Skip to main content

அமுதா ஆர்த்தி: சமகால பெண் எழுத்தின் புது வசீகரம்

2019 – இல் அழகிய பெரியவனின் அம்மா உழைப்பதை நிறுத்திக்கொண்டார்என்னும் சிறுகதைத் தொகுப்புக்கான மதிப்புரையை பேசும் புதிய சக்தியில் எழுதியிருந்தேன். அந்த இதழில் தான் அமுதா ஆர்த்தியைத் தெரியும்.

அமுதா ஆர்த்தி

அதில் சைக்கிள் சவுட்டுஎன்ற கதையை எழுதியிருந்தார். நாடோடி இளைஞன், அவன் மீது காதல் கொள்ளும் உள்ளூர் பெண். அவனை ஏற்கனவே திருமணம் செய்துகொண்டதாகச் சொல்லும் திருநங்கை என்று மூவருக்குமான உணர்வுச் சிக்கலை நுட்பமாக விவரித்த கதை அது.  மார்ச் 2020 இல் அவளது உடைமரக்காடும் வெட்டுக்கத்தியும்கதையை காலச்சுவடில் வாசித்தேன். 2022 – இல் அம்ருதாவில் வெற்றுடல் குளம்வாசித்தேன். 2023 ஜனவரியில் காலச்சுவடில்ரயிலைத் துரத்தும் இரவுவாசித்தேன். இப்படித்தான் அமுதா ஆர்த்தி கதைகளோடு எனது பயணம் தொடங்கியது. அவரது கதைகளின் களம் ஏறக்குறைய ஒரே மாதிரியானவை தான் என்றாலும் அவரது ஒவ்வொரு கதைக்கும் அவர் காட்டுகிற வேறுபாடு தான் அவரது கதையின் தனித்துவம்பெண், தனிமை, வெறுமை, முடிந்தவரை தனிமைக்குள்ளும் கொண்டாட்டத்தைத் தேடுதல், தேடுதல் கைகூடாத போது விரக்தி என்பதாக பல கதைகள் அமைந்திருக்கின்றன. தன்னிலை பேசும் கதைகளாக இருந்தாலும் மூன்றாம் நபரின் புறநிலையை தன்னிலையோடு இணைத்து இரண்டையும் இயக்க விதியாக்கும் சித்திரிப்பில் அமுதா ஆர்த்தி தேர்ந்து கொண்டே வருகிறார்.


ஜனவரி 2023 – இல் எதிர் வெளியீடாக வந்த பருந்து கதைத் தொகுதியில் இருக்கும் பதினான்கு கதைகளும் ஒரே தன்னிலையை வேறுவேறு புறநிலையோடு எழுதிப் பார்த்த கதைகள் தான். குறிப்பாக ஆடையும் ஒரு அடையாளமாக இருக்கும் சமூகத்தில் ஆடை துறந்து அடையாளம் இழக்கும் மனிதனின் நிச்சயமற்ற இருந்தலைப் பேசியஅடையாளம் அற்றவனின் ஆடைஇந்தத் தொகுப்பில் குறிப்பிடத்தக்க கதை. ‘இரவை வெளிச்சமிடும் வானம்கதையில் கணவனால் கைவிடப்பட்ட பெண்ணின் தனிமையைசோப்பின் கவரைப் போலவே கவனிக்கப்படாமல் போகும் தனிமைஎன்கிறார். புறக்கணிக்கப்பட்ட பெண்ணின் வலியை நுணுக்கமாக எழுதிவிட முடியும் என்பதற்கு இக்கதை சிறந்த உதாரணம். ‘நெகிழிக் கனவுகதையில் மலம் கழிப்பதிலும் தூங்குவதிலும் சிக்கலைச் சந்திப்பவனின் உலகை அவனது விமர்சனப்பூர்வமாகவே வாசகனுக்குக் கடத்துகிறார் அமுதா ஆர்த்திஆகஸ்ட் 2023 இல்கடலுக்கு பறவையின் குரல்கவிதைத் தொகுதி வேரல் வெளியீடாக வந்துள்ளது.

