Skip to main content

ஆ.இரா.வேங்கடாசலபதி, எஸ்.வி.ராஜதுரை & வ.கீதா ஆகியோர்களின் இரண்டு நூல்களும் எனது பார்வையும்

 

.இரா.வேங்கடாசலபதி, எஸ்.வி.ராஜதுரை & வ.கீதா ஆகியோர்களின் இரண்டு நூல்களும் எனது பார்வையும்

    .இரா.வேங்கடாசலபதி பதிப்பித்த ‘வ.உ.சி.யின் சிவஞானபோத உரை’யை ஒரு தேவையின் பொருட்டு வாசிக்க நேர்ந்தது. அந்த நூலின் வழியாக அறிமுகமான அவரே எழுதிய திராவிட இயக்கமும் வேளாளரும் என்று ஒரு நூலை வாசித்தேன். அதில் வரும் விவரணைகளை விட அடிகுறிப்புகள் எனக்கு முக்கியமாகப்பட்டன.தனூடாகத் தேடிக் கண்டைந்த நூல்தான் தினமணி பார்ப்பனியத்தின் முகமூடி ஒரு விவாதம்  இந்நூலின் பழைய பெயர் ‘திராவிட தினமணியின் பார்ப்பனியம்’. இதை எஸ்.வி. ராஜதுரை, வி.கீதா ஆகியோர் இணைந்து தொகுத்திருக்கிறார் . இது 1990களில் தினமணியில் இந்திரா பார்த்தசாரதி, எஸ்.ஆர்.என்.சத்யா, தமிழவன் x எஸ்.வி.ராஜதுரை,.கீதா ஆகியோர்களுக்கு இடையே நடந்த விவாதமாக இருக்கிறது.


பார்ப்பனர் அல்லாதார் இயக்கத்தின் தொடக்கப் புள்ளியாக வேளாளர்களான (சைவர்கள்) பேராசிரியர் பெ.சுந்தரனார், பி.கனகசபை, ஜே.எம்.நல்லசாமி முதலியோர் இருந்த போதும் 1927 - 29 கால கட்டத்தில் பார்ப்பனர் அல்லாதார் இயக்கத்தின் நீட்சியான திராவிட இயக்கம் பெரியார் கைக்கு வந்ததும் சைவர்கள் விளிம்பு நிலைக்கு தள்ளப்பட்டதாக  கூறும் ஆ.இரா.வே, 1940களில் பிற்பட்ட சாதியினரை சமூக அடித்தளமாகக் கொள்ள முற்பட்டு விட்ட திராவிட இயக்கத்திற்கும் சைவருக்கும் எந்த உறவும் இல்லாமல் போய்விட்டது’ என்கிறார்.  இந்த நூலின் நோக்கமே திராவிட இயக்கத்திற்கும் சைவருக்கும் (வேளாளருக்கும்) 1940க்கு பிறகு தொடர்பு இல்லை என்பதை நிறுவுவது தான்.

அதிமுகவில் எம்ஜிஆரின் மரணத்திற்குப் பிறகு எழுந்த அரசியல் குழப்பங்களை நீந்தி கடந்து பெருமூச்சு விட்டபடி முதன் முதலில் முதல்வராக பொறுப்பு வகித்த ஜெயலலிதாவின் ஆட்சிக்காலமான 1994 இல் இந்த நூல் வெளிவந்திருக்கிறது. அந்தக் காலத்தில் பரவலாக திமுகவின் மீது ‘வெள்ளாளர் கட்சி’ என்றொரு முத்திரை விழுந்திருந்தது. அந்த முத்திரையை மறுத்து திராவிட இயக்கத்தின் குறிப்பாக திமுகவின் மீது புத்தொளி பாய்ச்சுவதற்கு முயன்ற நூலாக இதைப் பார்க்க முடிகிறது. நூலாசிரியர் ஒரு காலத்தில் திராவிட இயக்கத்தில் வேளாளர் கை ஓங்கி இருந்தது என்பதை ஒத்துக் கொள்ளாமல் இல்லை.



