Skip to main content

அகவும் பூக்கள் : சமகால மரபுக் கவிதையில் ஓர் அடையாளம்

 

1990 களுக்குப் பிறகு தமிழில் மரபுக் கவிதைகள் எழுதும் போக்கு அருகிவிட்டது என்றே சொல்ல வேண்டும். வானம்பாடியும் அதைத் தொடர்ந்து வெளியான இதழ்களும் புதுக்கவிதைக்குத் தந்த ஆதரவு, வாசிப்பு மனநிலையின் கால மாற்றம் ஆகியன இணைந்து தமிழ்க் கவிதை உலகை புதுப்பித்துக் கொண்டே இருந்தது. புதுக்கவிதையிலும் கூட ஒவ்வொரு பத்தாண்டுகளுக்கு ஒருமுறை கவிதையின் நுவல்பொருள் மாற்றமடைந்து கொண்டே வந்திருக்கிறது. 

செ.நிறைமதி

யாப்பு கற்று விருத்தங்களின் வடிவங்களை உள்வாங்கி யாரும் எழுதத் தயாரில்லை. இலக்கணத்திற்குள் நின்று கவிதை எழுதுவது என்பது நீளமான கயிற்றில் கட்டப்பட்ட மாட்டின் சுதந்திரத்தை ஒட்டியது. கற்பனையின் முழு அடர்த்தியையும் அப்படியை இறக்கி வைத்துவிட முடியாது. சரியான சொற்களைத் தேட வேண்டும். சொற்களின் கட்டமைப்பு அமைந்துவிடுமானால் அது வாசகனுக்கு உணர்வைக் கடத்துவதில் போதாமையைக் கொண்டிருக்கும். அதனாலேயே மரபுக் கவிதை அருகி வருகிறது. இந்தச் சூழ்நிலையில் அகவும் பூக்கள் நூல் வழி மரபுக் கவிஞராக தம்மை நிறுவியிருக்கிறார் செ.நிறைமதி. வடிவம் கலாவதி நிலையில் இருந்தாலும் பழமையை விட்டுவிடக் கூடாது என்கிற விருப்பமும் ஆசையும் அவரை மரபுக் கவிதை எழுத வைத்திருக்கும் என்று நினைக்கின்றேன்.

நூறு ஆசிரியப்பாக்களில் அமைந்து இருக்கும் இந்நூலில் நிறைய விஷயங்களை மரபுக்குள் நின்று எழுதிப் பார்த்திருக்கிறார் நூலாசிரியர். புத்தகத்திற்கும் தனக்குமான உறவைச் சொல்லும் இடத்து ‘நூலே அன்னை மடியும் அன்பும் நீயே’ என்கிறார். அன்னையின் மடி போன்று அமைதி, ஆறுதல், மகிழ்ச்சி, அன்பு, நம்பிக்கை, பாதுகாப்பு அனைத்தையும் ஒரு புத்தகத்தால் தந்துவிட முடியும் என்று நிறைமதி நம்பியிருக்கிறார். அதனால் தான் அவரால் அப்படி யோசிக்க முடிகிறது.காதல், கல்வி, ஒற்றுமை, ஆன்மிகம், இயற்கை என எல்லாவற்றையும் மரபுக் கவிதையாக்கி இருக்கிறார். அதே போல 'நிறத்தில் பேதம் இல்லை' கவிதையும் மனதிற்கு நெருக்கமாக இருக்கிறது.

நூலின் அட்டைப்படம்

தொடர்ந்து நிறைமதி புதிய கவிதை நூல்களோடும் கோட்பாடுகளின் தேவையை, வலியுறுத்தலை ஒட்டி எழுதப்பட்ட நவீன கவிதைகளோடும் தனது வாசிப்பை வைத்துக் கொள்வாரேயானால் காலம் கடந்து நிற்கும் நல்ல கவிதைகளை அவரால் தரமுடியும். தருவதற்கான உழைப்பும் ஆர்வமும் அவரிடம் இருக்கிறது. நிறைமதிக்கு வாழ்த்துக்களும் பாராட்டுகளும்.

வெளியீடு : தமிழ் மதுரை அறக்கட்டளை
முதற்பதிப்பு : மே 28, 2023
விலை : ரூ 120/-
நூலைப் பெற : 3842386995

Comments

Popular posts from this blog

கிழக்கில் இருந்து மேற்கு நோக்கி ‘ஷெர்லாக் ஹோம்ஸ் வாழ்ந்த வீடு’

