Skip to main content

ஏழைகள் நடமாடும் குப்பைத் தொட்டியா?

 

ஏழைகள் நடமாடும் குப்பைத் தொட்டியா?

உலகப் பிரபலமான ஒருவர் 25.08.2024 அன்று வானொலியில் ஆற்றிய உரையில் சுற்றுச்சுழல் – பிளாஸ்டிக் கழிவு – மறு பயன்பாடு – மறுசுழற்சி பற்றிக் குறிப்பிட்டார். பிளாஸ்டிக் கழிவுகளால் சுற்றுச்சூழல் மாசுபடுகிறது என்கிற அவரது கூற்றில் உண்மை இல்லாமல் இல்லை. பிளாஸ்டிக் கழிவுகளைக் குறைப்பதற்கு அவர், பயன்படுத்திய பிளாஸ்டிக் பொருள்களை அப்படியே தூக்கி வீசிவிடாமல் அது தேவைப்படுகிறவர்களுக்குக் கொடுக்கலாம் என்றார். அதற்கு அவரே ஓர் உதாரணமும் சொன்னார்.

‘பிளாஸ்டிக் பொம்மையை வைத்து விளையாடும் குழந்தை அந்த பொம்மை மீது சலிப்படைந்து விட்டால் அதை வீசி எறிந்து விடாமல், ஒரு சிறு பொம்மை கூட கிடைக்காமல் ஏங்கிக் கொண்டிருக்கும் குழந்தைகளுக்கு கொடுத்து விடலாம்’ என்பது தான் அந்த உதாரணம். அப்படிச் செய்வதால் பிளாஸ்டிக் கழிவுகளை மறுபயன்பாட்டுக் கொண்டு வந்து சுற்றுச்சூழலைக் காப்பாற்றலாமாம். எனக்கு இறந்து நாற்றமடிக்கும் விலங்குகளைச் சாப்பிடுவதாலே காக்கைக்கு ‘ஆகாயத்தோட்டி’ என்றும் கழுதைப்புலிக்கு ‘வனத்தோட்டி’ என்றும் அறிவுஜீவிகள் ‘சிறப்பு’ப் பெயர்கள் வைத்திருப்பதும் வீட்டில் மீந்து போன உணவுக்காகவே நடமாடும் குப்பைத் தொட்டிகள் போல நாய்கள் வளர்ப்பதும் நினைவுக்கு வந்து போனது. 


இங்கு ஒரு குழந்தைக்கு விளையாடிச் சலிப்படைகின்ற அளவுக்கு பொம்மைகள் கிடைப்பதும் அது கிடைக்காமல் இன்னொரு குழந்தை ஏங்கிக் கொண்டிருக்க வேண்டிய சூழலும் இருக்கத்தான் செய்கிறது. சுற்றுச்சூழல் பிரச்சினையை விட இது முக்கியமான பிரச்சினை இல்லையா? இந்த இடைவெளியை இட்டு நிரப்புவதற்கு பொம்மையை கை மாற்றிக் கொடுப்பது தான் தீர்வா? உண்மையில் ஏழைகளால் சுற்றுச்சூழலுக்கு ஏற்படுகின்ற பாதிப்பு மிக மிகக் குறைவு. இயற்கையைப் பாதுகாப்பதில் அவர்களே முதன்மை இடம் வகிக்கிறார்கள். ஆனால் அவர்களிடம் வாங்கும் திறன்படைத்தவர்கள் பயன்படுத்திய பழைய பொருள்களைக் கொடுத்து அவர்களை மறுபயன்பாட்டுக்கான களமாகக் கருதுவது எந்த விதத்தில் நியாயமானது? பொம்மைக்காக ஏங்கும் குழந்தை புதிய பொம்மையை விலைகொடுத்து வாங்கி விளையாடுகிற அளவுக்கு மாற்றத்தைக் கொண்டுவருவதற்கான செயல்பாடு தானே தேவை. அதை நாம் எப்போது பேசப் போகிறோம் உலகப் பிரபலமே!

Comments

Popular posts from this blog

கிழக்கில் இருந்து மேற்கு நோக்கி ‘ஷெர்லாக் ஹோம்ஸ் வாழ்ந்த வீடு’

