Skip to main content

இமையத்தின் ‘கொல்லிமலை சாமி’ என்றொரு கதை

 


கொல்லிமலை சாமி என்றொரு கதை

2022 ஜூலை நீம் இதழில் இமையம் கொல்லிமலை சாமி என்றொரு கதை எழுதி இருக்கிறார். ‘ஜோதி என்கிற பெண் தான் கதையின் மையம். பெரம்பலூரை அடுத்த அன்னமங்கலத்துக்காரி. அவள் ஒரு துறவி. துறந்ததால் துறவியானவள் அல்ல. அன்னமங்கலத்திலிருந்து துரத்தப்பட்டதால் துறவியானவள். தேசமெங்கும் சுற்றிவிட்டு தற்போது கொல்லிமலை சேர்ந்து  கொல்லிமலை சாமி’ ஆகிப் போனவள். சுற்று வட்டாரத்தில் அவளுக்கு ஏக மரியாதை. துயருடன் வருவோருக்கு துயர் களைவது ஜோதியின் வேலை. தன்னை நாடி வருவோரின் கதைகளைக் கேட்டுக்கேட்டு மனிதர்களினுடைய அற்பத்தனங்களின் பல்வேறு ரூபங்களைக் கண்டுபிடித்தவள். மனிதர்களின் பலமும் பலவீனமும் அவர்களின் ஏகோபித்த அற்பத்தனங்கள் தான் என்பதை அனுபவத்தில் கண்டவள். தன்னை தேடி வரும் பக்தர்கள் தருவது தான் அவது உணவு. நல்ல அழகி. துறவிக்கு அழகு கூடாது என்பதற்காகவே மொட்டை அடித்துக் கொண்டவள். இன்று அவளிடம் அருள் வாக்கு கேட்பதற்காக ஜோதியின் ஊர்க்காரனே ஒருவன் வந்திருக்கிறான். எதிர்பாராத சந்திப்பு.

அவள் துறவியானதற்கான காரணத்தை அவளே நினைத்துப் பார்ப்பது போன்ற தோரணையில்  கதையை எழுதி இருக்கிறார் இமையம். ஏற்கனவே லட்சுமி என்னும் வேறொரு பெண்ணுடன் திருமணம் நிச்சயமான ஒருவன் ஜோதியை கல்யாணம் செய்ய விரும்புகிறான். ஜோதிக்கு அதில் துளியும் விருப்பமில்லை. தவறு என்பதில் தெளிவாய் இருக்கிறாள். ஜோதி சம்மதிக்காவிட்டால் தான் செத்துப்போவதாக மிரட்டுகிறான். ஒரு உயிர் செத்துப் போவதற்குத் தான் காரணமாகிவிடக் கூடாதே என்று கவலையும் பயமும் கொள்கிறாள். ஆனாலும் அவன் ஜோதியைக் கட்டாயப்படுத்தி திருமணம் செய்கிறான். ஜோதி திருமணம் முடிந்து வீடு திரும்புகிற வழியில் நிகழ்ந்த விபத்து ஒன்றில் ஜோதிக்குத் தாலி கட்டியவன் இறந்து போகிறான். காலையில் கட்டப்பட்ட தாலியை ஜோதி மாலையில் அறுத்து எரிகிறாள்.

 இறந்து போனவனுக்கு ஏற்கனவே நிச்சயிக்கப்பட்டிருந்த பெண் லட்சுமி தனக்கு நிச்சயம் செய்யப்பட்டு இருந்தவன் வேறொரு பெண்ணோடு திருமணம் செய்து கொண்டானே என்று இம் புரியாத விரக்தியில் தூக்கு மாட்டி இறந்து போகிறாள். இருவர் சாவுக்கு காரணமாகி விட்டாயே என்று கூறி பெருத்த அவமானத்தில் சோதியின் அம்மா அரளி விதை தின்று செத்துப் போகிறாள். அந்த மூன்று பேரின் சாவுக்கு ஜோதி தான் காரணம் என ரே நினைக்கிறது. அவள் காரணம் அல்ல என்பதைச் சரியான தர்க்கத்துடன் பேசுவது தான் கதை.

தான் காரணம் இல்லை என்பதை ஜோதி சொல்ல நினைத்தாலும் சொல்வதற்கான சூழலோ கேட்டுக் கொள்ளும் மனநிலையில்ரோ இல்லை. ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டு விட்ட அனுமானத்தின் படி அவளை ஊரே சேர்ந்து அடிக்கிறது. துப்புகிறது. எல்லாமே வேடிக்கை தான் பார்க்கிறார்கள். ன்று சோதியிடம் அருள்வாக்கு கேட்டு வந்திருப்பவனும் அன்று ஜோதியை வேடிக்கை பார்த்தவன் தான் என்பது கதையில் குறிப்பாகச் சொல்லப்படுகிறது. அவன் ஜோதிக்கு மாமா முறையும் கூட. தற்போது ஜோதியின் பெரியப்பா மகள் சுமதியைத்தான் அவன் திருமணம் செய்திருக்கிறான் .சுமதிக்கு இரண்டு குழந்தைகள். தற்போது மனப்பிறழ்வுக்கு உள்ளாகி இருக்கிறாள்.  நிறைய வைத்தியம் பார்த்தாயிற்று;னில்லை. தனது நண்பன் ஒருவனின் திருமணத்திற்கு வந்த இடத்தில் தான் கொல்லிமலை சாமியின் சக்தியை கேள்விப்பட்டு, ஒரு எட்டு போய் பார்த்துவிட்டு போகலாம் என வந்திருக்கிறான்.

