Skip to main content

பெண் – பதிவிரதை X தடிக்கழுதை

 

பெண் – பதிவிரதை X தடிக்கழுதை

ஞா.குருசாமி

‘தடிக்கழுதை பாட்டு என்று ஒரு நூல். இதில் ஆண்பிள்ளை வீண்பிள்ளை’, விலைமாதர் கும்மி என்ற நூலும் உள்ளடங்கி இருக்கிறது. 1914 ஆம் வருடம் மதறாஸ் என்.சி,கோள்டன் (கோல்டன்?) அச்சியந்திர சாலையில் திருப்போரூர் டி கோபால் நாயகர் இந்த மூன்று நூல்களையும் ஒருங்கே பதிப்பித்திருக்கிறார்.  அதற்கு முன்னால் 1905 வருடம் மயிலம் சுப்பிரமணியசுவாமிகளால் பார்வையிடப்பட்டு பார்த்தசாரதி நாயுடுவின் அச்சகத்தில் அச்சிடப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது. சிறுமணவூர் முனியசாமி முதலியார் இந்த நூல்களை எழுதியதாகத் தெரிகிறது.

பதினெட்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தொடங்கி 19 ஆம் நூற்றாண்டில் மத்திய பகுதி வரை தனியொரு மனிதனாக ஏராளமான நூல்களை எழுதியவராகவும் பதிப்பித்தவராகவும் தெரிகிறார். சிறுமணவூர் முனியசாமி முதலியார் (இனி முனியசாமி எனச் சுட்டலாம்). இவர் குறித்து வீ.அரசு கட்டுரை ஒன்றைக் கூட எழுதியிருக்கிறார். அச்சு பண்பாட்டில் முனியசாமியின் பங்களிப்பை பதிவு செய்வதாக அந்த கட்டுரை அமைந்திருக்கிறது. நிற்க.

18 ,19 ஆம் நூற்றாண்டுகளில் உருவான தமிழ் இலக்கியப் பரப்பில் முக்கியமானவரான முனியசாமியின் தடிக்கழுதைப்பாட்டு நூல் பற்றி சில குறிப்புகளை பகிர்வதென்பது அவசியமாகப்பட்டது. அந்நூலில் 24 பாடல்களில் பதிவிரதை x டிக்கழுதை என்று பெண்களை இரண்டு வகையாகப் பகுத்து பதிவிரதைக்கும் தடிக்கழுதைக்கும் இலக்கணம் (?) தருகிறார். பதிவிரதைக்கு அவர் தரும் இலக்கணம் கீழ்வருமாறு

1.    அன்னை தந்தையை தினமும் அன்பால் உபசரிப்பவள்

2.    மோசமான கணவனாக இருந்தாலும் அவனை வணக்கம் செய்பவள்

3.    மூடனாக கணவன் இருந்த போதும் அவனை தன்மையுடன் நடத்துபவள்

4.    மாமியார் அடித்தாலும் மௌனமாய் இருப்பவள்

5.    கணவன் சம்பாத்தியம் அறிந்து செலவு செய்பவள்

6.    தலை குனிந்து நடப்பவள்

7.    அந்நிய ஆண்கள் மீது ஆசை கொள்ளாதவள்

8.    பூ வைத்துக் கொண்டு தெருவில் போகக் கூச்சப்படுபவள்

9.    கணவன், மாமியார், மாமனார் அடித்தாலும் அமைதியாக இருப்பவள்

10. காலையில் எழுந்து கணவன் பாதம் தொழுபவள்

11. பசித்து வருவோருக்கு அன்னமிடுபவள்

12. அண்டை, எதிர் வீட்டுக்குப் போகாதவள்

13. தங்கமின்றி கயிறாக மட்டுமே தாலி கட்டி இருந்தாலும் கணவனை வெறுக்காதவள்

14. வாசப்படி கடந்தால் குற்றமாகும் எனக் கருதுபவள்

15. குடும்பம் சிதையாமல் இருக்க வேண்டும் என நினைப்பவள்

16. கணவன் அழகில்லாமல் இருந்தாலும் அவனை நேசிக்கிறவள்

17. கணவனுக்கு முன் எழுபவள்

18. அறம் செய்பவள்

19. உண்டி சுருக்குபவள்

20. ஊரை பகைக்காதவள்

21. சக்காளத்தி பிள்ளையையும் தன் பிள்ளைபோல் சமமாகப் பார்ப்பவள்

22. பிச்சை கேட்பவனுக்கு பிச்சை தருபவள்

23. அணிகலன் அணிந்து தெருவில் நடக்காதவள்

24. முனியசாமி என்னும் எனது வார்த்தைக்கு ஏற்ப நடப்பவள் பதிவிரதை 

 

