Skip to main content

தொடரும் துயரம்

 பள்ளி உணவு சமைப்பதில் மீண்டும் தொடரும் வன்கொடுமை.


கரூர் மாவட்டம் சின்னரெட்டிபட்டியின் பஞ்சாயத்து யூனியன் நடுநிலைப்பள்ளியில் முதலமைச்சர் காலை உணவு திட்டத்தின் கிழ் சமையலராகப் பணிபுரிந்த நிரோஜாவை டிசம்பர் 16 ஆம் தேதி சமைக்க விடாமல் தடுத்துள்ளனர் சாதி இந்துக்கள். பள்ளி தலைமை ஆசிரியர் பானுமதி, மகளிர் திட்ட கிளை மேலாளர் சத்யா ஆகியோரும் குற்றத்திற்குத் துணையாக இருந்திருக்கின்றனர். ஏறக்குறைய இரண்டு வாரங்களுக்கு பிறகு சம்பவம் வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது. 




2018 இல் திருப்பூர் அருகில் உள்ள திருமலைக்கவுண்டன்பாளையம் அரசு பள்ளியில் பட்டியலினத்தைச் சார்ந்த பாப்பாள் என்பவரைச் சமையல் செய்யவிடாமல் தடுத்தனர். மிகுந்த போராட்டத்திற்குப் பிறகு வழக்கு பதிவு செய்யப்பட்டு சமீபத்தில் தீர்ப்பு வெளியானது. குற்றம் சாட்டப்பட்ட 36 பேரில் 25 பேர் விடுவிக்கப்பட்டனர். 4 நபர்கள் மரணம். 6 பேருக்கு 2 ஆண்டு சிறைத் தண்டனையும் 5 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது. இது மிகவும் குறைவான தண்டனை என்று வழக்கறிஞர் ப.பா.மோகனும் அதிருப்தியை வெளிப்படுத்தி இருந்தார்.


குறைவான தண்டனையும் அபராதமும் விதித்தல், குற்றவாளிகளை விடுவித்தல், சாட்சிகள் பிறழ்தல், பொய்யான ஆவணங்களின் அடிப்படையில் முடிவுக்கு வருதல், அரசு அலுவலர்களின் சாதிவெறி, வழக்கை நடத்துவதில் அரசு எந்திரத்தின் மெத்தனம் என எல்லாமும் சேர்ந்து சாதிஇந்துகளைக் காப்பாற்றுவதால் இது போன்ற குற்றங்கள் தொடர்கின்றன.


இது கண்டிக்கப்பட வேண்டும்.


செய்தி ஆதாரம்: The Hindu 29.12.2025


பாப்பாள் சம்பவம் குறித்த இணைப்பு 

https://share.google/ICIkSlzrjeGdekKIh

Comments

Popular posts from this blog

ரவிகாந்த் கிசானா எழுதிய 'சவர்ணர்களைச் சந்தியுங்கள்' (Meet the Savarnas) நூல் குறித்து….

            ஹைதராபாத்தில் உள்ள வோக்ஸன் பல்கலைக்கழகத்தில் (Woxsen University) இணைப் பேராசிரியராக உள்ள ரவிகாந்த் கிசானா இனவரைவியலில் ஆர்வமுடையவர். குறிப்பாக சாதிகள் குறித்து எழுதி வருகிறார். அவரது 'சவர்ணர்களைச் சந்தியுங்கள்' நூல் ‘அற்பத்தனங்கள் எல்லாவற்றையும் உடைத்த இந்திய மில்லினியல்கள்’ (Indian Millennials Whose Mediocrity Broke Everything) என்ற துணைத் தலைப்புடன் 2025 மே மாதம் வெளியானது. அது பற்றி ஜூலையில் ஃபிரண்ட் லைனில் அறிமுகம் வந்தபோதே வாசித்து விட்டு அமேசானில் தேடிய போது விற்றுத் தீர்ந்திருந்தது. மீண்டும் விற்பனைக்கு வந்த போது வாங்கி வாசித்தேன். நேற்று (28.12.2025) ஆங்கில இந்து நாளேட்டிலும் அந்த நூல் குறித்த பத்தி ஒன்று எழுதப்பட்டிருந்தது. இவை எல்லாமும் சேர்ந்து தமிழில் அது பற்றி எழுத வேண்டும் என்ற ஆர்வத்தை உண்டாக்கிவிட்டன.           இதில் ரவிகாந்த், சவர்ணர்கள் என்போர் யாவர்? சாதியை ஏன் பழைய விஷயமாகச் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்? சவர்ணங்களின் ‘நாங்கள் சாதி பார்ப்பதில்லை’ என்னும் புகழ் பெற்ற வாசகம் அவர்களின் சாதி உணர்...

