Skip to main content

Posts

Showing posts from October, 2023

அமுதா ஆர்த்தி: சமகால பெண் எழுத்தின் புது வசீகரம்

2019 – இல் அழகிய பெரியவனின் ‘ அம்மா உழைப்பதை நிறுத்திக்கொண்டார் ’ என்னும் சிறுகதைத் தொகுப்புக்கான மதிப்புரையை ‘ பேசும் புதிய சக்தி ’ யில் எழுதியிருந்தேன் . அந்த இதழில் தான் அமுதா ஆர்த்தியைத் தெரியும் . அமுதா ஆர்த்தி அதில் ‘ சைக்கிள் சவுட்டு ’ என்ற கதையை எழுதியிருந்தார் . நாடோடி இளைஞன் , அவன் மீது காதல் கொள்ளும் உள்ளூர் பெண் . அவனை ஏற்கனவே திருமணம் செய்துகொண்டதாகச் சொல்லும் திருநங்கை என்று மூவருக்குமான உணர்வுச் சிக்கலை நுட்பமாக விவரித்த கதை அது .   மார்ச் 2020 இல் ‘ அவளது உடைமரக்காடும் வெட்டுக்கத்தியும் ’ கதையை காலச்சுவடில் வாசித்தேன் . 2022 – இல் அம்ருதாவில் ‘ வெற்றுடல் குளம் ’ வாசித்தேன் . 2023 ஜனவரியில் காலச்சுவடில் ‘ ரயிலைத் துரத்தும் இரவு ’ வாசித்தேன் . இப்படித்தான் அமுதா ஆர்த்தி கதைகளோடு எனது பயணம் தொடங்கியது . அவரது கதைகளின் களம் ஏறக்குறைய ஒரே மாதிரியானவை தான் என்றாலும் அவரது ஒவ்வொரு கதைக்கும் அவர் காட்டுகிற வேறுபாடு தான் அவரது கதையின் தனித்துவம் .  பெண் , தனிமை , வெறுமை , முடிந்தவரை தனிமைக்குள்ளும் கொண்டாட்டத்தைத் தேடுதல் , தேடுதல் கைகூடாத போது விரக்தி என்பதாக பல கதை...

லி.ராம்ராஜின் கு.அழகிரிசாமி குறித்த நாடகம் : சில புரிதல்கள்

நண்பர் ராம்ராஜ் சமகால தமிழ் நாடகத்தில் முக்கியமானவரத் தெரிகிறார். Campus Theatr e  என்ற வகைமையை நேர்த்தியாகவும் தொடர்ச்சியாகவும் செய்து கொண்டிருக்கிறார். இதற்கு முன்பு 2018 வாக்கில் திண்டுக்கல்லில் அர்ஷியாவின் படைப்புகள் குறித்த ஆய்வரங்கில் ஒரு நாடகத்தை நிகழ்த்தினார். அந்நிகழ்வில் எனது உரையை முடித்துவிட்டு அந்த நாடகத்தைப் பார்த்தேன். ஒரு விசயத்தைப் பேசுவதற்கும் நிகழ்த்துவதற்குமான பாரதூர வேறுபாட்டை அன்று தான் கண்டு உணர்ந்தேன். அது முதலே ராம்ராஜின் அரங்கச் செயல்பாட்டின் மீது எனது பார்வையை வைத்துக் கொண்டே வந்திருக்கிறேன். ஐரோப்பிய நாடுகளின் அரசியல், பண்பாட்டு மாற்றங்களில் C ampus Theatre முக்கியப் பங்கு வகித்திருக்கிறது. அதற்குப் பல முகங்கள் இருந்தாலும் எளியோர்களின் முகங்களைச் சுமந்து வரும்போதெல்லாம் பாசிஸ்ட்டுகளின் தூக்கத்தைக் கெடுக்காமல் அவை இருந்ததில்லை. அதனால் தான் கல்விப் புலத்துக்குள் அதிலும் குறிப்பாக நிறுவனப்படுத்தப்பட்ட அதிகாரம் இருக்குமிடத்தில் நாடகம் என்பது எப்போதும் அச்சத்துடனே அணுகப்படுகிறது. சமீபத்தில் அருள் ஆனந்தர் கல்லூரி ஏற்பாடு செய்திருந்த கு.அழகிரிசாமி குறித்த க...