Skip to main content

ஏலாக்குறிச்சி செல்லும் வழி / Elakurichi Bus Rote

 

ஏலாக்குறிச்சி செல்லும் வழி

ஏலாக்குறிச்சி ஓர் அழகான ஊர். திருக்காவலூர் என்பது அதன் பழைய பெயர்.  கத்தோலிக்கக் கிறித்தவர்கள் வாழ்வில் ஒருமுறையேனும் சென்று வரலாம். பதினெட்டாம் நூற்றாண்டில் இத்தாலியில் இருந்து தமிழகம் வந்த வீரமாமுனிவர் பணியாற்றிய பெருமைகொண்டது இவ்வூரில் அமைந்திருக்கும் அடைக்கல மாதா ஆலயம். இங்கிருந்து தான் அவர் தேம்பாவணி, கித்தேரியம்மாள் அம்மானை, திருக்காவலூர்க் கலம்பகம் முதலியவற்றை எழுதியதாகச் சொல்லப்படுகிறது.

மிக அழகிய வேலைப்பாடுடன் கூட ஆலயக் கட்டுமானம் பிரமிக்க வைக்கிறது. அடைக்கல மாதாவின் சுருபம் சிரித்த முகத்துடன் தமிழ்நாட்டுப் பெண்களின் முகத்தை ஒத்திருப்பதை ஐரோப்பியர்கள் பதினெட்டாம் நூற்றாண்டிலேயே ‘மண்ணுக்கேற்ற மதம்’ என்கிற புரிதலில் பணியாற்றியதன் அடையாளமாகக் கொள்ளலாம்.

ஆலயத்தைச் சுற்றி இருக்கும் வயல்கள் எப்போதும் ஆலயத்தை குளுமையாகவே வைத்திருக்கின்றன. ஆழ்ந்து தியானம் செய்வதற்கு மிகவும் ஏற்ற இடம். திருச்சியில் இருந்து 68 கிலோ மீட்டர். திருச்சி – கல்லணை – திருவையாறு சென்று  அரியலூர் சாலையில் சென்றால் 10 கி.மீ துரத்தில் திருமானூர் வரும். அதில் இருந்து அரியலூர் சாலையிலேயே சென்றால் 2 கி.மீ. தூரம் தாண்டி சாலையின் வலது புறம் ‘ஏலாக்குறிச்சி அடைக்கல மாதா’ என்னும் ஆர்ச் இருக்கும். அதனுள் நுழைந்து சென்றால் 20 நிமிடத்தில் ஆலயத்தை அடையலாம். வழி நெடுக காவிரியின் அழகையும் வாழை, நெல், வெற்றிலையின் பசுமை வெளிகளையும் கண்களுக்கு விருந்தாக்கலாம்.

-      ஞா.குருசாமி

……………………………

Comments

Popular posts from this blog

ரவிகாந்த் கிசானா எழுதிய 'சவர்ணர்களைச் சந்தியுங்கள்' (Meet the Savarnas) நூல் குறித்து….

            ஹைதராபாத்தில் உள்ள வோக்ஸன் பல்கலைக்கழகத்தில் (Woxsen University) இணைப் பேராசிரியராக உள்ள ரவிகாந்த் கிசானா இனவரைவியலில் ஆர்வமுடையவர். குறிப்பாக சாதிகள் குறித்து எழுதி வருகிறார். அவரது 'சவர்ணர்களைச் சந்தியுங்கள்' நூல் ‘அற்பத்தனங்கள் எல்லாவற்றையும் உடைத்த இந்திய மில்லினியல்கள்’ (Indian Millennials Whose Mediocrity Broke Everything) என்ற துணைத் தலைப்புடன் 2025 மே மாதம் வெளியானது. அது பற்றி ஜூலையில் ஃபிரண்ட் லைனில் அறிமுகம் வந்தபோதே வாசித்து விட்டு அமேசானில் தேடிய போது விற்றுத் தீர்ந்திருந்தது. மீண்டும் விற்பனைக்கு வந்த போது வாங்கி வாசித்தேன். நேற்று (28.12.2025) ஆங்கில இந்து நாளேட்டிலும் அந்த நூல் குறித்த பத்தி ஒன்று எழுதப்பட்டிருந்தது. இவை எல்லாமும் சேர்ந்து தமிழில் அது பற்றி எழுத வேண்டும் என்ற ஆர்வத்தை உண்டாக்கிவிட்டன.           இதில் ரவிகாந்த், சவர்ணர்கள் என்போர் யாவர்? சாதியை ஏன் பழைய விஷயமாகச் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்? சவர்ணங்களின் ‘நாங்கள் சாதி பார்ப்பதில்லை’ என்னும் புகழ் பெற்ற வாசகம் அவர்களின் சாதி உணர்...

