Skip to main content

ஆ.இரா.வேங்கடாசலபதி, எஸ்.வி.ராஜதுரை & வ.கீதா ஆகியோர்களின் இரண்டு நூல்களும் எனது பார்வையும்

 

.இரா.வேங்கடாசலபதி, எஸ்.வி.ராஜதுரை & வ.கீதா ஆகியோர்களின் இரண்டு நூல்களும் எனது பார்வையும்

    .இரா.வேங்கடாசலபதி பதிப்பித்த ‘வ.உ.சி.யின் சிவஞானபோத உரை’யை ஒரு தேவையின் பொருட்டு வாசிக்க நேர்ந்தது. அந்த நூலின் வழியாக அறிமுகமான அவரே எழுதிய திராவிட இயக்கமும் வேளாளரும் என்று ஒரு நூலை வாசித்தேன். அதில் வரும் விவரணைகளை விட அடிகுறிப்புகள் எனக்கு முக்கியமாகப்பட்டன.தனூடாகத் தேடிக் கண்டைந்த நூல்தான் தினமணி பார்ப்பனியத்தின் முகமூடி ஒரு விவாதம்  இந்நூலின் பழைய பெயர் ‘திராவிட தினமணியின் பார்ப்பனியம்’. இதை எஸ்.வி. ராஜதுரை, வி.கீதா ஆகியோர் இணைந்து தொகுத்திருக்கிறார் . இது 1990களில் தினமணியில் இந்திரா பார்த்தசாரதி, எஸ்.ஆர்.என்.சத்யா, தமிழவன் x எஸ்.வி.ராஜதுரை,.கீதா ஆகியோர்களுக்கு இடையே நடந்த விவாதமாக இருக்கிறது.


பார்ப்பனர் அல்லாதார் இயக்கத்தின் தொடக்கப் புள்ளியாக வேளாளர்களான (சைவர்கள்) பேராசிரியர் பெ.சுந்தரனார், பி.கனகசபை, ஜே.எம்.நல்லசாமி முதலியோர் இருந்த போதும் 1927 - 29 கால கட்டத்தில் பார்ப்பனர் அல்லாதார் இயக்கத்தின் நீட்சியான திராவிட இயக்கம் பெரியார் கைக்கு வந்ததும் சைவர்கள் விளிம்பு நிலைக்கு தள்ளப்பட்டதாக  கூறும் ஆ.இரா.வே, 1940களில் பிற்பட்ட சாதியினரை சமூக அடித்தளமாகக் கொள்ள முற்பட்டு விட்ட திராவிட இயக்கத்திற்கும் சைவருக்கும் எந்த உறவும் இல்லாமல் போய்விட்டது’ என்கிறார்.  இந்த நூலின் நோக்கமே திராவிட இயக்கத்திற்கும் சைவருக்கும் (வேளாளருக்கும்) 1940க்கு பிறகு தொடர்பு இல்லை என்பதை நிறுவுவது தான்.

அதிமுகவில் எம்ஜிஆரின் மரணத்திற்குப் பிறகு எழுந்த அரசியல் குழப்பங்களை நீந்தி கடந்து பெருமூச்சு விட்டபடி முதன் முதலில் முதல்வராக பொறுப்பு வகித்த ஜெயலலிதாவின் ஆட்சிக்காலமான 1994 இல் இந்த நூல் வெளிவந்திருக்கிறது. அந்தக் காலத்தில் பரவலாக திமுகவின் மீது ‘வெள்ளாளர் கட்சி’ என்றொரு முத்திரை விழுந்திருந்தது. அந்த முத்திரையை மறுத்து திராவிட இயக்கத்தின் குறிப்பாக திமுகவின் மீது புத்தொளி பாய்ச்சுவதற்கு முயன்ற நூலாக இதைப் பார்க்க முடிகிறது. நூலாசிரியர் ஒரு காலத்தில் திராவிட இயக்கத்தில் வேளாளர் கை ஓங்கி இருந்தது என்பதை ஒத்துக் கொள்ளாமல் இல்லை.



