Skip to main content

Posts

Showing posts from October, 2022

பெண் – பதிவிரதை X தடிக்கழுதை

  பெண் – பதிவிரதை X தடிக்கழுதை ஞா.குருசாமி ‘த டி க் கழுதை பாட்டு ’ என்று ஒரு நூல் . இதில் ‘ ஆண்பிள்ளை வீ ண்பிள்ளை ’, ‘ விலைமாதர் கு ம் மி ’ என்ற நூலும் உள்ளடங்கி இருக்கிறது . 1914 ஆம் வருடம் மதறாஸ் என் . சி , கோ ள் டன் (கோல்டன்?) அச்சியந்திர சாலையில் திருப்போரூர் டி கோபால் நாயகர் இந்த மூன்று நூல்களையும் ஒருங் கே பதி ப்பித் திருக்கிறார் .  அதற்கு முன்னால் 1905 வருடம் மயிலம் சுப்பிரமணியசுவாமிகளால் பார்வையிடப்பட்டு பார்த்தசாரதி நாயுடுவின் அச்சகத்தில் அச்சிடப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது. சிறுமணவூர் முனியசாமி முதலியார் இந்த நூல்களை எழுதியதாக த் தெரிகிறது . பதினெட்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தொடங்கி 19 ஆம் நூற்றாண்டில் மத்திய பகுதி வரை தனி யொரு மனிதனாக ஏராளமான நூல்களை எழுதியவராகவும் பதிப்பித்தவராக வும் தெரிகிறார். சிறுமணவூர் முனியசாமி முதலியார் (இனி முனியசாமி எனச் சுட்டலாம்). இவர் குறித்து வீ. அரசு க ட்டுரை ஒன்றை க் கூட எழுதியிருக்கிறார் . அச்சு பண்பாட்டில் முனியசாமி யின் பங்களிப் பை பதிவு செய்வதாக அந்த கட்டுரை அமைந்திருக்கிறது . நிற்க. 18 ,19 ஆம் நூற்றாண்டுகள...

ஆ.இரா.வேங்கடாசலபதி, எஸ்.வி.ராஜதுரை & வ.கீதா ஆகியோர்களின் இரண்டு நூல்களும் எனது பார்வையும்

  ஆ . இரா .வே ங்கடாசலபதி , எஸ்.வி.ராஜதுரை & வ.கீதா ஆகியோர்களின் இரண்டு நூல்களும் எனது பார்வையும்      ஆ . இரா .வே ங்கடாசலபதி பதிப்பித்த ‘வ.உ.சி.யின் சிவஞானபோத உரை’யை ஒரு தேவையின் பொருட்டு வாசிக்க நேர்ந்தது. அந்த நூலின் வழியாக அறிமுகமான அவரே எழுதிய ‘ திராவிட இயக்கமும் வேளாளரும் ’ என்று ஒரு நூலை வாசித்தேன் . அதில் வரும் வி வரணை களை விட அடிகுறிப்புகள் எனக்கு முக்கியமாகப்பட்டன . அ தனூடாகத் தேடிக் கண்டைந்த நூல்தான் ‘ தினமணி பார்ப்பனியத்தின் முகமூடி ஒரு விவாதம் ’   இந்நூலின் பழைய பெயர் ‘திராவிட தினமணியின் பார்ப்பனியம்’. இதை எஸ் . வி . ராஜ துரை, வி.கீதா ஆகியோர் இணைந்து தொகுத்திருக்கிறார் . இது 1990 களில் தினமணியில் இந்திரா பார்த்தசாரதி , எஸ் . ஆர் . என் . சத்யா , தமிழவன் x எஸ் . வி . ராஜதுரை , வ . கீதா ஆகியோ ர்களுக்கு இடையே நடந்த விவாதமாக இருக்கிறது. பார்ப்பனர் அல்லாதார் இயக்கத்தின் தொடக்கப் புள்ளி யாக வேளாளர்களான ( சைவர்கள் ) பேராசிரியர் பெ . சுந்தரனார் , பி . கனகசபை , ஜே . எம் . நல்லசாமி முதலி யோர் இருந்த போதும் 1927 - 29 கால கட்ட த்தில் பார்...