தத்துவங்கள் குறித்த உரையரங்கம்

  தத்துவங்கள் குறித்த உரையரங்கம் கோவை பீளமேட்டில் ‘ பார்வையற்றோருக்கான அறிவே துணை ஆய்வு மையம் ’ தத்துவ அறிமுகக் கூட்டம் ஒன்றை 2026 மே 29 அன்று நடத்தியது . அதன் தலைவர் பேராசிரியர் சுகுமாரன் நிகழ்வை ஒருங்கிணைத்து இருந்தார் . பெரியாரியம் குறித்து   கு . ராமகிருஷ்ணன் பேசினார். இணைய வழியில் கலந்துகொண்ட   தியாகு மார்க்சியம் குறித்துப் பேசினர் .  நான் அம்பேத்கரியம் பேசினேன் . அம்பேத்கரை எப்படி வாசிக்கத் தொடங்குவது என்பதில் தொடங்கி கூட்டுச் சிந்தனையில் அம்பேத்கரின் அவசியத்தை வலியுறுத்துவதாக எனது உரையை அமைத்துக் கொண்டேன் . மனநிறைவான நிகழ்வாக அமைந்தது . சிறிய அளவிலான கூட்டம் என்றாலும் ஒருசிலரைத் தவிர அனைவரும் பார்வையற்றவர்களே . அவர்களோடு பேசிய தருணங்கள் நாம் பார்த்திராத உலகத்தைக் காட்டின . ஒருவர் ‘ மாற்றுத்திறனில்  21 வகை உள்ளதாக அரசு வரையறுத்து இருக்கிறது . எல்லோரையும் ஒரே மாதிரியாகக் கருதுவது மாற வேண்டும் ’ என்றார் . ‘ நடக்க இயலாதவர்களையும் எங்களையும் எப்படி ஒன்றாகக் கருத முடியும் ’ என்ற கேள்வியில் உறுதியாக இருந்தார் . ‘ நடக்க இயலாதவர் தன்னால் இயல்பாகத் தனித்துச் ...

இராணிப்பேட்டை அமுதாவும் அதிபர் டிரம்ப்பும்

கடந்த 2026  ஜனவரி 09 ஆம் தேதி இராணிப்பேட்டை மாவட்டம் ,  பொன்னேரியில் முதல் அமைச்சர் கலந்துகொண்ட ‘ உங்க கனவ சொல்லுங்க ’ நிகழ்ச்சி நடைபெற்றது . இதில் கனவைச் சொல்ல அழைக்கப்பட்ட இராணிப்பேட்டை மாவட்டம் , காவேரிப்பாக்கம் ஒன்றியம் , கரிவேடு ஊராட்சி , சித்தஞ்சி கிராமத்தைச் சேர்ந்தவரும் அதே கிராமத்தில் செயல்பட்டு வரும் கங்கையம்மன் மகளிர் சுயஉதவிக் குழுவின் ஊக்குநருமான எம் . அமுதா தனது கனவைச் சொன்னார் .  பதினைந்து ஆண்டுகளாக பல்வேறு கடனுதவிகளைப் பெற்று மாவு அரைக்கும் எந்திரந்தின் மூலம் வருமானம் ஈட்டி வரும் அமுதா எஸ்சி / எஸ்டி மக்களுக்கு மானியக் கடன் கிடைப்பதாகவும் தங்களுக்கு நேரடிக் கடன் மட்டுமே கிடைப்பதாகவும் குறைபட்டுக் கொண்டார் . அவர் பேச்சில் இருந்த முக்கியமான விஷயம் ‘ எஸ்சி எஸ்டிக்கெல்லாம் குடுத்தா நாங்க எங்க போறது ’ என்கிற அழுத்தம் தான் . அவரது தேவையைக் கேட்டுப் பெறுவதில் அவருக்கு உரிமை உண்டு . ஆனால் ‘ எஸ்சி எஸ்டிகளுக்குக் கிடைக்கிறது எங்களுக்குக் கிடைக்கவில்லை ’ என்கிற ஒப்பீடு சரியானதல்ல . தவிர , இதை அவரது தனிப்பட்ட கருத்து என்பதை விட கூட்டுச் சமூகத்தின் மனநிலை என்பதற்கு அ...