‘தினமணி பார்ப்பனியத்தின் முகமூடிகள் ஒரு விவாதம்’  எனும் நூலில் இடம் பெற்ற ‘இரு சக்திகளும் (பார்ப்பனர், வேளாளர்) தங்களுக்குள் பங்காளி சண்டை போட ஆரம்பித்தது தான் ஆரிய திராவிட போட்டின்ற தமிழவனின் கூற்றை ஆ.இரா.வே. மேற்கோள் காட்டுவதன் வழி அதே காலத்தில் திராவிட இயக்கத்தின் மீது வெள்ளாளர் முத்திரை விழுந்துவிட்டதை உறுதிப்படுத்தலாம்.  இதை மறுப்பது தான் திராவிட இயக்கமும் வேளாளரும் நூலின் உள்ளடக்கம். ஆ.இரா.வே.யின் கூற்றுக்கு வலுச்சேர்க்கும் விதமாகவே நீதி கட்சியும் கூட ஒரு சில வேளாளர்கள் தமது சொந்த நலனுக்காக உருவாக்கிக் கொண்ட கட்சி அல்ல என்னும் எஸ்.வி.ராஜதுரை& வ.கீதா ஆகியோரின் கூற்று அமைந்திருக்கிறது.(‘தினமணி பார்ப்பனியத்தின் முகமூடி ஒரு விவாதம் (ப.95)

அதாவது, பார்ப்பனர்கள் அல்லாதார் இயக்கத்தில் இருந்து முகிழ்த்த திராவிட இயக்கம் வேளாளர்கள் இயக்கமா? இல்லையா? என்கிற விவாதம் 1990களில் ஏதோ ஒரு தேவையின் பொருட்டு உருவாகியிருக்கிறது. எனது நிலைப்பாடு என்னவென்றால் பார்ப்பனர் அல்லாதார் இயக்கம் 19,20 ஆம் நூற்றாண்டில் மட்டுமல்ல 2000 ஆண்டுகளுக்கு முன்பு இருந்தே  இந்தியா முழுமையும் இருந்து வந்திருக்கிறது. தமிழகத்தைப் பொறுத்தமட்டில் பிராமணர் அல்லாதார் இயக்கத்தில் வேளாளர்கள் உட்பட்டு பல சூத்திர சாதியினரும் இருந்திருக்கிறார்கள் என்ற போதிலும் 16 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியினுடையகாராஷ்டிர அரசியல், அதை உருவாகிய அறிவுஜீவிக் குழுக்கள், பதினெட்டாம் நூற்றாண்டில் தமிழக மராட்டிய அரசியல் என்பதன் வழியாக பயணித்து 20ஆம் நூற்றாண்டு திராவிட இயக்கம் என வந்து நிற்கிறபோது திராவிட இயக்கம் வேளாளர்களுக்கானது தான் என்பதை என்னால் உறுதியாகச் சொல்ல முடியும்.

இரண்டாம் நிலை ஆதாரங்களாக நின்று எனது நிலைப்பாட்டிற்கு வலுச் சேர்க்கும் விதத்தில் இந்த இரண்டு நூல்களும் முக்கியமானவை என்பது என் எண்ணம்.

ஞா.குருசாமி

Comments

Popular posts from this blog

டவுசர் அக்காவுக்கு வீர வணக்கம்

1990 களில் எங்களூர் பகுதியில் டவுசர் அக்கா மிகப் பிரபலம். சாயங்காலம் ஆகிவிட்டால் டவுசரோடு காணப்படுவார். ஆகையால் அவருக்கு அந்தப் பெயர் வாய்த்துவிட்டது. இன்றைக்குப் பெண்கள் டவுசர் அணிவது நகரங்களில் இயல்பாகிவிட்டது. கிராமங்களுக்கு அது இன்னும் முழுமையாக வந்து சேரவில்லை. ஆனால் நாற்பது வருடங்களுக்கு முன்னால் கிராமங்களில் டவுசர் அணிவது எப்படி இருந்திருக்கும் என்பதை நினைத்துப் பார்த்தோமானால் இன்றைக்கும் டவுசர் அக்காவை வியக்காமல் இருக்க முடியாது. கை வைத்த பனியனும் டவுசரும் அணிந்திருக்கும் அக்கா எப்போதும் டவுசர் பையில் நான்கு அங்குல நீளத்தில் கைபிடி தெரியும் படி கத்தி ஒன்றை வைத்திருப்பார். பகல் நேரங்களில் சேலையில் இருந்தாலும் டவுசரும் கத்தியும் உள்ளுக்குள் இருக்கத்தான் செய்யும். ஆண்கள் பெண்கள் யாராக இருந்தாலும் டவுசர் அக்காவுக்கு ‘ மாமா – அக்கா ’ தான். வாய்விட்டு சிரிக்கச் சிரிக்கப் பேசுவாள். கூலிக்கென்று வேலைக்குப் போக மாட்டாள். சம்பாதிப்பது பற்றி யோசிப்பதே கிடையாது. குடும்பம் கிடையாது. யார் வீட்டில் கொடுத்தாலும் வாங்கிச் சாப்பிட்டுக் கொள்வாள். யாரேனும் தோட்ட வேலைக்குக் கூப்பிட்டால் ‘ போங்க … வ...

