரு வாதியாக ஆனார். பாடப்புத்தகங்களில் அரிதாகவே பெயர்கள் இடம்பெறும் மற்ற பெண்களுடன் அவர் பெயரும் இடம் பெறலாயிற்று.

இயக்கத்தின் மெருகூட்டப்பட்ட தலைவர்களுக்கும்செய்தித்தலைப்புகளை நிரப்பிய சொற்பொழிவாளர்களான ஆண்களுக்கும் முன்பே, பெண் தொழிலாளர்கள் சமையலறைகளிலும் பேருந்து நடைபாதைகளிலும் இனவெறிக்கு எதிர்ப்பின் அறிகுறிகளைக் காட்டினர். பிற்காலத்தில்கோல்வின் நியூயார்க்கிற்கு குடிபெயர்ந்துபல பத்தாண்டுகள் ஒரு செவிலியருக்கு உதவியாளராகப் பணிபுரிந்து தனது மகன்களை வளர்த்தார்.

இன்றுஇளம் ஆர்வலர்கள் அமைப்பு ரீதியான இனவெறியை தொடர்ந்து எதிர்கொள்ளும் வேளையில்கோல்வின் வாழ்க்கை நீதிக்கான ஆர்வத்தைத் தூண்டுகிறது. தைரியம் அனுமதிக்காகவோ முழுமைக்காகவோ காத்திருப்பதில்லைஅது ஒருவரின் உரிமைகளை அறிவதிலிருந்தும் சமூகத்திலிருந்து வலிமையைப் பெறுவதிலிருந்தும் வருகிறது என்பதை அவரது வாழ்க்கை காட்டுகிறது.

 ​​அனுபவமிக்க விமர்சகர்களின் முன்கணிப்பையும் மீறி அவர் ஓர் இளம் அமைப்பாளராக வளர்ந்தார். பதினைந்து வயதில் அவர் காட்டிய எதிர்ப்புவிடுதலை இயக்கங்கள் நன்கு பிரபலமான அடையாளங்களை மட்டுமல்லாமல்இளைஞர்களின் தூய்மையான தார்மீகத் தெளிவையும் சார்ந்துள்ளது என்பதை நிரூபித்தது. ‘வரலாற்றில் சில அடையாளங்களுக்கு மட்டுமே இடம் உண்டு’  என்று கோல்வின் கூறுவார்.  ஆனால் மற்ற அடையாளங்களின் குரல்களும் கேட்கப்பட வேண்டும். அவருடைய உதாரணம் அதையே செய்தது.

ஆங்கில மூலம் : கியாங்கா மூர்

தமிழில் : ஞா.குருசாமி

 

...................

Comments

Popular posts from this blog

தத்துவங்கள் குறித்த உரையரங்கம்

  தத்துவங்கள் குறித்த உரையரங்கம் கோவை பீளமேட்டில் ‘ பார்வையற்றோருக்கான அறிவே துணை ஆய்வு மையம் ’ தத்துவ அறிமுகக் கூட்டம் ஒன்றை 2026 மே 29 அன்று நடத்தியது . அதன் தலைவர் பேராசிரியர் சுகுமாரன் நிகழ்வை ஒருங்கிணைத்து இருந்தார் . பெரியாரியம் குறித்து   கு . ராமகிருஷ்ணன் பேசினார். இணைய வழியில் கலந்துகொண்ட   தியாகு மார்க்சியம் குறித்துப் பேசினர் .  நான் அம்பேத்கரியம் பேசினேன் . அம்பேத்கரை எப்படி வாசிக்கத் தொடங்குவது என்பதில் தொடங்கி கூட்டுச் சிந்தனையில் அம்பேத்கரின் அவசியத்தை வலியுறுத்துவதாக எனது உரையை அமைத்துக் கொண்டேன் . மனநிறைவான நிகழ்வாக அமைந்தது . சிறிய அளவிலான கூட்டம் என்றாலும் ஒருசிலரைத் தவிர அனைவரும் பார்வையற்றவர்களே . அவர்களோடு பேசிய தருணங்கள் நாம் பார்த்திராத உலகத்தைக் காட்டின . ஒருவர் ‘ மாற்றுத்திறனில்  21 வகை உள்ளதாக அரசு வரையறுத்து இருக்கிறது . எல்லோரையும் ஒரே மாதிரியாகக் கருதுவது மாற வேண்டும் ’ என்றார் . ‘ நடக்க இயலாதவர்களையும் எங்களையும் எப்படி ஒன்றாகக் கருத முடியும் ’ என்ற கேள்வியில் உறுதியாக இருந்தார் . ‘ நடக்க இயலாதவர் தன்னால் இயல்பாகத் தனித்துச் ...

