Skip to main content

இமையத்தின் ‘கொல்லிமலை சாமி’ என்றொரு கதை

 


கொல்லிமலை சாமி என்றொரு கதை

2022 ஜூலை நீம் இதழில் இமையம் கொல்லிமலை சாமி என்றொரு கதை எழுதி இருக்கிறார். ‘ஜோதி என்கிற பெண் தான் கதையின் மையம். பெரம்பலூரை அடுத்த அன்னமங்கலத்துக்காரி. அவள் ஒரு துறவி. துறந்ததால் துறவியானவள் அல்ல. அன்னமங்கலத்திலிருந்து துரத்தப்பட்டதால் துறவியானவள். தேசமெங்கும் சுற்றிவிட்டு தற்போது கொல்லிமலை சேர்ந்து  கொல்லிமலை சாமி’ ஆகிப் போனவள். சுற்று வட்டாரத்தில் அவளுக்கு ஏக மரியாதை. துயருடன் வருவோருக்கு துயர் களைவது ஜோதியின் வேலை. தன்னை நாடி வருவோரின் கதைகளைக் கேட்டுக்கேட்டு மனிதர்களினுடைய அற்பத்தனங்களின் பல்வேறு ரூபங்களைக் கண்டுபிடித்தவள். மனிதர்களின் பலமும் பலவீனமும் அவர்களின் ஏகோபித்த அற்பத்தனங்கள் தான் என்பதை அனுபவத்தில் கண்டவள். தன்னை தேடி வரும் பக்தர்கள் தருவது தான் அவது உணவு. நல்ல அழகி. துறவிக்கு அழகு கூடாது என்பதற்காகவே மொட்டை அடித்துக் கொண்டவள். இன்று அவளிடம் அருள் வாக்கு கேட்பதற்காக ஜோதியின் ஊர்க்காரனே ஒருவன் வந்திருக்கிறான். எதிர்பாராத சந்திப்பு.

அவள் துறவியானதற்கான காரணத்தை அவளே நினைத்துப் பார்ப்பது போன்ற தோரணையில்  கதையை எழுதி இருக்கிறார் இமையம். ஏற்கனவே லட்சுமி என்னும் வேறொரு பெண்ணுடன் திருமணம் நிச்சயமான ஒருவன் ஜோதியை கல்யாணம் செய்ய விரும்புகிறான். ஜோதிக்கு அதில் துளியும் விருப்பமில்லை. தவறு என்பதில் தெளிவாய் இருக்கிறாள். ஜோதி சம்மதிக்காவிட்டால் தான் செத்துப்போவதாக மிரட்டுகிறான். ஒரு உயிர் செத்துப் போவதற்குத் தான் காரணமாகிவிடக் கூடாதே என்று கவலையும் பயமும் கொள்கிறாள். ஆனாலும் அவன் ஜோதியைக் கட்டாயப்படுத்தி திருமணம் செய்கிறான். ஜோதி திருமணம் முடிந்து வீடு திரும்புகிற வழியில் நிகழ்ந்த விபத்து ஒன்றில் ஜோதிக்குத் தாலி கட்டியவன் இறந்து போகிறான். காலையில் கட்டப்பட்ட தாலியை ஜோதி மாலையில் அறுத்து எரிகிறாள்.

 இறந்து போனவனுக்கு ஏற்கனவே நிச்சயிக்கப்பட்டிருந்த பெண் லட்சுமி தனக்கு நிச்சயம் செய்யப்பட்டு இருந்தவன் வேறொரு பெண்ணோடு திருமணம் செய்து கொண்டானே என்று இம் புரியாத விரக்தியில் தூக்கு மாட்டி இறந்து போகிறாள். இருவர் சாவுக்கு காரணமாகி விட்டாயே என்று கூறி பெருத்த அவமானத்தில் சோதியின் அம்மா அரளி விதை தின்று செத்துப் போகிறாள். அந்த மூன்று பேரின் சாவுக்கு ஜோதி தான் காரணம் என ரே நினைக்கிறது. அவள் காரணம் அல்ல என்பதைச் சரியான தர்க்கத்துடன் பேசுவது தான் கதை.

தான் காரணம் இல்லை என்பதை ஜோதி சொல்ல நினைத்தாலும் சொல்வதற்கான சூழலோ கேட்டுக் கொள்ளும் மனநிலையில்ரோ இல்லை. ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டு விட்ட அனுமானத்தின் படி அவளை ஊரே சேர்ந்து அடிக்கிறது. துப்புகிறது. எல்லாமே வேடிக்கை தான் பார்க்கிறார்கள். ன்று சோதியிடம் அருள்வாக்கு கேட்டு வந்திருப்பவனும் அன்று ஜோதியை வேடிக்கை பார்த்தவன் தான் என்பது கதையில் குறிப்பாகச் சொல்லப்படுகிறது. அவன் ஜோதிக்கு மாமா முறையும் கூட. தற்போது ஜோதியின் பெரியப்பா மகள் சுமதியைத்தான் அவன் திருமணம் செய்திருக்கிறான் .சுமதிக்கு இரண்டு குழந்தைகள். தற்போது மனப்பிறழ்வுக்கு உள்ளாகி இருக்கிறாள்.  நிறைய வைத்தியம் பார்த்தாயிற்று;னில்லை. தனது நண்பன் ஒருவனின் திருமணத்திற்கு வந்த இடத்தில் தான் கொல்லிமலை சாமியின் சக்தியை கேள்விப்பட்டு, ஒரு எட்டு போய் பார்த்துவிட்டு போகலாம் என வந்திருக்கிறான்.