கதையைப் போலவே இதிலும் தனிமை, ஏகாந்தம் ஆகியவற்றை எழுதிப் பார்த்திருக்கிறார். ‘செல்லும் வழியெல்லாம் / முட்களை பரப்பிச் சென்றான் / அவளின் காயங்களைக் காயப்படுத்த’, ‘பிடிக்க முயல்கையில் / காற்றோடு காற்றாய் / கரைந்து போகிறாய்’, ‘எண்ணங்களால் நிரம்பியது / எனது நாள்காட்டிஎன்று தன்னை வைத்து தனது தனிமையை அதன் சகல குணாதிசயங்களும் நீர்த்துப்போய்விடாத படி எழுதியிருக்கிறார். ‘துளிர்விடவும் / உதிரவும் காரணம் / கேட்காத காற்று / அதன் இஷ்டத்திற்கு / ஆட்டிவிட்டுச் செல்கிறது / கிளையைஎன்று தன்னை ஒரு தனி மரமாகவும் சூழலால் தான் கேட்பாரற்று இம்சிக்கப்படுவதையும் காதலாகவும் தாபமாகவும் தொனிக்கும்படி எழுதியிருப்பது அமுதா ஆர்த்தியின் எழுத்துகள் மீது வசீகரத்தை உண்டாக்கிவிடுகிறது. இதை அவரது அடையாளமாக எடுத்துச்செல்வாரேயானால் சமகால பெண் எழுத்தில் தவிர்க்க முடியாதவராக இருப்பார். நம்பிக்கை இருக்கிறது. வாழ்த்துக்கள்.

.......


Comments

Popular posts from this blog

அனிதா - நீட் - தூய்மை பாரதம் - சில விவாதக் குறிப்புகள்

அனிதா - நீட் - தூய்மை பாரதம் - சில விவாதக் குறிப்புகள் ஞா. குருசாமி, ஹைதராபாத் மத்திய பல்கலைக்கழக ஆய்வாளர் ரோகித் வெமுலா, டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக ஆய்வாளர் முத்துக்கிருஷ்ணன், பன்னிரண்டாம் வகுப்பு தேர்வில் 1176 மதிப்பெண்ணைப் பெற்று மருத்துவப் படிப்பை எதிர்நோக்கி இருந்த அனிதா என ஆராய்ச்சிலும் கல்வியிலும் தனித்திறன் பெற்ற திறமைசாலிகளை அரசு எந்திரம் குறிவைத்து தற்கொலைக்கு உள்ளாக்கும் போக்கு வருத்தம் அளிக்கிறது. இந்த தேசத்தில் வருணாசிரமத்தின் அடிப்படையில் நிகழ்த்தப்படும் சதிக்கொடுமை ஒன்றும் புதியதல்ல. ஏகலைவர் காலம் தொடங்கி நடத்து வருகிறது. ஏகலைவர், நந்தர் என்னும் மிக நீண்ட வரிசையில் இன்றைக்கு அனிதாவை இழந்திருக்கிறது இந்த சமுதாயம் என்று மிகவும் மொன்னையான சமாதானத்தைத் தற்காலிகமாகக் கூடத் தேடிக்கொள்ள மனம் மறுக்கிறது. தமிழ்நாட்டில் சமீபத்தில் முக்கியக் கவனம் பெற்ற நிகழ்வு ஜல்லிக்கட்டுக்கான தடையை நீக்கக்கோரிய போராட்டம். சமுதாயத்தின் எல்லா தரப்பினரும் ஒருங்கிணைந்து களம் கண்டனர். அது தமிழர்களின் ரத்தத்திலேயே ஊறிப்போய் உறங்கிக் கிடந்த வீரத்தின் வெளிப்பாடு என்றெல்லாம் பேசப்பட்டத...

ஏழைகள் நடமாடும் குப்பைத் தொட்டியா?