தத்துவங்கள் குறித்த உரையரங்கம்

  தத்துவங்கள் குறித்த உரையரங்கம் கோவை பீளமேட்டில் ‘ பார்வையற்றோருக்கான அறிவே துணை ஆய்வு மையம் ’ தத்துவ அறிமுகக் கூட்டம் ஒன்றை 2026 மே 29 அன்று நடத்தியது . அதன் தலைவர் பேராசிரியர் சுகுமாரன் நிகழ்வை ஒருங்கிணைத்து இருந்தார் . பெரியாரியம் குறித்து   கு . ராமகிருஷ்ணன் பேசினார். இணைய வழியில் கலந்துகொண்ட   தியாகு மார்க்சியம் குறித்துப் பேசினர் .  நான் அம்பேத்கரியம் பேசினேன் . அம்பேத்கரை எப்படி வாசிக்கத் தொடங்குவது என்பதில் தொடங்கி கூட்டுச் சிந்தனையில் அம்பேத்கரின் அவசியத்தை வலியுறுத்துவதாக எனது உரையை அமைத்துக் கொண்டேன் . மனநிறைவான நிகழ்வாக அமைந்தது . சிறிய அளவிலான கூட்டம் என்றாலும் ஒருசிலரைத் தவிர அனைவரும் பார்வையற்றவர்களே . அவர்களோடு பேசிய தருணங்கள் நாம் பார்த்திராத உலகத்தைக் காட்டின . ஒருவர் ‘ மாற்றுத்திறனில்  21 வகை உள்ளதாக அரசு வரையறுத்து இருக்கிறது . எல்லோரையும் ஒரே மாதிரியாகக் கருதுவது மாற வேண்டும் ’ என்றார் . ‘ நடக்க இயலாதவர்களையும் எங்களையும் எப்படி ஒன்றாகக் கருத முடியும் ’ என்ற கேள்வியில் உறுதியாக இருந்தார் . ‘ நடக்க இயலாதவர் தன்னால் இயல்பாகத் தனித்துச் ...

இராணிப்பேட்டை அமுதாவும் அதிபர் டிரம்ப்பும்

கடந்த 2026  ஜனவரி 09 ஆம் தேதி இராணிப்பேட்டை மாவட்டம் ,  பொன்னேரியில் முதல் அமைச்சர் கலந்துகொண்ட ‘ உங்க கனவ சொல்லுங்க ’ நிகழ்ச்சி நடைபெற்றது . இதில் கனவைச் சொல்ல அழைக்கப்பட்ட இராணிப்பேட்டை மாவட்டம் , காவேரிப்பாக்கம் ஒன்றியம் , கரிவேடு ஊராட்சி , சித்தஞ்சி கிராமத்தைச் சேர்ந்தவரும் அதே கிராமத்தில் செயல்பட்டு வரும் கங்கையம்மன் மகளிர் சுயஉதவிக் குழுவின் ஊக்குநருமான எம் . அமுதா தனது கனவைச் சொன்னார் .  பதினைந்து ஆண்டுகளாக பல்வேறு கடனுதவிகளைப் பெற்று மாவு அரைக்கும் எந்திரந்தின் மூலம் வருமானம் ஈட்டி வரும் அமுதா எஸ்சி / எஸ்டி மக்களுக்கு மானியக் கடன் கிடைப்பதாகவும் தங்களுக்கு நேரடிக் கடன் மட்டுமே கிடைப்பதாகவும் குறைபட்டுக் கொண்டார் . அவர் பேச்சில் இருந்த முக்கியமான விஷயம் ‘ எஸ்சி எஸ்டிக்கெல்லாம் குடுத்தா நாங்க எங்க போறது ’ என்கிற அழுத்தம் தான் . அவரது தேவையைக் கேட்டுப் பெறுவதில் அவருக்கு உரிமை உண்டு . ஆனால் ‘ எஸ்சி எஸ்டிகளுக்குக் கிடைக்கிறது எங்களுக்குக் கிடைக்கவில்லை ’ என்கிற ஒப்பீடு சரியானதல்ல . தவிர , இதை அவரது தனிப்பட்ட கருத்து என்பதை விட கூட்டுச் சமூகத்தின் மனநிலை என்பதற்கு அ...