Skip to main content

Posts

Showing posts from September, 2017

பண்பாட்டை முன்னெடுத்தலில் இளைஞர்களுக்கான வெளி

ப ண் பாட்டை முன்னெடுத்தலில் இளைஞர்களுக்கான வெளி ஞா.குருசாமி, அரசுக்கும் மக்களுக்குமான வெளி சிறுகச் சிறுக அதிகரித்து இன்று உச்சத்தை எட்டியிருக்கிறது. ஆட்சியாளர்களின் சிந்தனையும் செயல்பாடும் அவர்களின் உள்மனவெளியின் பாசாங்குத் தனத்தை அப்பட்டமாக வெளிப்படுத்துகின்றன. மக்கள் எல்லாவற்றையும் சகிக்கப் பழகிவிட்டிருப்பதுதான் காலத்தின் பேரவலம். ‘கறுப்பாக இருப்பவர்கள் இந்தியர்கள் அல்ல’, ‘சிறுபான்மையினர் தேசத் துரோகிகள’;, ‘லெக்கின்ஸ் அணியும் பெண்கள் ஒழுக்கம் கெட்டவர்கள’; என்றெல்லாம் ஆட்சியாளர்களிடம் இருந்து வெளிப்பட்ட ஆபத்தான பேச்சுகளுக்கும் பண்பாட்டோடு தொடர்புடைய பிற்போக்கான கருத்துக்களுக்கும் மக்கள்திரள் போதுமான எதிர்வினையைக் காட்டாதது சமுதாய அக்கறையுள்ளவர்களைக் கவலைக்குள்ளாக்கி இருக்கிறது. தேசியச் சூழல் இப்படியிருக்க பன்னாட்டு நிறுவனங்கள் ஏற்படுத்தும் உளவியல் நெருக்கடிகள் ஏராளம். இவைகளுக்கு இடையில் எல்லாவற்றுக்கும் ஏங்கித் தவிக்கும் சமூகம் ஒன்றும் உருவாக்கப்பட்டுவிட்டது. வாழ்தலுக்கான இருத்தலுக்கே ஏங்கித் தவிக்கும் சூழலில் பண்பாட்டை முன்னெடுக்கும் சாத்தியப்பாடுகள் குறித்தும் அவதானிக்க ...

அனிதா - நீட் - தூய்மை பாரதம் - சில விவாதக் குறிப்புகள்

அனிதா - நீட் - தூய்மை பாரதம் - சில விவாதக் குறிப்புகள் ஞா. குருசாமி, ஹைதராபாத் மத்திய பல்கலைக்கழக ஆய்வாளர் ரோகித் வெமுலா, டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக ஆய்வாளர் முத்துக்கிருஷ்ணன், பன்னிரண்டாம் வகுப்பு தேர்வில் 1176 மதிப்பெண்ணைப் பெற்று மருத்துவப் படிப்பை எதிர்நோக்கி இருந்த அனிதா என ஆராய்ச்சிலும் கல்வியிலும் தனித்திறன் பெற்ற திறமைசாலிகளை அரசு எந்திரம் குறிவைத்து தற்கொலைக்கு உள்ளாக்கும் போக்கு வருத்தம் அளிக்கிறது. இந்த தேசத்தில் வருணாசிரமத்தின் அடிப்படையில் நிகழ்த்தப்படும் சதிக்கொடுமை ஒன்றும் புதியதல்ல. ஏகலைவர் காலம் தொடங்கி நடத்து வருகிறது. ஏகலைவர், நந்தர் என்னும் மிக நீண்ட வரிசையில் இன்றைக்கு அனிதாவை இழந்திருக்கிறது இந்த சமுதாயம் என்று மிகவும் மொன்னையான சமாதானத்தைத் தற்காலிகமாகக் கூடத் தேடிக்கொள்ள மனம் மறுக்கிறது. தமிழ்நாட்டில் சமீபத்தில் முக்கியக் கவனம் பெற்ற நிகழ்வு ஜல்லிக்கட்டுக்கான தடையை நீக்கக்கோரிய போராட்டம். சமுதாயத்தின் எல்லா தரப்பினரும் ஒருங்கிணைந்து களம் கண்டனர். அது தமிழர்களின் ரத்தத்திலேயே ஊறிப்போய் உறங்கிக் கிடந்த வீரத்தின் வெளிப்பாடு என்றெல்லாம் பேசப்பட்டத...