‘தடிக்கழுதை’ யாவள்? என்பதற்கு சில இலக்கணம் தருகிறார். அவை கீழ்வருமாறு

1.    துரோகி என்னும் பெயரை ஏற்றுக் கொள்பவள்

2.    கணவனோடு சண்டை செய்பவள்

3.    மன்னனாக இருந்தால் கூட மதிக்காமல் பேசுபவள்

4.    யாரையும் அறியாமல் இருப்பவள்

5.    கணவனை கடனாளியாக்குபவள்

6.    தெரு சண்டை செய்பவள்

7.    எல்லா சாதி ஆண்கள் மீதும் இச்சை கொண்டு அலைபவள்

8.    பூ முடித்து வம்பு செய்பவள்

9.    கணவன் மாமி மாமியாரை சண்டைக்கிழுத்து மானம் கெடுப்பவள்

10. வேலை செய்யாமல் பாயில் சோம்பலாய்க் கிடப்பவள்

11. பசித்து வருவோருக்கு அன்னம் இடாதவள்

12. கண்ட கண்ட இடம் திரிந்து சண்டை இழுத்து வருபவள்

13. கணவன் இயலாமையை சுட்டுபவள்

14. எல்லா வீடுகளிலும் பேசி சண்டை செய்பவள்

15. குடும்பத்தைச் சிதைப்பவள்

16. அழகாய் வரும் எந்த ஆணோடும் சேர்கிறவள்

17. கணவனுக்கு பின் எழுபவள்

18. அறம் செய்கிறவரை தடுப்பவள்

19. கண்ட பாட்டுக்களையும் ஆட்டங்களையும் பார்த்து கைவீசித் திரிகிறவள்

20. அனைவரிடமும் வம்பு வளர்ப்பவள்

21. ஒழுக்கம் உடைய பிள்ளையையும் மிரட்டுகிறவள்

22. பிச்சை கேட்டு வருகிறவரை ஏசி விரட்டுகிறவள்

23. அலங்கரித்துக் கொண்டு தெருவில் நடக்கிறவள்

24. இதெல்லாம் ஒரு  புத்தகமென்று எழுதி இருக்கிறாரே முனியசாமி  என்று பரிகசிப்பவள் தடிக்கழுதை

என்று தடிக்கழுதை பற்றிய இலக்கணத்தை தருகிறார்.

பெண் தனக்கெதிரான வன்முறைகளை எதிர்க்காதவளாக இருப்பவளும், வீட்டைத் தாண்டி வெளியே வராமல் இருப்பவளும் பதிவிரதை. கணவன், மாமி, மாமனாராக இருந்தபோதும் அவர்களுக்கு எதிராக இருப்பவள், தன்னை அலங்கரித்துக் கொண்டு வீதியில் வலம் வருகிறவள் தடிக்கழுதை என்கிறார் முனியசாமி. இது முனியசாமியின் படைப்புகளுள் ஒன்று பற்றிய சிறிய அறிமுகம் மட்டுமே. மற்றொரு சூழலில் விரிவாக ஆய்வு செய்து பேசலாம். தடிக்கழுதைப் பாட்டு நூலிம் முதல் பக்கம் கீழே…


தடிக்கழுதைப் பாட்டு நூலின் முதல் பக்கம் 

பதிவிரதை - தடிக்கழுதை படங்கள்




Comments

Popular posts from this blog

கிழக்கில் இருந்து மேற்கு நோக்கி ‘ஷெர்லாக் ஹோம்ஸ் வாழ்ந்த வீடு’

இலக்கியக் கட்டுரை என்றால் வரையறுக்கப்பட்ட வடிவத்தோடும் தேர்ந்தெடுக்கப்பட்ட சொற்களின் சேர்க்கையோடும் எழுதப்படுவது என்கிற நம்பிக்கை பரவலாக இருந்து வருகிறது . இந்தச் சட்டகத்திற்குள் சிக்காமல் ஜனரஞ்சகமாக , அதே சமயம் புனைவிற்கான மொழியில் அமைந்திருக்கிறது ‘ ஷெர்லாக் ஹோம்ஸ் வாழ்ந்த வீடு ’. இராமனாதனின் இந்த நூலில் இலக்கியம் , திரை , ஆளுமைகள் , அனுபவங்கள் என்னும் பகுப்பின் கீழ் 28 கட்டுரைகள் இருக்கின்றன . அவை யாவும் காலச்சுவடு உள்ளிட்ட இதழ்களில் வெளி வந்தவை . இந்நூலை வாசிக்கிறவர்கள் அவரவர் வாசிப்பு , அனுபவம் சார்ந்து பொருத்திப் பார்த்துக் கொள்ள முடியும் . நூலாசிரியர் லண்டனில் உள்ள ஷெர்லாக் ஹோம்ஸ் அருங்காட்சியகத்திற்குச் சென்ற அனுபவத்தை வைத்துக்கொண்டு எழுதப்பட்ட ‘ ஷெர்லாக் ஹோம்ஸ் வாழ்ந்த வீடு ’ முதல் கட்டுரையாக இடம் பெற்றிருக்கிறது . ஒரு படைப்பு பல்வேறு அடையாள வேறுபாடுகளைத் தாண்டி வாசிப்பு மனங்களை இணைக்கும் வல்லமை வாய்ந்தது என்பதை ஸ்பானிய மொழியைப் பேசும் ஒரு சிறுவனுடன் தான் உரையாடிய வேடிக்கையான சம்பவத்தை வைத்து விவரித்து இருக்கிறார் . அதாவது அந்தச் சிறுவன் நிறுத்தி நிறுத்தி ஆங்கிலத்தில் இராமன...