இலக்கியக் கட்டுரை என்றால் வரையறுக்கப்பட்ட வடிவத்தோடும் தேர்ந்தெடுக்கப்பட்ட சொற்களின் சேர்க்கையோடும் எழுதப்படுவது என்கிற நம்பிக்கை பரவலாக இருந்து வருகிறது . இந்தச் சட்டகத்திற்குள் சிக்காமல் ஜனரஞ்சகமாக , அதே சமயம் புனைவிற்கான மொழியில் அமைந்திருக்கிறது ‘ ஷெர்லாக் ஹோம்ஸ் வாழ்ந்த வீடு ’. இராமனாதனின் இந்த நூலில் இலக்கியம் , திரை , ஆளுமைகள் , அனுபவங்கள் என்னும் பகுப்பின் கீழ் 28 கட்டுரைகள் இருக்கின்றன . அவை யாவும் காலச்சுவடு உள்ளிட்ட இதழ்களில் வெளி வந்தவை . இந்நூலை வாசிக்கிறவர்கள் அவரவர் வாசிப்பு , அனுபவம் சார்ந்து பொருத்திப் பார்த்துக் கொள்ள முடியும் . நூலாசிரியர் லண்டனில் உள்ள ஷெர்லாக் ஹோம்ஸ் அருங்காட்சியகத்திற்குச் சென்ற அனுபவத்தை வைத்துக்கொண்டு எழுதப்பட்ட ‘ ஷெர்லாக் ஹோம்ஸ் வாழ்ந்த வீடு ’ முதல் கட்டுரையாக இடம் பெற்றிருக்கிறது . ஒரு படைப்பு பல்வேறு அடையாள வேறுபாடுகளைத் தாண்டி வாசிப்பு மனங்களை இணைக்கும் வல்லமை வாய்ந்தது என்பதை ஸ்பானிய மொழியைப் பேசும் ஒரு சிறுவனுடன் தான் உரையாடிய வேடிக்கையான சம்பவத்தை வைத்து விவரித்து இருக்கிறார் . அதாவது அந்தச் சிறுவன் நிறுத்தி நிறுத்தி ஆங்கிலத்தில் இராமன...

அனிதா - நீட் - தூய்மை பாரதம் - சில விவாதக் குறிப்புகள்

அனிதா - நீட் - தூய்மை பாரதம் - சில விவாதக் குறிப்புகள் ஞா. குருசாமி, ஹைதராபாத் மத்திய பல்கலைக்கழக ஆய்வாளர் ரோகித் வெமுலா, டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக ஆய்வாளர் முத்துக்கிருஷ்ணன், பன்னிரண்டாம் வகுப்பு தேர்வில் 1176 மதிப்பெண்ணைப் பெற்று மருத்துவப் படிப்பை எதிர்நோக்கி இருந்த அனிதா என ஆராய்ச்சிலும் கல்வியிலும் தனித்திறன் பெற்ற திறமைசாலிகளை அரசு எந்திரம் குறிவைத்து தற்கொலைக்கு உள்ளாக்கும் போக்கு வருத்தம் அளிக்கிறது. இந்த தேசத்தில் வருணாசிரமத்தின் அடிப்படையில் நிகழ்த்தப்படும் சதிக்கொடுமை ஒன்றும் புதியதல்ல. ஏகலைவர் காலம் தொடங்கி நடத்து வருகிறது. ஏகலைவர், நந்தர் என்னும் மிக நீண்ட வரிசையில் இன்றைக்கு அனிதாவை இழந்திருக்கிறது இந்த சமுதாயம் என்று மிகவும் மொன்னையான சமாதானத்தைத் தற்காலிகமாகக் கூடத் தேடிக்கொள்ள மனம் மறுக்கிறது. தமிழ்நாட்டில் சமீபத்தில் முக்கியக் கவனம் பெற்ற நிகழ்வு ஜல்லிக்கட்டுக்கான தடையை நீக்கக்கோரிய போராட்டம். சமுதாயத்தின் எல்லா தரப்பினரும் ஒருங்கிணைந்து களம் கண்டனர். அது தமிழர்களின் ரத்தத்திலேயே ஊறிப்போய் உறங்கிக் கிடந்த வீரத்தின் வெளிப்பாடு என்றெல்லாம் பேசப்பட்டத...

அண்ணாவின் நாடகங்கள்

  அண்ணாவின் நாடகங்கள் ஞா . குருசாமி jeyaseelanphd@yahoo.in படைப்பாளியின் படைப்பு மனம் சுயம்பல்ல . அது வேறு சில கருத்தியல்களின் கூட்டுப் பிழிவு . ஆழ்மனதில் எப்போழுதோ பதிவான ஏதோ ஒன்று அதற்கேற்ற சூழல் அமையும் போது படைப்பாக மாறுகிறது . மொழி – சூழல் – கருத்தியல் ஆகியன ஒருங்கிணையும் புள்ளி படைப்பு மனமாக மாறும் . அதனாலேயே படைப்புகள் மொழி , சூழல் , கருத்தியல்களைப் பிரதிபலிப்பனவாக இருக்கும் . அண்ணாவின் நாடங்களைப் புரிந்து கொள்வதற்கு அவரது காலத்திய சூழல் , கருத்தியலைப் புரிந்தாக வேண்டும் . 1916 நவம்பர் 20 இல் தொடங்கப் பெற்ற நீதிக்கட்சி தமிழகத்தில் 1920 டிசம்பர் முதல் 1937 வரை ஆட்சியில் இருந்தது . 1937 முதல் 1967 வரை இடையில் ஒரு ஆறு வருடங்களை தவிர்த்து காங்கிரஸ் ஆட்சியில் இருந்தது . 1967 இல் திமுக வெற்றி பெற்றது . அண்ணா முதலமைச்சர் ஆனார் . அண்ணா 1920 களில் நீதிக்கட்சி சார்பில் போட்டியிட்டது , பெரியாரைத் தலைவராக ஏற்றுக் கொண்டது . பெரியாரிடம் முரண்பட்டது , திமுகவை ஆரம்பித்தது ஆகியன அண்ணாவின் அரசியல் பயணத்தில் முக்கியமானவை . இந்நான்கு கட்டத்திலும் அண்ணாவின் படைப்பு மனம் ஒரே மா...