இலக்கியக் கட்டுரை என்றால் வரையறுக்கப்பட்ட வடிவத்தோடும் தேர்ந்தெடுக்கப்பட்ட சொற்களின் சேர்க்கையோடும் எழுதப்படுவது என்கிற நம்பிக்கை பரவலாக இருந்து வருகிறது . இந்தச் சட்டகத்திற்குள் சிக்காமல் ஜனரஞ்சகமாக , அதே சமயம் புனைவிற்கான மொழியில் அமைந்திருக்கிறது ‘ ஷெர்லாக் ஹோம்ஸ் வாழ்ந்த வீடு ’. இராமனாதனின் இந்த நூலில் இலக்கியம் , திரை , ஆளுமைகள் , அனுபவங்கள் என்னும் பகுப்பின் கீழ் 28 கட்டுரைகள் இருக்கின்றன . அவை யாவும் காலச்சுவடு உள்ளிட்ட இதழ்களில் வெளி வந்தவை . இந்நூலை வாசிக்கிறவர்கள் அவரவர் வாசிப்பு , அனுபவம் சார்ந்து பொருத்திப் பார்த்துக் கொள்ள முடியும் . நூலாசிரியர் லண்டனில் உள்ள ஷெர்லாக் ஹோம்ஸ் அருங்காட்சியகத்திற்குச் சென்ற அனுபவத்தை வைத்துக்கொண்டு எழுதப்பட்ட ‘ ஷெர்லாக் ஹோம்ஸ் வாழ்ந்த வீடு ’ முதல் கட்டுரையாக இடம் பெற்றிருக்கிறது . ஒரு படைப்பு பல்வேறு அடையாள வேறுபாடுகளைத் தாண்டி வாசிப்பு மனங்களை இணைக்கும் வல்லமை வாய்ந்தது என்பதை ஸ்பானிய மொழியைப் பேசும் ஒரு சிறுவனுடன் தான் உரையாடிய வேடிக்கையான சம்பவத்தை வைத்து விவரித்து இருக்கிறார் . அதாவது அந்தச் சிறுவன் நிறுத்தி நிறுத்தி ஆங்கிலத்தில் இராமன...

அனிதா - நீட் - தூய்மை பாரதம் - சில விவாதக் குறிப்புகள்

அனிதா - நீட் - தூய்மை பாரதம் - சில விவாதக் குறிப்புகள் ஞா. குருசாமி, ஹைதராபாத் மத்திய பல்கலைக்கழக ஆய்வாளர் ரோகித் வெமுலா, டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக ஆய்வாளர் முத்துக்கிருஷ்ணன், பன்னிரண்டாம் வகுப்பு தேர்வில் 1176 மதிப்பெண்ணைப் பெற்று மருத்துவப் படிப்பை எதிர்நோக்கி இருந்த அனிதா என ஆராய்ச்சிலும் கல்வியிலும் தனித்திறன் பெற்ற திறமைசாலிகளை அரசு எந்திரம் குறிவைத்து தற்கொலைக்கு உள்ளாக்கும் போக்கு வருத்தம் அளிக்கிறது. இந்த தேசத்தில் வருணாசிரமத்தின் அடிப்படையில் நிகழ்த்தப்படும் சதிக்கொடுமை ஒன்றும் புதியதல்ல. ஏகலைவர் காலம் தொடங்கி நடத்து வருகிறது. ஏகலைவர், நந்தர் என்னும் மிக நீண்ட வரிசையில் இன்றைக்கு அனிதாவை இழந்திருக்கிறது இந்த சமுதாயம் என்று மிகவும் மொன்னையான சமாதானத்தைத் தற்காலிகமாகக் கூடத் தேடிக்கொள்ள மனம் மறுக்கிறது. தமிழ்நாட்டில் சமீபத்தில் முக்கியக் கவனம் பெற்ற நிகழ்வு ஜல்லிக்கட்டுக்கான தடையை நீக்கக்கோரிய போராட்டம். சமுதாயத்தின் எல்லா தரப்பினரும் ஒருங்கிணைந்து களம் கண்டனர். அது தமிழர்களின் ரத்தத்திலேயே ஊறிப்போய் உறங்கிக் கிடந்த வீரத்தின் வெளிப்பாடு என்றெல்லாம் பேசப்பட்டத...

ஏழைகள் நடமாடும் குப்பைத் தொட்டியா?

  ஏழைகள் நடமாடும் குப்பைத் தொட்டியா? உலகப் பிரபலமான ஒருவர் 25.08.2024 அன்று வானொலியில் ஆற்றிய உரையில் சுற்றுச்சுழல் – பிளாஸ்டிக் கழிவு – மறு பயன்பாடு – மறுசுழற்சி பற்றிக் குறிப்பிட்டார். பிளாஸ்டிக் கழிவுகளால் சுற்றுச்சூழல் மாசுபடுகிறது என்கிற அவரது கூற்றில் உண்மை இல்லாமல் இல்லை. பிளாஸ்டிக் கழிவுகளைக் குறைப்பதற்கு அவர், பயன்படுத்திய பிளாஸ்டிக் பொருள்களை அப்படியே தூக்கி வீசிவிடாமல் அது தேவைப்படுகிறவர்களுக்குக் கொடுக்கலாம் என்றார். அதற்கு அவரே ஓர் உதாரணமும் சொன்னார். ‘பிளாஸ்டிக் பொம்மையை வைத்து விளையாடும் குழந்தை அந்த பொம்மை மீது சலிப்படைந்து விட்டால் அதை வீசி எறிந்து விடாமல், ஒரு சிறு பொம்மை கூட கிடைக்காமல் ஏங்கிக் கொண்டிருக்கும் குழந்தைகளுக்கு கொடுத்து விடலாம்’ என்பது தான் அந்த உதாரணம். அப்படிச் செய்வதால் பிளாஸ்டிக் கழிவுகளை மறுபயன்பாட்டுக் கொண்டு வந்து சுற்றுச்சூழலைக் காப்பாற்றலாமாம். எனக்கு இறந்து நாற்றமடிக்கும் விலங்குகளைச் சாப்பிடுவதாலே காக்கைக்கு ‘ஆகாயத்தோட்டி’ என்றும் கழுதைப்புலிக்கு ‘வனத்தோட்டி’ என்றும் அறிவுஜீவிகள் ‘சிறப்பு’ப் பெயர்கள் வைத்திருப்பதும் வீட்டில் மீந்து போன...