ஜோதியும் சுமதியின் கணவனும் ஒரே சாதி. ஒரே ஊர். உறவினர்கள் என்ற போதிலும் இருவரும் பல வருடங்கள் கழித்து எதிர்பாராமல் யூகித்திருக்கவே முடியாத சூழலில் சந்தித்து கொள்கிறார்கள். கதையின் முடிச்சு இந்த பகுதிதான். ஓர்ணுக்கு அவனது ஒவ்வொரு அத்துமீறலுக்காகவும் அவனுக்குக் கிடைக்கும் வலிக்குவியலை பாரமேற்றி சுமந்து திரிவதற்கு ஏதோ ஒன்று தேவைப்படுகிறது. பலநேரங்களில் அந்த ‘ஏதோ ஒன்று’ பெண்களாகவே இருக்கிறார்கள் என்பதை மிக இயல்பாக போகிற போக்கில் சொல்லிவிடுகிறார் இமையம்.

மனப்பிறழ்வில் இருக்கும் சுமதியின் உலகமும் புதுவிதமாகச் சொல்லப்பட்டிருக்கிறது. மனப்பிறழ்ச்சி ஆணுக்கும் பெண்ணுக்கும் ஏற்படலாம் என்றபோதிலுல் ஆணைவிட பெண்ணின் இருப்பு, அவள் குறித்து பொதுவெளியில் உருவாக்கப்படும் சித்திரம் எவ்வளவு துயரும் புனைவும் கலந்தது என்பது நுணுக்கமான பதிவாக கதையில் அமைந்திருக்கிறது.

பெண்களின் உள்மன உலகம் பற்றி எழுதப்படாத எண்ணற்ற பக்கங்களின் ஒற்றைப் பிரதியாக அமைந்திருக்கிறது கொல்லிமலை சாமி.மையத்தின் கதைகளில் பெண்கள் பிரதானமாகி விடுவது இக்கதையிலும் தொடர்கிறது. ஜோதியின் உணர்வுகள் குடும்பம் என்னும் சதி வலைக்குள் சிக்கிக்கொண்டு வெளியேற எத்தனிக்கும் பல பெண்களின் ஒற்றைக் குரலாக ஒலிக்கிறது. சுதந்திரமான, மனம் விரும்புகிற, தனது வாழ்க்கையைத் தானே வாழ்ந்து பார்க்கிற, எதையும் இயல்பாகவே கருதி கடந்துவிட விரும்புகிறவர்களாகவே பெண்கள் இருக்கிறார்கள். முயற்சிக்கவும் செய்கிறார்கள் அவர்களின் அந்த இருப்பை இந்த உலகம் விரும்புவதில்லை என்பதை மிக அழகான புனைவு நேர்த்தியில் அமைந்திருக்கும் கதை தான் கொல்லிமலை சாமி.

…………………………

Comments

Popular posts from this blog

ரவிகாந்த் கிசானா எழுதிய 'சவர்ணர்களைச் சந்தியுங்கள்' (Meet the Savarnas) நூல் குறித்து….

            ஹைதராபாத்தில் உள்ள வோக்ஸன் பல்கலைக்கழகத்தில் (Woxsen University) இணைப் பேராசிரியராக உள்ள ரவிகாந்த் கிசானா இனவரைவியலில் ஆர்வமுடையவர். குறிப்பாக சாதிகள் குறித்து எழுதி வருகிறார். அவரது 'சவர்ணர்களைச் சந்தியுங்கள்' நூல் ‘அற்பத்தனங்கள் எல்லாவற்றையும் உடைத்த இந்திய மில்லினியல்கள்’ (Indian Millennials Whose Mediocrity Broke Everything) என்ற துணைத் தலைப்புடன் 2025 மே மாதம் வெளியானது. அது பற்றி ஜூலையில் ஃபிரண்ட் லைனில் அறிமுகம் வந்தபோதே வாசித்து விட்டு அமேசானில் தேடிய போது விற்றுத் தீர்ந்திருந்தது. மீண்டும் விற்பனைக்கு வந்த போது வாங்கி வாசித்தேன். நேற்று (28.12.2025) ஆங்கில இந்து நாளேட்டிலும் அந்த நூல் குறித்த பத்தி ஒன்று எழுதப்பட்டிருந்தது. இவை எல்லாமும் சேர்ந்து தமிழில் அது பற்றி எழுத வேண்டும் என்ற ஆர்வத்தை உண்டாக்கிவிட்டன.           இதில் ரவிகாந்த், சவர்ணர்கள் என்போர் யாவர்? சாதியை ஏன் பழைய விஷயமாகச் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்? சவர்ணங்களின் ‘நாங்கள் சாதி பார்ப்பதில்லை’ என்னும் புகழ் பெற்ற வாசகம் அவர்களின் சாதி உணர்...