அயோத்திதாசரின் விடுதலைப் பெளத்தம்

  இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தமிழ்ச் சமூகத்தின் அறிவுஜீவித அடையாளமாகத் திகழும் அயோத்திதாசர் , அக்காலத்தின் வாழ்க்கைச் சூழலுக்கும் நிலவிய அரசியல் தன்மைக்கும் ஏற்ப பெளத்தத்தை முன்வைத்தவர் . அவர் காலத்திய வரலாற்றுத் திரிபுகளை அம்பலப்படுத்தினார் . அதற்காக சடங்குகள் , பழக்க வழக்கங்கள் , இலக்கிய இலக்கணங்கள் , நிகண்டுகள் உள்ள்ளிட்ட எழுத்தாவணங்கள் ஆகியவற்றைப் பயன்படுத்தினார் . வரலாற்றைத் திரிபு செய்தவர்கள் பயன்கொண்ட சான்றுகளையே அயோத்திதாசரும் பயன்கொண்டு அதன் மீது வேறொரு வாசிப்பை நிகழ்த்தினார் . ஒரு வாசிப்பி ன் வழி வரலாற்றை எழுதுவதற்கும் புரிந்துகொள்வதற்குமான அரசியலை வெளிப்படுத்தியதுடன் தனது அரசியல் நிலைப்பாட்டையும் முன்வைத்தார் . தமிழ்ச்சமூகத்தை ஆதி திராவிடர் , திராவிடர் எனப் பகுத்து ஆதி திராவிடர்களைப் பூர்வப் பெளத்தர்கள் என்றார் . அதற்காக அவர் முன் வைத்த வாதங்கள் பூர்விகமான மண்ணின் மணம் கொண்டவை என்பது குறிப்பிடத்தக்கது . அயோத்திதாசர் அயோத்திதாசரின் காலத்தில் வரலாறு , பண்பாடு , இலக்கியம் , தத்துவம் ஆகியவற்றை ஐரோப்பிய வெளிச்சத்தில் பார்க்கும் போக்கு உருவாகிவிட்டிருந்தது . இந்திய...

ஹரிஜனங்களும் சதபத பிராமண கதைகளும்

ஹரிஜனங்களும் சதபத பிராமண கதைகளும் 1933 இல் எம்.ஆர்.ஜம்புநாதன் எழுதிய நூல் சதபத பிராமணம். வேதங்கள் , உபநிடதங்கள் ஆகியவற்றின் செய்திகளை விளக்கும் வண்ணம் எதையாவது எழுதும் வழக்கமுடைய ஜம்புநாதன் , யசூர் வேதத்தின் சில பகுதிகளை விளக்கும் முகமாக சதபத பிராமணத்தை எழுதியிருக்கிறார். அதில் 88 விளக்கக் குறிப்புகள் இடம் பெற்றிருக்கின்றன. அவற்றை அவர் ‘ கதைகள் ’ என்கிறார். உண்மையில் அவற்றைக் கதைகள் என்று சொல்வது கூட ரெம்ப அதிகம் தான்.  இந்நூலை அவர் ஹரி ஜனங்களுக்குச் சமர்ப்பித்திருக்கிறார். அதற்கான காரணத்தை அவரே விவரிக்கிறார். நூலில் ருத்திரனின் இயல்புகளை விவரிக்கும் அவர் ‘ ருத்திரனின் குணங்கள் அனைத்தும் ஹரிஜனங்களிடம் உள்ளது ’ என்பதாக அரிய கண்டுபிடிப்பை நிகழ்த்துகிறார். இந்த ஒப்பீட்டின் வழி அவரது அறிவின் அளவு துலக்கப்பட்டிருக்கிறது. இவற்றையெல்லாம் தாண்டி நூல் எதற்காக எழுதப்பட்டிருக்கும் என யோசித்தால் ஹரிஜனங்களை இந்துக்களாகச் சித்திரிப்பதே நோக்கமாக இருந்திருக்க வேண்டும் என்பது தெரிகிறது. சான்றாக , ருத்திரனுக்கும் ஹரிஜனங்களுக்கும் அவர் சொல்லும் ஒற்றுமைக் காரணங்கள் சிலவற்றைப் பார்க்கலாம். உலகம் ...