அனிதா - நீட் - தூய்மை பாரதம் - சில விவாதக் குறிப்புகள்

அனிதா - நீட் - தூய்மை பாரதம் - சில விவாதக் குறிப்புகள் ஞா. குருசாமி, ஹைதராபாத் மத்திய பல்கலைக்கழக ஆய்வாளர் ரோகித் வெமுலா, டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக ஆய்வாளர் முத்துக்கிருஷ்ணன், பன்னிரண்டாம் வகுப்பு தேர்வில் 1176 மதிப்பெண்ணைப் பெற்று மருத்துவப் படிப்பை எதிர்நோக்கி இருந்த அனிதா என ஆராய்ச்சிலும் கல்வியிலும் தனித்திறன் பெற்ற திறமைசாலிகளை அரசு எந்திரம் குறிவைத்து தற்கொலைக்கு உள்ளாக்கும் போக்கு வருத்தம் அளிக்கிறது. இந்த தேசத்தில் வருணாசிரமத்தின் அடிப்படையில் நிகழ்த்தப்படும் சதிக்கொடுமை ஒன்றும் புதியதல்ல. ஏகலைவர் காலம் தொடங்கி நடத்து வருகிறது. ஏகலைவர், நந்தர் என்னும் மிக நீண்ட வரிசையில் இன்றைக்கு அனிதாவை இழந்திருக்கிறது இந்த சமுதாயம் என்று மிகவும் மொன்னையான சமாதானத்தைத் தற்காலிகமாகக் கூடத் தேடிக்கொள்ள மனம் மறுக்கிறது. தமிழ்நாட்டில் சமீபத்தில் முக்கியக் கவனம் பெற்ற நிகழ்வு ஜல்லிக்கட்டுக்கான தடையை நீக்கக்கோரிய போராட்டம். சமுதாயத்தின் எல்லா தரப்பினரும் ஒருங்கிணைந்து களம் கண்டனர். அது தமிழர்களின் ரத்தத்திலேயே ஊறிப்போய் உறங்கிக் கிடந்த வீரத்தின் வெளிப்பாடு என்றெல்லாம் பேசப்பட்டத...

ஏழைகள் நடமாடும் குப்பைத் தொட்டியா?

  ஏழைகள் நடமாடும் குப்பைத் தொட்டியா? உலகப் பிரபலமான ஒருவர் 25.08.2024 அன்று வானொலியில் ஆற்றிய உரையில் சுற்றுச்சுழல் – பிளாஸ்டிக் கழிவு – மறு பயன்பாடு – மறுசுழற்சி பற்றிக் குறிப்பிட்டார். பிளாஸ்டிக் கழிவுகளால் சுற்றுச்சூழல் மாசுபடுகிறது என்கிற அவரது கூற்றில் உண்மை இல்லாமல் இல்லை. பிளாஸ்டிக் கழிவுகளைக் குறைப்பதற்கு அவர், பயன்படுத்திய பிளாஸ்டிக் பொருள்களை அப்படியே தூக்கி வீசிவிடாமல் அது தேவைப்படுகிறவர்களுக்குக் கொடுக்கலாம் என்றார். அதற்கு அவரே ஓர் உதாரணமும் சொன்னார். ‘பிளாஸ்டிக் பொம்மையை வைத்து விளையாடும் குழந்தை அந்த பொம்மை மீது சலிப்படைந்து விட்டால் அதை வீசி எறிந்து விடாமல், ஒரு சிறு பொம்மை கூட கிடைக்காமல் ஏங்கிக் கொண்டிருக்கும் குழந்தைகளுக்கு கொடுத்து விடலாம்’ என்பது தான் அந்த உதாரணம். அப்படிச் செய்வதால் பிளாஸ்டிக் கழிவுகளை மறுபயன்பாட்டுக் கொண்டு வந்து சுற்றுச்சூழலைக் காப்பாற்றலாமாம். எனக்கு இறந்து நாற்றமடிக்கும் விலங்குகளைச் சாப்பிடுவதாலே காக்கைக்கு ‘ஆகாயத்தோட்டி’ என்றும் கழுதைப்புலிக்கு ‘வனத்தோட்டி’ என்றும் அறிவுஜீவிகள் ‘சிறப்பு’ப் பெயர்கள் வைத்திருப்பதும் வீட்டில் மீந்து போன...