ஜோதியும் சுமதியின் கணவனும் ஒரே சாதி. ஒரே ஊர். உறவினர்கள் என்ற போதிலும் இருவரும் பல வருடங்கள் கழித்து எதிர்பாராமல் யூகித்திருக்கவே முடியாத சூழலில் சந்தித்து கொள்கிறார்கள். கதையின் முடிச்சு இந்த பகுதிதான். ஓர்ணுக்கு அவனது ஒவ்வொரு அத்துமீறலுக்காகவும் அவனுக்குக் கிடைக்கும் வலிக்குவியலை பாரமேற்றி சுமந்து திரிவதற்கு ஏதோ ஒன்று தேவைப்படுகிறது. பலநேரங்களில் அந்த ‘ஏதோ ஒன்று’ பெண்களாகவே இருக்கிறார்கள் என்பதை மிக இயல்பாக போகிற போக்கில் சொல்லிவிடுகிறார் இமையம்.

மனப்பிறழ்வில் இருக்கும் சுமதியின் உலகமும் புதுவிதமாகச் சொல்லப்பட்டிருக்கிறது. மனப்பிறழ்ச்சி ஆணுக்கும் பெண்ணுக்கும் ஏற்படலாம் என்றபோதிலுல் ஆணைவிட பெண்ணின் இருப்பு, அவள் குறித்து பொதுவெளியில் உருவாக்கப்படும் சித்திரம் எவ்வளவு துயரும் புனைவும் கலந்தது என்பது நுணுக்கமான பதிவாக கதையில் அமைந்திருக்கிறது.

பெண்களின் உள்மன உலகம் பற்றி எழுதப்படாத எண்ணற்ற பக்கங்களின் ஒற்றைப் பிரதியாக அமைந்திருக்கிறது கொல்லிமலை சாமி.மையத்தின் கதைகளில் பெண்கள் பிரதானமாகி விடுவது இக்கதையிலும் தொடர்கிறது. ஜோதியின் உணர்வுகள் குடும்பம் என்னும் சதி வலைக்குள் சிக்கிக்கொண்டு வெளியேற எத்தனிக்கும் பல பெண்களின் ஒற்றைக் குரலாக ஒலிக்கிறது. சுதந்திரமான, மனம் விரும்புகிற, தனது வாழ்க்கையைத் தானே வாழ்ந்து பார்க்கிற, எதையும் இயல்பாகவே கருதி கடந்துவிட விரும்புகிறவர்களாகவே பெண்கள் இருக்கிறார்கள். முயற்சிக்கவும் செய்கிறார்கள் அவர்களின் அந்த இருப்பை இந்த உலகம் விரும்புவதில்லை என்பதை மிக அழகான புனைவு நேர்த்தியில் அமைந்திருக்கும் கதை தான் கொல்லிமலை சாமி.

…………………………

Comments

Popular posts from this blog

டவுசர் அக்காவுக்கு வீர வணக்கம்

1990 களில் எங்களூர் பகுதியில் டவுசர் அக்கா மிகப் பிரபலம். சாயங்காலம் ஆகிவிட்டால் டவுசரோடு காணப்படுவார். ஆகையால் அவருக்கு அந்தப் பெயர் வாய்த்துவிட்டது. இன்றைக்குப் பெண்கள் டவுசர் அணிவது நகரங்களில் இயல்பாகிவிட்டது. கிராமங்களுக்கு அது இன்னும் முழுமையாக வந்து சேரவில்லை. ஆனால் நாற்பது வருடங்களுக்கு முன்னால் கிராமங்களில் டவுசர் அணிவது எப்படி இருந்திருக்கும் என்பதை நினைத்துப் பார்த்தோமானால் இன்றைக்கும் டவுசர் அக்காவை வியக்காமல் இருக்க முடியாது. கை வைத்த பனியனும் டவுசரும் அணிந்திருக்கும் அக்கா எப்போதும் டவுசர் பையில் நான்கு அங்குல நீளத்தில் கைபிடி தெரியும் படி கத்தி ஒன்றை வைத்திருப்பார். பகல் நேரங்களில் சேலையில் இருந்தாலும் டவுசரும் கத்தியும் உள்ளுக்குள் இருக்கத்தான் செய்யும். ஆண்கள் பெண்கள் யாராக இருந்தாலும் டவுசர் அக்காவுக்கு ‘ மாமா – அக்கா ’ தான். வாய்விட்டு சிரிக்கச் சிரிக்கப் பேசுவாள். கூலிக்கென்று வேலைக்குப் போக மாட்டாள். சம்பாதிப்பது பற்றி யோசிப்பதே கிடையாது. குடும்பம் கிடையாது. யார் வீட்டில் கொடுத்தாலும் வாங்கிச் சாப்பிட்டுக் கொள்வாள். யாரேனும் தோட்ட வேலைக்குக் கூப்பிட்டால் ‘ போங்க … வ...

