Skip to main content

அட்டைப்படத்தில் ஆம்ஸ்ட்ராங்

அட்டைப்படத்தில் ஆம்ஸ்ட்ராங்

உயிர் எழுத்து அட்டைப் படத்திற்கு எப்போதுமே ஒரு சிறப்பு இருக்கும். பெரும்பாலும் அன்றைய மாதத்தில் பேசுபொருளாக இருக்கும் அரசியல், சமூக ளுமைகளின் படங்களைத் தாங்கி வரும். உதாரணமாக, இரோம் ஷர்மிளா தேசிய அளவில் கவனம் பெறத் தொடங்கிய நேரத்தில் அவரது படம் தமிழ்ச் சிறுபத்திரிகைச் சூழலில் முதன்முதலில் உயிர் எழுத்தில் தான் அட்டைப்படமாக வந்தது. அதன் வழி பலர் இரோம் ஷர்மிளா பற்றி அறியலானார்கள்.

ஒருமுறை பிரபஞ்சன் சிகரெட் புகைப்பது போன்ற அட்டைப்படம் உயிர் எழுத்தில் வந்தது. அது தன்னொழுக்கத்தில் கனிந்து சிறந்த சில அறிவுஜீவிகளிடம் புகைச்சலை உண்டாக்கியது. அதற்காக அவர்கள் கண்டபடி அபிநயம் பிடித்து விதவிதமான அடவுகளில் ஆடி முடித்தார்கள். இப்படி உயிர் எழுத்து அட்டைப்படங்கள் குறித்து நேர்/எதிர் மறையாக நிறைய சொல்ல முடியும். இதுவரை வெளிவந்த அட்டைப் படங்களின் வரிசையை மையப்படுத்தி அவை பேசிய அரசியல் குறித்தே விரிவான கட்டுரையை எழுதலாம். அந்த வகையில் உயிர் எழுத்து பாராட்டப்பட வேண்டிய சிறு பத்திரிகை. நிற்க. 

ரஷ்யாவில் சோசலிச யதார்த்த வாதம் என்ற கோட்பாட்டைப் பிடித்துத் தொங்கிக் கொண்டு தாங்கள் கருதுகிறதும் தமக்கு லாபம் தருகிறதுமான ஒரு வித அரசியலைப் பற்றி மட்டுமே பேசுவதெல்லாம் முற்போக்கு என்றும் மற்றவைகளைப் பிற்போக்கு என்றும் ஸ்டாலின் காலத்தில் முத்திரையிட்டனர். இந்த ஜிகினா வேலையை அப்படியே இன்றைய உள்ளூர் அரசியல் சூழலில் சமூகநீதியோடும் இணைத்துப் பேசலாம். அந்த அளவுக்கு அந்தமுற்போக்கும்இந்தசமூகநீதியும் ஒத்துப் போகிறது. அவர்கள் பேசுவது மட்டுமே சமூகநீதியாகவும் எதிர்த்தரப்பார் சமூகநீதியைப் பேசினாலுமே அதை வேண்டுமென்றே குதர்க்கமாகப் புரிந்து கொள்ளும்படியான சூழலை மக்களுக்கு சமூகநீதிக் குத்தகைதாரர்கள் உருவாக்கி வருகிறார்கள். அதன் விளைவாகத்தான் தொடர்ந்து உண்மையான சமூகநீதி பற்றி பேசிவந்த ஆர்ம்ஸ்ட்ராங்கை ரவுடி என்று முத்திரை குத்தினார்கள். இதே மாதிரியான ஒரு இறப்பு அந்தப் பக்கம் நிகழ்ந்திருக்குமானால் அவரை 'சமூகநீதி' காவலராக, இனமானத் தலைவராக அவர்கள் ஆக்கியிருக்கக் கூடும். அவர்களைப் பொறுத்தமட்டில் அவர்களை யார் விமர்சித்தாலும் அவர்களைப் பொதுச்சமூகத்தில் இருந்து விலக்கும்படியான அடையாளத்தை ஒட்டி விடுவார்கள். அவர்களின் வரலாறு அப்படி.