  ஏழைகள் நடமாடும் குப்பைத் தொட்டியா? உலகப் பிரபலமான ஒருவர் 25.08.2024 அன்று வானொலியில் ஆற்றிய உரையில் சுற்றுச்சுழல் – பிளாஸ்டிக் கழிவு – மறு பயன்பாடு – மறுசுழற்சி பற்றிக் குறிப்பிட்டார். பிளாஸ்டிக் கழிவுகளால் சுற்றுச்சூழல் மாசுபடுகிறது என்கிற அவரது கூற்றில் உண்மை இல்லாமல் இல்லை. பிளாஸ்டிக் கழிவுகளைக் குறைப்பதற்கு அவர், பயன்படுத்திய பிளாஸ்டிக் பொருள்களை அப்படியே தூக்கி வீசிவிடாமல் அது தேவைப்படுகிறவர்களுக்குக் கொடுக்கலாம் என்றார். அதற்கு அவரே ஓர் உதாரணமும் சொன்னார். ‘பிளாஸ்டிக் பொம்மையை வைத்து விளையாடும் குழந்தை அந்த பொம்மை மீது சலிப்படைந்து விட்டால் அதை வீசி எறிந்து விடாமல், ஒரு சிறு பொம்மை கூட கிடைக்காமல் ஏங்கிக் கொண்டிருக்கும் குழந்தைகளுக்கு கொடுத்து விடலாம்’ என்பது தான் அந்த உதாரணம். அப்படிச் செய்வதால் பிளாஸ்டிக் கழிவுகளை மறுபயன்பாட்டுக் கொண்டு வந்து சுற்றுச்சூழலைக் காப்பாற்றலாமாம். எனக்கு இறந்து நாற்றமடிக்கும் விலங்குகளைச் சாப்பிடுவதாலே காக்கைக்கு ‘ஆகாயத்தோட்டி’ என்றும் கழுதைப்புலிக்கு ‘வனத்தோட்டி’ என்றும் அறிவுஜீவிகள் ‘சிறப்பு’ப் பெயர்கள் வைத்திருப்பதும் வீட்டில் மீந்து போன...

அயோத்திதாசரின் விடுதலைப் பெளத்தம்

  இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தமிழ்ச் சமூகத்தின் அறிவுஜீவித அடையாளமாகத் திகழும் அயோத்திதாசர் , அக்காலத்தின் வாழ்க்கைச் சூழலுக்கும் நிலவிய அரசியல் தன்மைக்கும் ஏற்ப பெளத்தத்தை முன்வைத்தவர் . அவர் காலத்திய வரலாற்றுத் திரிபுகளை அம்பலப்படுத்தினார் . அதற்காக சடங்குகள் , பழக்க வழக்கங்கள் , இலக்கிய இலக்கணங்கள் , நிகண்டுகள் உள்ள்ளிட்ட எழுத்தாவணங்கள் ஆகியவற்றைப் பயன்படுத்தினார் . வரலாற்றைத் திரிபு செய்தவர்கள் பயன்கொண்ட சான்றுகளையே அயோத்திதாசரும் பயன்கொண்டு அதன் மீது வேறொரு வாசிப்பை நிகழ்த்தினார் . ஒரு வாசிப்பி ன் வழி வரலாற்றை எழுதுவதற்கும் புரிந்துகொள்வதற்குமான அரசியலை வெளிப்படுத்தியதுடன் தனது அரசியல் நிலைப்பாட்டையும் முன்வைத்தார் . தமிழ்ச்சமூகத்தை ஆதி திராவிடர் , திராவிடர் எனப் பகுத்து ஆதி திராவிடர்களைப் பூர்வப் பெளத்தர்கள் என்றார் . அதற்காக அவர் முன் வைத்த வாதங்கள் பூர்விகமான மண்ணின் மணம் கொண்டவை என்பது குறிப்பிடத்தக்கது . அயோத்திதாசர் அயோத்திதாசரின் காலத்தில் வரலாறு , பண்பாடு , இலக்கியம் , தத்துவம் ஆகியவற்றை ஐரோப்பிய வெளிச்சத்தில் பார்க்கும் போக்கு உருவாகிவிட்டிருந்தது . இந்திய...