சமுதாய வலைத்தளங்களின் உள்ளும் புறமும்

சமுதாய வலைத்தளங்களின் உள்ளும் புறமும் ஞா.குருசாமி பத்தாண்டுகளுக்கு முன்னால் அலைபேசி, கணினி, மடிக்கணினி, மின்னஞ்சல்;, வாட்ஸ்ஆப், ட்வீட்டர், ஃபேஸ்புக், இன்ஸ்;டாகிராம் என்பன இந்தியாவுக்குள் நுழைந்துகொண்டிருந்த நேரம். வெகுஜனமக்களைச் சென்றடையாத காலம். இதனால் பல நூறு நபர்களின் முகவரிகளும், தொலைபேசி எண்களும் நினைவில் இருந்தன. இன்று மேற்கூறிய எல்லாமும் பரவலாகிவிட்டன. விளைவு இன்று மனிதனின் நினைவில் ஒன்றுமில்லை. பள்ளி மாணவர்களின் மனனம் செய்யும் திறனே முன்னெப்போதையும் விட இப்பொழுது குறைந்திருப்பதைக் காணலாம். மிகப் பெரிய பெருக்கல் வகுத்தல்களை மனதுக்குள்ளேயே நிகழ்த்தி விடை சொன்ன காலம் போய் இன்று சிறு கணக்குகளுக்கும் கால்குலேட்டரை நம்பும் தலைமுறை உருவாகிவிட்டது. ஐயாயிரம் பக்கத்திற்கு மேலுள்ள மருத்துவச் சுவடிகளின் செய்திகளைக் கூட செவிவழியாக கடத்தி மனப்பாடம் செய்த தலைமுறையின் வாரிசுகள் இன்று அனைத்தையும் தட்டச்சு செய்து கணினியில் சேமிக்கிறார்கள். ஒரு மனிதரின் அலைபேசி தொலைந்து போகுமெனில் அவர் இழப்பது அலைபேசி மட்டுமல்ல. வங்கிக் கணக்கு எண், மின் இணைப்பு எண், உறவுகளின், பணியிடத்தின் தொலைபேசி எண...

அரசுப் பள்ளி மாணவர்களின் புதிய எதிர்கொள்ளல்…

அரசுப் பள்ளி மாணவர்களின் புதிய எதிர்கொள்ளல்… ஞா.குருசாமி           மக்களின் பொறியியல் குறித்த எதிர்மறை எண்ணம் கடந்த ஆண்டை விட இப்பொழுது அதிகரித்திருக்கிறது. தனியார் மருத்துவக் கல்லூரிக்குச் செலவிடும் தொகையில் சிறுபகுதியைத் தனியார் பள்ளியில் செலவளித்து அரசு மருத்துவக் கல்லூரிகளுக்குத் தம் பிள்ளைகளைத் தயார் படுத்துவதே நிரந்தர வருவாயுள்ள, நடுத்தர மக்களின் பெருங்கனவாக இருக்கிறது. அது சாத்தியப் படாத பொழுது அவர்களின் அடுத்த இலக்கு பொறியியல். போதிய வேலை வாய்ப்பின்மை, தற்போதைய சூழல் ஆகியவற்றின் அடிப்படையில் மக்கள் பொறியியல் இலக்கை மாற்றி இன்று கலை அறிவியல் கல்லூரிகளை நாடத் தொடங்கி விட்டனர். அறிவியலில் இயற்பியல், கணிதப் பட்டப்படிப்புகளுக்கும் கலையியலில் ஆங்கில இலக்கியப் படிப்புக்கும், வணிகவியலுக்கும் மிகுந்த போட்டி ஏற்பட்டிருக்கிறது.        அரசு நடத்தும் போட்டித் தேர்வுகளில் கலை அறிவியல் கல்லூரி மாணவர்கள் கணிசமான பேரளவில் வெற்றி பெற்று பணிவாய்ப்பு பெற்றுவிடுகின்றனர். கல்வியியல் முடித்த பலர் ஆசிரியர் தகுதித் ...