ரவிகாந்த் கிசானா எழுதிய 'சவர்ணர்களைச் சந்தியுங்கள்' (Meet the Savarnas) நூல் குறித்து….

            ஹைதராபாத்தில் உள்ள வோக்ஸன் பல்கலைக்கழகத்தில் (Woxsen University) இணைப் பேராசிரியராக உள்ள ரவிகாந்த் கிசானா இனவரைவியலில் ஆர்வமுடையவர். குறிப்பாக சாதிகள் குறித்து எழுதி வருகிறார். அவரது 'சவர்ணர்களைச் சந்தியுங்கள்' நூல் ‘அற்பத்தனங்கள் எல்லாவற்றையும் உடைத்த இந்திய மில்லினியல்கள்’ (Indian Millennials Whose Mediocrity Broke Everything) என்ற துணைத் தலைப்புடன் 2025 மே மாதம் வெளியானது. அது பற்றி ஜூலையில் ஃபிரண்ட் லைனில் அறிமுகம் வந்தபோதே வாசித்து விட்டு அமேசானில் தேடிய போது விற்றுத் தீர்ந்திருந்தது. மீண்டும் விற்பனைக்கு வந்த போது வாங்கி வாசித்தேன். நேற்று (28.12.2025) ஆங்கில இந்து நாளேட்டிலும் அந்த நூல் குறித்த பத்தி ஒன்று எழுதப்பட்டிருந்தது. இவை எல்லாமும் சேர்ந்து தமிழில் அது பற்றி எழுத வேண்டும் என்ற ஆர்வத்தை உண்டாக்கிவிட்டன.           இதில் ரவிகாந்த், சவர்ணர்கள் என்போர் யாவர்? சாதியை ஏன் பழைய விஷயமாகச் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்? சவர்ணங்களின் ‘நாங்கள் சாதி பார்ப்பதில்லை’ என்னும் புகழ் பெற்ற வாசகம் அவர்களின் சாதி உணர்...

இராணிப்பேட்டை அமுதாவும் அதிபர் டிரம்ப்பும்

கடந்த 2026  ஜனவரி 09 ஆம் தேதி இராணிப்பேட்டை மாவட்டம் ,  பொன்னேரியில் முதல் அமைச்சர் கலந்துகொண்ட ‘ உங்க கனவ சொல்லுங்க ’ நிகழ்ச்சி நடைபெற்றது . இதில் கனவைச் சொல்ல அழைக்கப்பட்ட இராணிப்பேட்டை மாவட்டம் , காவேரிப்பாக்கம் ஒன்றியம் , கரிவேடு ஊராட்சி , சித்தஞ்சி கிராமத்தைச் சேர்ந்தவரும் அதே கிராமத்தில் செயல்பட்டு வரும் கங்கையம்மன் மகளிர் சுயஉதவிக் குழுவின் ஊக்குநருமான எம் . அமுதா தனது கனவைச் சொன்னார் .  பதினைந்து ஆண்டுகளாக பல்வேறு கடனுதவிகளைப் பெற்று மாவு அரைக்கும் எந்திரந்தின் மூலம் வருமானம் ஈட்டி வரும் அமுதா எஸ்சி / எஸ்டி மக்களுக்கு மானியக் கடன் கிடைப்பதாகவும் தங்களுக்கு நேரடிக் கடன் மட்டுமே கிடைப்பதாகவும் குறைபட்டுக் கொண்டார் . அவர் பேச்சில் இருந்த முக்கியமான விஷயம் ‘ எஸ்சி எஸ்டிக்கெல்லாம் குடுத்தா நாங்க எங்க போறது ’ என்கிற அழுத்தம் தான் . அவரது தேவையைக் கேட்டுப் பெறுவதில் அவருக்கு உரிமை உண்டு . ஆனால் ‘ எஸ்சி எஸ்டிகளுக்குக் கிடைக்கிறது எங்களுக்குக் கிடைக்கவில்லை ’ என்கிற ஒப்பீடு சரியானதல்ல . தவிர , இதை அவரது தனிப்பட்ட கருத்து என்பதை விட கூட்டுச் சமூகத்தின் மனநிலை என்பதற்கு அ...