    இதை மிகச் சரியாகப் புரிந்து கொண்ட ஊடகங்களில் ஒரு சில மட்டும் ஆர்ம்ஸ்ட்ராங்கின் சமூகப் பணியைச் சரியாக  மதிப்பீடு செய்து எழுதின. ஆம்ஸ்ட்ராங் தரப்பினர் அவர்தம் சமூகப்பணிகள் குறித்துப் புள்ளிவிவரமாகப் பேசினர். இதனால் சமூகநீதிக் குத்தகைதாரர்களின் 'ரவுடி' அவதூறு பிசுபிசுத்துப் போனது.

இந்தக் களேபரங்களுக்கு மத்தியில் தான் ஆம்ஸ்ட்ராங் படத்தை போதிமுரசு அட்டையில் வெளியிட்டது. ஆம்ஸ்ட்ராங் பௌத்தச் செயல்பாட்டாளராக இருந்தமையால் பௌத்தக் கருத்தியலைப் பேசும் போதிமுரசு அவரைச் சிறப்பித்திருக்கலாம். அப்படி ஒரு தொடர்பு உயிர் எழுத்திற்கும் ஆம்ஸ்ட்ராங்கிற்கும் இல்லை. ஆனாலும் அவரை உயிர் எழுத்து (2024 ஆகஸ்ட்) அட்டைப்படமாக வைத்துத்திருக்கிறது. சிறு பத்திரிகை உலகில் இது போன்ற நிகழ்வுகள் அபூர்வமானது. உயிர் எழுத்து-க்குப் பாராட்டுக்கள். 

குறிப்பு : இந்தப் பதிவு வெளியிடப்பட்ட பின் வெளியான நீலம் இதழிலும் ஆம்ஸ்ட்ராங் அட்டைப்படமாக வைக்கப்பட்டிருந்தார். 

......................

Comments

Popular posts from this blog

டவுசர் அக்காவுக்கு வீர வணக்கம்

1990 களில் எங்களூர் பகுதியில் டவுசர் அக்கா மிகப் பிரபலம். சாயங்காலம் ஆகிவிட்டால் டவுசரோடு காணப்படுவார். ஆகையால் அவருக்கு அந்தப் பெயர் வாய்த்துவிட்டது. இன்றைக்குப் பெண்கள் டவுசர் அணிவது நகரங்களில் இயல்பாகிவிட்டது. கிராமங்களுக்கு அது இன்னும் முழுமையாக வந்து சேரவில்லை. ஆனால் நாற்பது வருடங்களுக்கு முன்னால் கிராமங்களில் டவுசர் அணிவது எப்படி இருந்திருக்கும் என்பதை நினைத்துப் பார்த்தோமானால் இன்றைக்கும் டவுசர் அக்காவை வியக்காமல் இருக்க முடியாது. கை வைத்த பனியனும் டவுசரும் அணிந்திருக்கும் அக்கா எப்போதும் டவுசர் பையில் நான்கு அங்குல நீளத்தில் கைபிடி தெரியும் படி கத்தி ஒன்றை வைத்திருப்பார். பகல் நேரங்களில் சேலையில் இருந்தாலும் டவுசரும் கத்தியும் உள்ளுக்குள் இருக்கத்தான் செய்யும். ஆண்கள் பெண்கள் யாராக இருந்தாலும் டவுசர் அக்காவுக்கு ‘ மாமா – அக்கா ’ தான். வாய்விட்டு சிரிக்கச் சிரிக்கப் பேசுவாள். கூலிக்கென்று வேலைக்குப் போக மாட்டாள். சம்பாதிப்பது பற்றி யோசிப்பதே கிடையாது. குடும்பம் கிடையாது. யார் வீட்டில் கொடுத்தாலும் வாங்கிச் சாப்பிட்டுக் கொள்வாள். யாரேனும் தோட்ட வேலைக்குக் கூப்பிட்டால் ‘ போங்க … வ...