அயோத்திதாசரின் விடுதலைப் பெளத்தம்

  இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தமிழ்ச் சமூகத்தின் அறிவுஜீவித அடையாளமாகத் திகழும் அயோத்திதாசர் , அக்காலத்தின் வாழ்க்கைச் சூழலுக்கும் நிலவிய அரசியல் தன்மைக்கும் ஏற்ப பெளத்தத்தை முன்வைத்தவர் . அவர் காலத்திய வரலாற்றுத் திரிபுகளை அம்பலப்படுத்தினார் . அதற்காக சடங்குகள் , பழக்க வழக்கங்கள் , இலக்கிய இலக்கணங்கள் , நிகண்டுகள் உள்ள்ளிட்ட எழுத்தாவணங்கள் ஆகியவற்றைப் பயன்படுத்தினார் . வரலாற்றைத் திரிபு செய்தவர்கள் பயன்கொண்ட சான்றுகளையே அயோத்திதாசரும் பயன்கொண்டு அதன் மீது வேறொரு வாசிப்பை நிகழ்த்தினார் . ஒரு வாசிப்பி ன் வழி வரலாற்றை எழுதுவதற்கும் புரிந்துகொள்வதற்குமான அரசியலை வெளிப்படுத்தியதுடன் தனது அரசியல் நிலைப்பாட்டையும் முன்வைத்தார் . தமிழ்ச்சமூகத்தை ஆதி திராவிடர் , திராவிடர் எனப் பகுத்து ஆதி திராவிடர்களைப் பூர்வப் பெளத்தர்கள் என்றார் . அதற்காக அவர் முன் வைத்த வாதங்கள் பூர்விகமான மண்ணின் மணம் கொண்டவை என்பது குறிப்பிடத்தக்கது . அயோத்திதாசர் அயோத்திதாசரின் காலத்தில் வரலாறு , பண்பாடு , இலக்கியம் , தத்துவம் ஆகியவற்றை ஐரோப்பிய வெளிச்சத்தில் பார்க்கும் போக்கு உருவாகிவிட்டிருந்தது . இந்திய...

ஹரிஜனங்களும் சதபத பிராமண கதைகளும்

ஹரிஜனங்களும் சதபத பிராமண கதைகளும் 1933 இல் எம்.ஆர்.ஜம்புநாதன் எழுதிய நூல் சதபத பிராமணம். வேதங்கள் , உபநிடதங்கள் ஆகியவற்றின் செய்திகளை விளக்கும் வண்ணம் எதையாவது எழுதும் வழக்கமுடைய ஜம்புநாதன் , யசூர் வேதத்தின் சில பகுதிகளை விளக்கும் முகமாக சதபத பிராமணத்தை எழுதியிருக்கிறார். அதில் 88 விளக்கக் குறிப்புகள் இடம் பெற்றிருக்கின்றன. அவற்றை அவர் ‘ கதைகள் ’ என்கிறார். உண்மையில் அவற்றைக் கதைகள் என்று சொல்வது கூட ரெம்ப அதிகம் தான்.  இந்நூலை அவர் ஹரி ஜனங்களுக்குச் சமர்ப்பித்திருக்கிறார். அதற்கான காரணத்தை அவரே விவரிக்கிறார். நூலில் ருத்திரனின் இயல்புகளை விவரிக்கும் அவர் ‘ ருத்திரனின் குணங்கள் அனைத்தும் ஹரிஜனங்களிடம் உள்ளது ’ என்பதாக அரிய கண்டுபிடிப்பை நிகழ்த்துகிறார். இந்த ஒப்பீட்டின் வழி அவரது அறிவின் அளவு துலக்கப்பட்டிருக்கிறது. இவற்றையெல்லாம் தாண்டி நூல் எதற்காக எழுதப்பட்டிருக்கும் என யோசித்தால் ஹரிஜனங்களை இந்துக்களாகச் சித்திரிப்பதே நோக்கமாக இருந்திருக்க வேண்டும் என்பது தெரிகிறது. சான்றாக , ருத்திரனுக்கும் ஹரிஜனங்களுக்கும் அவர் சொல்லும் ஒற்றுமைக் காரணங்கள் சிலவற்றைப் பார்க்கலாம். உலகம் ...