கிளாடெட் கோல்வின் தன்னுடைய பதினைந்தாவது வயதில் அமெரிக்காவினுடைய அலபாமாவின் மான்ட்கோமரியில் அனைவருக்குமான பொதுப் பேருந்தில் தனது இருக்கையை வெள்ளையினப் பெண்ணுக்கு விட்டுக்கொடுக்க மறுத்ததற்காகக் கைது செய்யப்பட்ட முதல் நபர் ஆவார். அவர் கடந்த 2026 ஜனவரி 13 அன்று தன்னுடைய 86 வது வயதில் இறந்தார். செப்டம்பர் 5, 1939 அன்று பிறந்த கோல்வினைப் பற்றி வாழ்க்கை வரலாற்றாசிரியரான பிலிப் ஹூஸ் சொல்லும்போது , செங்கற்களால் கட்டப்பட்ட சிறிய வீடுகளும் , திறந்தவெளி கழிப்பறைகளும் நிறைந்த , தார் போடப்படாத மூன்று தெருக்கள் கொண்ட ஒரு பகுதியில் வளர்ந்தார் என்று குறிப்பிடுகிறார். கிளாடெட் கோல்வின் குழந்தைப் பருவத்திலேயே பெற்றோரை இழந்த கோல்வினை அவரது பெரிய அத்தை மேரி ஜேன் , பெரிய மாமா கியூ.பி. ஸ்மித் ஆகிய...