அயோத்திதாசரின் விடுதலைப் பெளத்தம்

  இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தமிழ்ச் சமூகத்தின் அறிவுஜீவித அடையாளமாகத் திகழும் அயோத்திதாசர் , அக்காலத்தின் வாழ்க்கைச் சூழலுக்கும் நிலவிய அரசியல் தன்மைக்கும் ஏற்ப பெளத்தத்தை முன்வைத்தவர் . அவர் காலத்திய வரலாற்றுத் திரிபுகளை அம்பலப்படுத்தினார் . அதற்காக சடங்குகள் , பழக்க வழக்கங்கள் , இலக்கிய இலக்கணங்கள் , நிகண்டுகள் உள்ள்ளிட்ட எழுத்தாவணங்கள் ஆகியவற்றைப் பயன்படுத்தினார் . வரலாற்றைத் திரிபு செய்தவர்கள் பயன்கொண்ட சான்றுகளையே அயோத்திதாசரும் பயன்கொண்டு அதன் மீது வேறொரு வாசிப்பை நிகழ்த்தினார் . ஒரு வாசிப்பி ன் வழி வரலாற்றை எழுதுவதற்கும் புரிந்துகொள்வதற்குமான அரசியலை வெளிப்படுத்தியதுடன் தனது அரசியல் நிலைப்பாட்டையும் முன்வைத்தார் . தமிழ்ச்சமூகத்தை ஆதி திராவிடர் , திராவிடர் எனப் பகுத்து ஆதி திராவிடர்களைப் பூர்வப் பெளத்தர்கள் என்றார் . அதற்காக அவர் முன் வைத்த வாதங்கள் பூர்விகமான மண்ணின் மணம் கொண்டவை என்பது குறிப்பிடத்தக்கது . அயோத்திதாசர் அயோத்திதாசரின் காலத்தில் வரலாறு , பண்பாடு , இலக்கியம் , தத்துவம் ஆகியவற்றை ஐரோப்பிய வெளிச்சத்தில் பார்க்கும் போக்கு உருவாகிவிட்டிருந்தது . இந்திய...

ஹரிஜனங்களும் சதபத பிராமண கதைகளும்

ஹரிஜனங்களும் சதபத பிராமண கதைகளும் 1933 இல் எம்.ஆர்.ஜம்புநாதன் எழுதிய நூல் சதபத பிராமணம். வேதங்கள் , உபநிடதங்கள் ஆகியவற்றின் செய்திகளை விளக்கும் வண்ணம் எதையாவது எழுதும் வழக்கமுடைய ஜம்புநாதன் , யசூர் வேதத்தின் சில பகுதிகளை விளக்கும் முகமாக சதபத பிராமணத்தை எழுதியிருக்கிறார். அதில் 88 விளக்கக் குறிப்புகள் இடம் பெற்றிருக்கின்றன. அவற்றை அவர் ‘ கதைகள் ’ என்கிறார். உண்மையில் அவற்றைக் கதைகள் என்று சொல்வது கூட ரெம்ப அதிகம் தான்.  இந்நூலை அவர் ஹரி ஜனங்களுக்குச் சமர்ப்பித்திருக்கிறார். அதற்கான காரணத்தை அவரே விவரிக்கிறார். நூலில் ருத்திரனின் இயல்புகளை விவரிக்கும் அவர் ‘ ருத்திரனின் குணங்கள் அனைத்தும் ஹரிஜனங்களிடம் உள்ளது ’ என்பதாக அரிய கண்டுபிடிப்பை நிகழ்த்துகிறார். இந்த ஒப்பீட்டின் வழி அவரது அறிவின் அளவு துலக்கப்பட்டிருக்கிறது. இவற்றையெல்லாம் தாண்டி நூல் எதற்காக எழுதப்பட்டிருக்கும் என யோசித்தால் ஹரிஜனங்களை இந்துக்களாகச் சித்திரிப்பதே நோக்கமாக இருந்திருக்க வேண்டும் என்பது தெரிகிறது. சான்றாக , ருத்திரனுக்கும் ஹரிஜனங்களுக்கும் அவர் சொல்லும் ஒற்றுமைக் காரணங்கள் சிலவற்றைப் பார்க்கலாம். உலகம் ...