‘தினமணி பார்ப்பனியத்தின் முகமூடிகள் ஒரு விவாதம்’  எனும் நூலில் இடம் பெற்ற ‘இரு சக்திகளும் (பார்ப்பனர், வேளாளர்) தங்களுக்குள் பங்காளி சண்டை போட ஆரம்பித்தது தான் ஆரிய திராவிட போட்டின்ற தமிழவனின் கூற்றை ஆ.இரா.வே. மேற்கோள் காட்டுவதன் வழி அதே காலத்தில் திராவிட இயக்கத்தின் மீது வெள்ளாளர் முத்திரை விழுந்துவிட்டதை உறுதிப்படுத்தலாம்.  இதை மறுப்பது தான் திராவிட இயக்கமும் வேளாளரும் நூலின் உள்ளடக்கம். ஆ.இரா.வே.யின் கூற்றுக்கு வலுச்சேர்க்கும் விதமாகவே நீதி கட்சியும் கூட ஒரு சில வேளாளர்கள் தமது சொந்த நலனுக்காக உருவாக்கிக் கொண்ட கட்சி அல்ல என்னும் எஸ்.வி.ராஜதுரை& வ.கீதா ஆகியோரின் கூற்று அமைந்திருக்கிறது.(‘தினமணி பார்ப்பனியத்தின் முகமூடி ஒரு விவாதம் (ப.95)

அதாவது, பார்ப்பனர்கள் அல்லாதார் இயக்கத்தில் இருந்து முகிழ்த்த திராவிட இயக்கம் வேளாளர்கள் இயக்கமா? இல்லையா? என்கிற விவாதம் 1990களில் ஏதோ ஒரு தேவையின் பொருட்டு உருவாகியிருக்கிறது. எனது நிலைப்பாடு என்னவென்றால் பார்ப்பனர் அல்லாதார் இயக்கம் 19,20 ஆம் நூற்றாண்டில் மட்டுமல்ல 2000 ஆண்டுகளுக்கு முன்பு இருந்தே  இந்தியா முழுமையும் இருந்து வந்திருக்கிறது. தமிழகத்தைப் பொறுத்தமட்டில் பிராமணர் அல்லாதார் இயக்கத்தில் வேளாளர்கள் உட்பட்டு பல சூத்திர சாதியினரும் இருந்திருக்கிறார்கள் என்ற போதிலும் 16 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியினுடையகாராஷ்டிர அரசியல், அதை உருவாகிய அறிவுஜீவிக் குழுக்கள், பதினெட்டாம் நூற்றாண்டில் தமிழக மராட்டிய அரசியல் என்பதன் வழியாக பயணித்து 20ஆம் நூற்றாண்டு திராவிட இயக்கம் என வந்து நிற்கிறபோது திராவிட இயக்கம் வேளாளர்களுக்கானது தான் என்பதை என்னால் உறுதியாகச் சொல்ல முடியும்.

இரண்டாம் நிலை ஆதாரங்களாக நின்று எனது நிலைப்பாட்டிற்கு வலுச் சேர்க்கும் விதத்தில் இந்த இரண்டு நூல்களும் முக்கியமானவை என்பது என் எண்ணம்.

ஞா.குருசாமி

Comments

Popular posts from this blog

ரவிகாந்த் கிசானா எழுதிய 'சவர்ணர்களைச் சந்தியுங்கள்' (Meet the Savarnas) நூல் குறித்து….

            ஹைதராபாத்தில் உள்ள வோக்ஸன் பல்கலைக்கழகத்தில் (Woxsen University) இணைப் பேராசிரியராக உள்ள ரவிகாந்த் கிசானா இனவரைவியலில் ஆர்வமுடையவர். குறிப்பாக சாதிகள் குறித்து எழுதி வருகிறார். அவரது 'சவர்ணர்களைச் சந்தியுங்கள்' நூல் ‘அற்பத்தனங்கள் எல்லாவற்றையும் உடைத்த இந்திய மில்லினியல்கள்’ (Indian Millennials Whose Mediocrity Broke Everything) என்ற துணைத் தலைப்புடன் 2025 மே மாதம் வெளியானது. அது பற்றி ஜூலையில் ஃபிரண்ட் லைனில் அறிமுகம் வந்தபோதே வாசித்து விட்டு அமேசானில் தேடிய போது விற்றுத் தீர்ந்திருந்தது. மீண்டும் விற்பனைக்கு வந்த போது வாங்கி வாசித்தேன். நேற்று (28.12.2025) ஆங்கில இந்து நாளேட்டிலும் அந்த நூல் குறித்த பத்தி ஒன்று எழுதப்பட்டிருந்தது. இவை எல்லாமும் சேர்ந்து தமிழில் அது பற்றி எழுத வேண்டும் என்ற ஆர்வத்தை உண்டாக்கிவிட்டன.           இதில் ரவிகாந்த், சவர்ணர்கள் என்போர் யாவர்? சாதியை ஏன் பழைய விஷயமாகச் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்? சவர்ணங்களின் ‘நாங்கள் சாதி பார்ப்பதில்லை’ என்னும் புகழ் பெற்ற வாசகம் அவர்களின் சாதி உணர்...