ஹோசியா லோரென்சோ வில்லியம்ஸ்: தேர்தல் அரசியலின் நடைமுறைத் தொடர்ச்சி

ஆப்பிரிக்க அமெரிக்கர்களின் சிவில் உரிமைப் போராட்ட வரலாற்றில் முக்கியமானவர் ஹோசியா லோரென்சோ வில்லியம்ஸ் (Hosea Lorenzo Williams). போராட்டக் களத்தில் வெகுஜன உளவியலின் உருவாக்கத் தேவையை நன்கு அறிந்திருந்த அவர் , சமகாலத் தேர்தல் அரசியலின் நடைமுறைத் தொடர்ச்சியைப் புரிந்துகொள்ளப் பங்களித்து இருக்கிறார் . சர்வதேசிய அளவில் சிவில் உரிமைப் போராட்டக் களத்தின் எதார்த்த முகமாக இன்று அடையாளம் காணப்பட்டிருக்கும் வில்லியம்ஸ் ஜனநாயகம் , அகிம்சை , அரச வன்முறை , ஊடக அரசியல் , வர்க்கம் , இனம் ஆகியவற்றின் சந்திப்பில் உருவாகும் பெரியதொரு அரசியல் கேள்வியை அவர் காலத்தில் தம் வாழ்வனுபவத்தின் வழி எழுப்பியிருந்தார் . தேர்தல் பாதையில் அரசமைக்கும் நாடுகளுக்கான கேள்வி அது . ஹோசியா லோரென்சோ வில்லியம்ஸ் மதநீதியும் அரசியலும் வில்லியம்ஸ் 1926 ஜனவரி 5 ஆம் தேதி , அமெரிக்காவின் ஜார்ஜியா மாநிலத்தில் பிறந்தவர் . ஆப்பிரிக்க அமெரிக்கர்களுக்கு கல்வி , வேலை , வீடு , வாக்குரிமை போன்ற அடிப்படை உரிமைகளை மறுத்த ஜிம் க்ரோ (Jim Crow ) சட்டங்கள் அமலில் இருந்தபோது இளமைப் பருவத்தைக் கடந்தவர் . இரண்டாம் உலகப்போரில் அமெரிக்க ராணுவத்...

ஏழைகள் நடமாடும் குப்பைத் தொட்டியா?

  ஏழைகள் நடமாடும் குப்பைத் தொட்டியா? உலகப் பிரபலமான ஒருவர் 25.08.2024 அன்று வானொலியில் ஆற்றிய உரையில் சுற்றுச்சுழல் – பிளாஸ்டிக் கழிவு – மறு பயன்பாடு – மறுசுழற்சி பற்றிக் குறிப்பிட்டார். பிளாஸ்டிக் கழிவுகளால் சுற்றுச்சூழல் மாசுபடுகிறது என்கிற அவரது கூற்றில் உண்மை இல்லாமல் இல்லை. பிளாஸ்டிக் கழிவுகளைக் குறைப்பதற்கு அவர், பயன்படுத்திய பிளாஸ்டிக் பொருள்களை அப்படியே தூக்கி வீசிவிடாமல் அது தேவைப்படுகிறவர்களுக்குக் கொடுக்கலாம் என்றார். அதற்கு அவரே ஓர் உதாரணமும் சொன்னார். ‘பிளாஸ்டிக் பொம்மையை வைத்து விளையாடும் குழந்தை அந்த பொம்மை மீது சலிப்படைந்து விட்டால் அதை வீசி எறிந்து விடாமல், ஒரு சிறு பொம்மை கூட கிடைக்காமல் ஏங்கிக் கொண்டிருக்கும் குழந்தைகளுக்கு கொடுத்து விடலாம்’ என்பது தான் அந்த உதாரணம். அப்படிச் செய்வதால் பிளாஸ்டிக் கழிவுகளை மறுபயன்பாட்டுக் கொண்டு வந்து சுற்றுச்சூழலைக் காப்பாற்றலாமாம். எனக்கு இறந்து நாற்றமடிக்கும் விலங்குகளைச் சாப்பிடுவதாலே காக்கைக்கு ‘ஆகாயத்தோட்டி’ என்றும் கழுதைப்புலிக்கு ‘வனத்தோட்டி’ என்றும் அறிவுஜீவிகள் ‘சிறப்பு’ப் பெயர்கள் வைத்திருப்பதும் வீட்டில் மீந்து போன...