தத்துவங்கள் குறித்த உரையரங்கம்

  தத்துவங்கள் குறித்த உரையரங்கம் கோவை பீளமேட்டில் ‘ பார்வையற்றோருக்கான அறிவே துணை ஆய்வு மையம் ’ தத்துவ அறிமுகக் கூட்டம் ஒன்றை 2026 மே 29 அன்று நடத்தியது . அதன் தலைவர் பேராசிரியர் சுகுமாரன் நிகழ்வை ஒருங்கிணைத்து இருந்தார் . பெரியாரியம் குறித்து   கு . ராமகிருஷ்ணன் பேசினார். இணைய வழியில் கலந்துகொண்ட   தியாகு மார்க்சியம் குறித்துப் பேசினர் .  நான் அம்பேத்கரியம் பேசினேன் . அம்பேத்கரை எப்படி வாசிக்கத் தொடங்குவது என்பதில் தொடங்கி கூட்டுச் சிந்தனையில் அம்பேத்கரின் அவசியத்தை வலியுறுத்துவதாக எனது உரையை அமைத்துக் கொண்டேன் . மனநிறைவான நிகழ்வாக அமைந்தது . சிறிய அளவிலான கூட்டம் என்றாலும் ஒருசிலரைத் தவிர அனைவரும் பார்வையற்றவர்களே . அவர்களோடு பேசிய தருணங்கள் நாம் பார்த்திராத உலகத்தைக் காட்டின . ஒருவர் ‘ மாற்றுத்திறனில்  21 வகை உள்ளதாக அரசு வரையறுத்து இருக்கிறது . எல்லோரையும் ஒரே மாதிரியாகக் கருதுவது மாற வேண்டும் ’ என்றார் . ‘ நடக்க இயலாதவர்களையும் எங்களையும் எப்படி ஒன்றாகக் கருத முடியும் ’ என்ற கேள்வியில் உறுதியாக இருந்தார் . ‘ நடக்க இயலாதவர் தன்னால் இயல்பாகத் தனித்துச் ...

இராணிப்பேட்டை அமுதாவும் அதிபர் டிரம்ப்பும்

கடந்த 2026  ஜனவரி 09 ஆம் தேதி இராணிப்பேட்டை மாவட்டம் ,  பொன்னேரியில் முதல் அமைச்சர் கலந்துகொண்ட ‘ உங்க கனவ சொல்லுங்க ’ நிகழ்ச்சி நடைபெற்றது . இதில் கனவைச் சொல்ல அழைக்கப்பட்ட இராணிப்பேட்டை மாவட்டம் , காவேரிப்பாக்கம் ஒன்றியம் , கரிவேடு ஊராட்சி , சித்தஞ்சி கிராமத்தைச் சேர்ந்தவரும் அதே கிராமத்தில் செயல்பட்டு வரும் கங்கையம்மன் மகளிர் சுயஉதவிக் குழுவின் ஊக்குநருமான எம் . அமுதா தனது கனவைச் சொன்னார் .  பதினைந்து ஆண்டுகளாக பல்வேறு கடனுதவிகளைப் பெற்று மாவு அரைக்கும் எந்திரந்தின் மூலம் வருமானம் ஈட்டி வரும் அமுதா எஸ்சி / எஸ்டி மக்களுக்கு மானியக் கடன் கிடைப்பதாகவும் தங்களுக்கு நேரடிக் கடன் மட்டுமே கிடைப்பதாகவும் குறைபட்டுக் கொண்டார் . அவர் பேச்சில் இருந்த முக்கியமான விஷயம் ‘ எஸ்சி எஸ்டிக்கெல்லாம் குடுத்தா நாங்க எங்க போறது ’ என்கிற அழுத்தம் தான் . அவரது தேவையைக் கேட்டுப் பெறுவதில் அவருக்கு உரிமை உண்டு . ஆனால் ‘ எஸ்சி எஸ்டிகளுக்குக் கிடைக்கிறது எங்களுக்குக் கிடைக்கவில்லை ’ என்கிற ஒப்பீடு சரியானதல்ல . தவிர , இதை அவரது தனிப்பட்ட கருத்து என்பதை விட கூட்டுச் சமூகத்தின் மனநிலை என்பதற்கு அ...